அரபிக்குதிரையால் ஏமாந்த ஏமாறாதவன்

ஏமாறாதவன் என்ற பெயரில் எழுதும் வலைப்பதிவரின் இந்த பதிவுக்கு என்னுடைய பதில் இது.)

வலைப்பதிவர் ஏமாறாதவன், நான் இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்றுள்ளதால், எனக்காக மிகவும் வருந்தியுள்ளார். பாவம்.

//பதிவர் திரு.சுல்தான் அவர்கள் சமீபத்தில் இரு பதிவுகளை தந்திருக்கிறார். சவுதிதான் இஸ்லாமா என்று எழுதினார். பின்னர், திருப்தி இல்லாமல் அதன் இரண்டாம் பாகத்தையும் போட்டார். (இதை போட இரவு முழுக்க ஆனதாம். ஏனென்றால், அவர் தரப்பு வாதங்கள் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை போலும்...)//
தேவையில்லாமல் இஸ்லாத்தை வம்புக்கிழுத்த ஒரு நண்பரின் பதிவுக்கு பதிலாக, என் முதல் பதிவை எழுதினேன். என் பதிவுக்கு அந்த நண்பர் தன் மறுப்பை பதிலாகப் பதிந்த பின், அதற்கு விளக்கமாக, அடுத்தொரு பதிவையும் அது சம்பந்தமாக வெளியிட நேர்நதது. ஏமாறாதவன் என்றால் இதற்கெல்லாம் வம்பு பேசத் தோன்றுமோ!

நான் ஏமாறாதவன் போல் நன்றாக எழுதத் தெரிந்த அறிவாளி இல்லைதான். தமிழில் வேகமாக தட்டச்சு செய்யவும் தெரியாது. இஸ்லாத்தை முழுதும் அறிந்தவனாக மார்தட்டிக் கொள்ளவுமில்லை. ஆதாரமில்லாத விடயங்களை எழுதினால், என் இஸ்லாமிய சகோதரனே என் தலையில் கொட்டுவான். அதனால் சில சமயம் தெரிந்தவர்களிடம் கேட்க நேரிடும் அல்லது தேட நேரிடும். பெரிய பதிவாகி விட்டதனால் தாமதம் ஆனது.

நான் குறிப்பிட்ட நேரம், என் உறங்கும் நேரத்தின் பெரும் பகுதி. இரவின் முழுமை என்பது நான் குறிப்பிட்ட நேரம்தான் என்பது ஏமாறாதவன் போன்ற அறிவாளிகளுக்கே வெளிச்சம்.

//திரு.சுல்தான் அவர்கள் மிகவும் முயன்று இஸ்லாமுக்கு அலங்காரம் செய்து அதன் ஈனங்களை மறைக்கப்பார்த்திருக்கிறார்.
இஸ்லாமின் கோட்பாடுகளின் கோரம் முஸ்லிம் அல்லாத எல்லோருக்கும் தெரியும்.//
இஸ்லாமிய கோட்பாடுகளின் அழகையும், மேன்மையையும், தமது கைகளாலேயே தம் கண்களை மறைத்துக் கொண்டவர்களாலும், தம் இதயங்களை பூட்டிக் கொண்டவர்களாலும் உணர முடியாதுதான். அவரது கைகளில் மறைத்து வைத்திருக்கும் ஈனங்கள்தான், இஸ்லாத்திலும் இருக்குமென நினைந்து, பரிதாபமாக ஏமாந்து நிற்கிறார் ஏமாறாதவன். பாவம். அவர் கண்களும் இதயங்களும் திறக்க இறைவன் அருளட்டும்.

அது போகட்டும்.

//இஸ்லாமிய பல்லாயிரக்கணக்கான அழுக்கின் ஒரு பாகத்தை திரு.சுல்தான் அவர்களின் சப்பைக்கட்டில் படித்தபோது சிரிப்பு வந்தது.//
உங்களுக்கு சிரிப்பு மூட்டிய பகுதிகளைப் பார்த்து, விளக்கம் சொல்லாமல் நீங்கள் மட்டும் சிரித்து, அதை மற்றவர்கள் மரைகழன்ற சிரிப்பாக யூகிக்க விடாதீர்கள். ஏமாறுவீர்கள் ஏமாறாதவன்!.

//அல்லாஹ் அரபிக்களை ஏன் இறைதூதராக தேர்ந்தெடுத்தார் என்று அல்லாஹ் சொல்வதை இந்த நல்ல மனிதர் பார்க்கவில்லை//
அல்லாஹ் என்ன சொன்னார் என்று தெரியாததால் ஏமாந்து விட்டீர்கள் ஏமாறாதவன்.
உலகத்தின் எல்லா பகுதிகளுக்கும் தன் தூதரை அனுப்பியதாகவும், அவனுடைய தூதுவர் வராத சமுதாயமே இல்லையென்றுமல்லவா சொல்கிறான். ஒவ்வொரு சமுதாயத்துக்கும் அவர்கள் பேசும் மொழி பேசக்கூடியவரையே தூதராக அனுப்பியதாக வேறு சொல்கிறான்.
பாவம் ஏமாறாதவன். இன்னும் கொஞ்சம் புரட்டுங்கள். நேர்வழி இன்னதென்று தெரியவும் கூடும்.

//ஒரு சவுதி பெண்ணை ஒரு பங்களாதேஷி கட்ட முடியுமா? இது குறித்து ஷரிய்யா என்ன சொல்கிறது என்று திரு.சுல்தான் அறிவாரா?//
அரபிகளுக்கு, அஜமியை (அரபியல்லாதவர்களை) விடவும், அதுபோல் அரபியல்லாதவர்களுக்கு, அரபியர்களை விடவும் எந்த மேன்மையுமில்லை. அவரவருடைய இறையச்சம்தான் மேன்மையை அறிவிக்கும் என ஷரீயா சொல்கிறது.
இறையச்சமில்லாத அழகான ஆண்மகனை விடவும், இறையச்சமுள்ள ஒரு அடிமை மேலானவன் என்றும் ஷரீயா சொல்கிறது.

அரபிகள் நமக்கு பெண் தராததற்கு காரணம் அப்பெண்களுக்குத் தேவையான வசதிகளைத் தர நம்மால் இயலாது என்பதால்தான். இந்திய மற்றும் பாகி, பங்காளி மக்கள் இஸ்லாம் என்ற பெயரில் செய்யும் அனாச்சாரங்களையும் அவர்கள் வெறுக்கிறார்கள். ஒவ்வொருவரும் தனக்கு அறிமுகமான, நாட்டில் சாதாரணமாக பழக்கத்திலுள்ள, தேவையானால் உடனே சென்று தட்டிக்கேட்கிற அல்லது ஆறுதல் தருகிற இடத்தில்தான் தன் பெண்ளைக் கொடுக்க விரும்புவர். வேறெந்தக் கட்டுப்பாடும் இல்லை.

இதெல்லாம் அரேபியாவில் மட்டுமில்லை, அமைந்தகரையில் உள்ள பெற்றோருக்கும் உள்ள நிலைதான். எல்லா நல்ல பெற்றோர்களும், தன் மகளுக்கு தான் கொடுத்த வசதிகளை விடவும் சிறந்த வசதிகளை தரக்கூடிய நல்ல மணமகனையே தேர்நதெடுக்க முயற்சிப்பர். திருமண வயதுடைய பெண் குழந்தைகள் உங்களுக்கு இருந்தால் அவர்களை ஏமாற்றமல் இருங்கள் ஏமாறாதவன்.

அரபிகளைக் கட்டுமளவுக்கு வசதிகளைப் பெற்றுள்ள நமது நாட்டவர்களும் தன் சுற்றத்திலேயே, தான் மிகவும் அறிந்தவர்களிலேயே, நாட்டில் சாதாரணமாக பழக்கத்திலுள்ளது மாதிரியே, தேவையானால் உடனே சென்று தட்டிக்கேட்கிற அல்லது ஆறுதல் பெருகிற இடமாகப் பார்த்துதான் மணமுடிக்கின்றனர்.

கண்ணைத் திறந்து கொண்டு பேசாமல் உங்கள் சுற்றத்திலேயே தேடுங்கள். நான் சொல்வது கொஞ்சம் புரியக்கூடும். புலம் பெயர்ந்தவர்களில், வேறு வழியில்லாமல், சில விதிவிலக்குகள் இருக்கும். அரபிகளிலும் அது அப்படித்தான்.

என் ஊர் லெப்பைக்குடிக்காடு. எனது ஊரில், எங்கள் தெருவில் வசித்த ஒரு முஸ்லீமுக்கு தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தவர் துபையில் உள்ள அரபி. அந்த என் ஊர் சகோதரருக்கு பெண் பிறந்து, அதற்கும் திருமணமாகி, அது சமீபத்தில் குழந்தையும் பெற்று விட்டதாக கேள்வி. அவ்வளவு பழங்கதை இது. இன்னும் அரைத்த மாவையே அரைத்து..... ஏமாந்து..... அலுக்க வில்லையா? ஏமாறாதவன்!.

//இஸ்லாம் அரேபியர்களின் உலக ஆதிக்கத்திற்கான ஒரு இயக்கம் என்பது வெளிப்படை. இஸ்லாமிய மதத்தை விருப்பு வெறுப்பின்றி ஆராயும் எல்லோருக்கும் இது புரியும். அரேபியர்கள் உலக நாட்டாமைக்காக ஏற்படுத்திய ஒரு சூழ்ச்சியே இது என்று தெரிந்ததே//
இனிமேலாவது காய்தல் உவத்தலின்றி இஸ்லாத்தை ஆராய முற்படுங்கள். அதனால் நேர்வழி இன்னதென்று ஏமாறாமல் அறிய வாய்ப்பும் கைவரக்கூடும் ஏமாறாதவன்.

//இஸ்லாமிய மத ஆராய்ச்சியாளர்களில் அண்வர் ஷேக் அவர்களை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவர் நூல்களை படிக்காமல் இஸ்லாமியர்கள் இருக்க கூடாது என்று கருதுபவன் நான். திரு. சுல்தான் அவர்களைப்போல கண்களை மூடிக்கொண்டிருந்த வேளையில் என் கண்களை திறந்தவர் அவர்//
அன்வர் ஷேக்கை நான் படிக்கவுமில்லை. தற்போதைக்கு ஆர்வமுமில்லை. தேவையேற்படும் போது சொல்லி, வாங்கிக் கொள்கிறேன்.

உங்களுக்கு அம்பேத்கர், அம்பேத்கர் என்று ஒருவர் இருந்தார் தெரியுமா?. தற்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர்களோடு தலைவர்களாக மேடையில் படம் காட்டப்படுகிறதாம்!!. அவர் எழுதிய 'Riddles of Rama & Krishna' படித்துக் காட்டட்டுமா? அல்லது பதிவில் எழுதிக் காட்டட்டுமா?

இதை விடவும் சிறப்பாக 'Oh You Hindu Awake'என்ற தலைப்பில் 'Dr. Chatterjee. M.A., Ph.D. (USA)' அவர்கள் எழுதிய புத்தகம் இருக்கிறது. அது, 'ஓ! இந்துக்களே! விழித்தெழுங்கள்' என்று தமிழிலும் உள்ளது. வாசித்துக் காட்டட்டுமா? அல்லது பதிவுகளில் தொகுதி வாரியாக எழுதிக் காட்டட்டுமா?

இந்தப் புத்தகங்கள், உங்களைப் போன்ற பல பேரின் மூடியிருந்த அறிவுக் கண்ணைத் திறந்ததாம். நீங்களும் அறிவைப் பலப்படுத்திக் கொள்ளவும், கண் திறக்கவும் ஆர்வமாயிருந்தால் சொல்லுங்கள். தமிழிணைய அனுமதியும் பெற்றுத் தாருங்கள். படிக்க, என் கண்களே கூசுகிறது.

உங்களுக்கு இறைவன் கொடுத்த அறிவைப் பயன்படுத்துங்கள். நீங்களே ஆராய முற்படுங்கள். திருக்குர்ஆனும், ஹதீஸ் நூல்களும் தமிழிலேயே கிடைக்கின்றது. இராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை, மனுஸ்மிருதி முதலிய புத்தகங்கள் கூட தமிழிலும் உள்ளதாம். உதவிக்கு நல்லெண்ணத்தில் எழுதப்பட்ட அறிஞர்களின் ஆக்கங்களைப் பார்வையிடுங்கள். இது போன்ற திமிர் புத்தகங்களை (just for curiosity) படித்தவுடன் குப்பைக்குத் தள்ளுங்கள். கண்டதையும் பார்த்து ஏமாந்ததால்தான் இப்படி ஏமாறாதவன்(!) ஆகி விட்டீர்கள்.
இனியாவது சரியானதைப் படித்து, சரியான முறையில் விவாதியுங்கள். நேர்வழி பெறலாம்.

//பதிவில் எங்கேயோ போய்விட்டேன்//
ஆமாம். உங்களுடன் நானும்.

//திரு.சுல்தான் அவர்கள் இதைப்பார்த்து அதிர்ந்து போனால், மேலே இந்த ஹதீஸையும் பார்க்க வேண்டுகிறேன்//
ஏமாறாதவன் ஆனால் ஏமாந்து விட்டீர்கள்.
இதைப்பார்த்து அதிர்ந்து போக என்ன இருக்கிறது.?!!

முதலில் அறிந்து கொள்ளுங்கள். இஸ்லாம் என்பது இறைவனிடமிருந்து வந்த திருக்குர்ஆன் போதனைப்படியும், திருநபி அவர்களின் சொல், செயல், ஆங்கீகாரம் ஆகியவற்றிலிருந்தும் பெறப்படுவதுதான்.

நீங்கள் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளது, நபி குழந்தையாக இருக்கும்போது, யாரோ ஒரு பெண் கண்ட கனவும், அதன் படி நடந்தவுடன் கிடைத்த மழையையும் பற்றி இருக்கிறது. அந்தப் பெண் குறிப்பிடும் நபியுடைய பாட்டனார் வெள்ளை நிறத்தவராயிருப்பார் என்று அடையாளமாகச் சொல்கிறார்.

இப்போது இன்னொரு முறை நீங்கள் எழுதியதை நீங்களே படித்துப் பாருங்கள். ஏன் எழுதினோம் என்று உங்களுக்கே கூச்சமாயிருக்கும். பாவம் ஏமாறாதவன்! உங்கள் மீது கழிவிரக்கம்தான் ஏற்படுகிறது.

//வேலூரில் ஒரு இஸ்லாமிய மாநாட்டுக்கு (ஒரு 200 பேர் இருக்கும்..) போயிருந்தேன்//
உங்களைப் போன்ற எண்ணமுள்ளோரை 'ஏதோ சொல்லப் போகிறார்கள். நாமும் போய்ப் பார்ப்போமே, கேட்போமே என' ஈர்த்ததே அந்த மாநாட்டின் வெற்றி என்றும் சொல்லலாம்.
அவர்கள் எந்த மாதிரியெல்லாம் விளம்பரம் செய்தார்கள் என்று சொன்னால், அடுத்த எங்கள் கூட்டத்துக்கு அந்த முயற்சியும் செய்கிறோம். உங்களை போன்ற பத்து பேரை திருத்த முடியுமா என்று பார்க்கலாம்.

//சுல்தான் அவர்களே, இந்த இன வெறியை பாருங்கள். பாப்பான் தோத்தான் இங்கு!!//
நானும் முதலில் விபரம் தெரியாமல் 'பார்ப்பனர்' என்றுதான் எழுதினேன். பாப்பான் என்றால் அவமரியாதை பார்ப்பனர் என்றால் அவ்வாறில்லை என நினைத்தேன். அதன் பின் ஒரு நண்பர் திருத்தினார். அவர்களை பிராமணர்கள் என்றழைப்பதையே அவர்கள் சரி காண்கின்றனர் என்று.
அதன் பின்னர் அவ்வாறே எழுதுகிறேன். தேவையில்லாமல் சிலருடைய மனதை வருந்தச் செய்வதெதற்கு?
அது சரி. நீங்களே பாப்பான் என்று எழுதுகிறீர்களே. பரவாயில்லையா?.

//இஸ்லாமிய கலீபாவுக்கு ஏற்ற தகுதிகளை இஸ்லாமிய சட்டத்தின்படி பார்ப்போமா...//
இதில் நீங்கள் முக்கியமென்று தடித்த எழுத்துக்களில் போட்டுள்ளதும் அதற்கு முன்னுள்ள வரியினதும் பொருள்
நபியவர்கள். தன்னுடைய உரையில்
உலக முடிவு நாள் வரும் வரை
1. இஸ்லாம் இருந்து கொண்டேயிருக்கும் அல்லது
2. 12 கலீபாக்கள்தான் வருவார்கள் அவர்கள் குறைஷி வம்சத்தவராயிருப்பர்.
என்று கூறினார்கள்.
இந்த 2வது விஷயத்தை கீழுள்ள மாதிரியும் எடுக்கலாம். அரபி தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெளியுங்கள். அதாவது உலக முடிவு நாள் வரை 12 குறைஷிக் கலீபாக்கள்தான் தோன்றுவர்.

இந்த மூன்றில் எதை எடுப்பது?. எதை எடுத்தாலும் அதற்கு கூடுதல் ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
உலக முடிவு நாளுக்கு சில காலம் முன்பு வரை இஸ்லாம் இருக்கும் என்று பல ஹதீஸ் உள்ளது. அதனால் அதை எடுத்தக் கொள்வோமே.

எனவே, நீங்கள் எழுதிய
//பெண்களை இழிவுபடுத்தும் இந்த சட்டம் ஒருபக்கம் இருக்கட்டும். அடிமைத்தனத்தை இன்றும் தூக்கி வால் பிடிக்கும் இந்த சட்டம் இருக்கட்டும். ஆனால், இஸ்லாத்தை ஆள ஒரு அரபி (அதுவும் முகம்மதுவின் சாதிதான் வேண்டுமாம்...) வேண்டும் என்பது எதற்காக//
என்பதெல்லாம் அபத்தங்களின் கூட்டுக்கலவை என்றாகி விட்டது. பாவம் சார் நீங்க. அடுத்த தடவை நிறைய home work செய்யுங்க. உங்கள் மூலம், அதாவது உங்களுக்கு நான் பதிலெழுதுவதன் மூலம், பல பேர் பயனடைய வாய்ப்பாயிருக்கும்.

//சவுதியின் தெருக்களில் குப்பை வாரும் ஆயிரக்கணக்கான அரபியல்லாத முஸ்லிம்கள் எப்போதுமே அரேபியர்களின் மலங்களை அள்ளுவதே அல்லாஹ்வுக்கு பிரியமானது.//
பெட்ரோல் வருவதற்கு முன், அவன் மலத்தை அவன்தான் அள்ளினான். இப்போது அவனிடம் இருக்கும் வசதிக்கு அது அவசியமில்லாமல் போய் விட்டது.
ஆனால் பாருங்கள். சொகுசுக் கழிவறைகளில் மலம் சுத்தப்படுத்திய அவனும், அவனுடைய முதலாளியும் உயர்வு தாழ்வில்லாமல் ஓரே தட்டில் உணவருந்துவதையும் (நோன்பு காலங்களில் சவூதிப் பள்ளிவாயில்களில் சாதாரணமாகக் காணக்கிடைப்பது), தொழும்போது உயர்வு தாழ்வின்றி அவன் தோளோடு அவன் தோளைச் சேர்த்து, அவன் காலோடு அவன் காலை உரசி நின்று தொழும் அதிசயத்தை. இதைத்தான் இஸ்லாம் உலகுக்குச் சொல்லி, செயல்படுத்துகிறது.

வசதி குறைந்தால், நாளை அவனும் சுத்தம் செய்ய நேரிடும். யாருக்காகவும் (அல்லது ஒரு குழவினருக்கு) இவ்வேலையை இஸ்லாம் ஒதுக்கி வைத்துள்ளது எனக் கூறுவது அயோக்கியத்தனமானது.
உங்களின் இந்த வாதம், தன் தலை முழுவதிலும் அப்பி இருக்கும் மலத்தை மறந்து (அல்லது மறைக்க), உன் காலின் பின்புறம் மண் ஒட்டியிருக்கிறதென்று ஏளனம் செய்வதைப் போன்றுள்ளது.
ஏமாறாதவனாய் இருந்தால் போதாது. மற்றவர்களை ஏமாற்றதவானாகவும் இருக்க வேண்டும் நண்பரே.

//அல்லாஹ் அரேபியர்களை மற்ற இனத்திரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்' என்று சொன்னதாக ஹதீஸ்களில்//
எந்த ஹதீஸ் புத்தகம். ஆங்கிலத்திலுள்ள சட்டம் நான்கில் பாதியைப் போட்டு மீதியை விழுங்கியது போல் தோன்றுகிறது.
அரபியல்லாதவரைவிட அரபிக்கு எந்த உயர்வுமில்லை, இறையச்சம் கூடுதலாய் இருந்தாலே தவிர. அதே போல, அரபியை விட அரபியல்லாதவருக்கும் எந்த உயர்வுமில்லை இறையச்சம் கூடுதலாய் இருந்தாலே தவிர என்ற கருத்தில் வரும் நபிமொழி, தெளிவாக மேற்கண்ட கூற்றை மறுத்துக் கொண்டிருக்கிறது.

//இதனால், இந்த அரேபிய இனவெறியை கொண்ட இஸ்லாம் ஹிட்லரின் நாஸியியக்கத்தை ஒத்தது//
எது? ஒவ்வொரு சமுதாயத்துக்கும் நபிமார்களைத் தேர்தெடுக்கும்போது அந்த சமுதாயத்தின் நல்ல குலத்திலிருந்து (தலையிலும், மூக்குச்சளியிலும் பிறந்ததனால் வந்த உயர் குலம் இல்லை. தான தர்மங்கள், மற்றவர்களுக்கு உதவுதல் போன்ற பண்பாட்டில் உயர் குலம்), நல்ல மனிதரை இறைவன் தேர்நதெடுப்பதாக நபி அறிவிக்கிறார்கள். இதில் என்ன தவறிருக்கிறதென்பதை ஏமாறாதவன்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

இதுதான் ஹிட்லரின் நாஜியிசத்தையும், யூதர்களின் இனவெறியையும் ஒத்ததா? படிப்பவர்கள்தான்
ஏமாறாதவனுக்கு சொல்லித் தர வேண்டும்.

//குரேஷி அரேபியர்களை விரோதிக்கும் எல்லோரையும் அல்லாஹ் தீர்த்துவிடுவாராம். அல்லாஹ்வை அரேபியருக்கு சண்டியர் வேலை செய்ய விட்டு விட்டார்கள்.//
இஸ்லாமிய சரிதத்தை கொஞ்சமும் புரட்டிப் பார்க்காமல், யாரோ எடுத்த வாந்தியை, விழுங்கி, இங்கே துப்பியிருக்கிறீர்கள்.

நீங்கள் ஆங்கிலத்தில் எழுதியதைப் பாருங்கள். கஹ்தான் என்பவரும் அரபிதான் ஆனால் குறைஷிக் குலத்தவரில்லை. இது அரபியருக்கும், அரபியரல்லாதவருக்கும் சொல்லப்பட்டதல்ல. குறைஷிக் குலத்தவர்க்கும் மற்ற அரபிகளுக்கும் சொல்லப்பட்டது.
இஸ்லாத்தின் ஆரம்ப காலங்களில் உயிர், உடைமை, மானம் எல்லாவற்றையும் கூடுதலாக அர்ப்பணித்தவர்கள் குறைஷிகள். அதோடு நிர்வாகத் திறமையும் கைவரப் பெற்றிருந்தார்கள்.
அன்சாரிகளின் தியாகத்தை நான் குறைத்து மதிப்பிடுவதாக பொருளில்லை. ஆனால் குறைஷிகளின் தியாகம் பல மடங்கு உயர்ந்தது. அத்துடன் இஸ்லாமிய விளக்கங்களை கூடுதலாக அறிந்தவர்களாகவும், அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்டவர்களாகவும், இறைவனால் சொர்க்கத்துக்கு உறுதியளிக்கப்பட்டவர்களில் கூடுதலாகவும் இருந்தார்கள்.

தென் ஆப்ரிக்காவில் கறுப்பின மக்களுக்காக அதிக தியாகங்கள் செய்த நெல்சன் மண்டேலாவுக்குதான் அதிபர் பதவி தரப்பட்டது. அதுவே எல்லா மக்களின் எதிர்பார்ப்புமாயிருந்தது. இதுதான் உலக இயல்பு. இதுதான் இயற்கை.

(நீங்களும் இலங்கையைச் சேர்ந்தவரா? பொதுவாக சண்டியர் என்ற பதத்தை இந்தக்கருத்தில் இந்திய தமிழர்களாகிய நாங்கள் உபயோகிப்பதில்லை. சேலத்தைப் பற்றியெல்லாம் நீங்கள் எழுதியுள்ளதால், இங்கு நான் சாதாரணமாக இந்தியத் தமிழருக்கு பதிலளிப்பதாகவே எழுதியுள்ளேன்.)

//ஹஜ் என்ற ஒரு அபத்தத்தை ஏற்படுத்தியதும் அரேபியர்களின் பொருளாதாரத்தை மேன்படுத்தவே. (அப்போது பெட்ரோல் இருப்பது தெரியாது...).//
ஹஜ் என்பதை அபத்தமெனச் சொல்வது ஈனத்தனமான, கொச்சை வார்த்தை. வன்மையாக கண்டிக்கிறேன். ஒவ்வொரு வருடத்திலும் குறைந்தது இரண்டரை மில்லியன் முஸ்லீம்கள், அதை தங்களின் வாழ்க்கையில் கிடைத்த, கிடைத்தற்கரிய பாக்கியமாக, உயர்வாக எண்ணி அங்கே செல்கின்றனர். மற்றவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு தாருங்கள்.

சரி. உங்கள் கேள்விக்கு வருவோம்!.
அப்போதுதான் பெட்ரோல் இருப்பது தெரியாது!. இப்போதுதான் தெரிந்து, வருமானம் தழைக்கிறதே.! வருடா வருடம் ஹஜ்ஜூக்காக ஆட்கள் வந்து, அவர்கள் வழிகாட்டு முறைகளை மீறி, மரணங்களைச் சந்தித்து, அதனால் அந்நாட்டுக்கு அவப்பெயர் வந்து.....,
இதெல்லாம் இல்லாமல், ஒவ்வொரு வருடமும் புதுப்புது ஏற்பாடுகளைச் செய்யாமல், ஒரு தொந்தரவுமில்லாமல் மூடி விடலாமே.

அந்த வருமானத்துக்கு பதில் பெட்ரோலை கொஞ்சம் கூடுதலாய் இறைத்தால் போகிறது. அல்லது துபை போல் தங்கள் நாட்டையும் வணிக மையமாக்குவதன் மூலம், வருமானத்தை பெருக்கிக் கொண்டு இருக்கலாமே.

ஏன் அவ்வாறு செய்வதில்லை என்பதை நல்ல கண்களுடன் பார்க்கப் பழகுங்கள். திருந்த வாய்ப்பிருக்கிறது.

//இதை திரு.சுல்தான் அவர்கள் சிந்தித்து இந்த அடிமை கோட்பாட்டை தகர்த்து எறியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.//
இஸ்லாம் என்பது நியாயமான, நீதியான, அனைவரையும் சமமாகப் பாவிப்பதாக உள்ள வாழ்க்கைத் திட்டம். ஆதலால், நீங்கள்தான், பிறந்து விட்டதால் போற்றுகின்ற, இதுவரை மாற்று வழியைப்பற்றி சிந்திக்கவே மறுத்த, உங்கள் எண்ணக் கோட்பாட்டை தூக்கி எறிய முயற்சிக்க வேண்டும் நண்பரே. எது எல்லா மனிதர்களுக்கும் நன்மை பயக்குமோ அதையே நாமிருவரும் தேர்ந்தெடுப்போம்.

உங்களுக்கும் எனக்கும் 'நேர்வழி இன்னதென்று அறியவும் - அதன்படி நடக்கவும், தீயது எது என்று அறியவும் - அதை விட்டு விலகவும்' அந்த ஒப்புவமையற்ற இறை அருளட்டும். நன்றி.

Posted by சுல்தான் at 12:48 PM

Labels: அரபிக்குதிரை, ஏமாந்த ஏமாறாதவன்


13 comments:
தப்பிப் பிறந்தவன்> said...
//..உங்களின் இந்த வாதம், தன் தலை முழுவதிலும் அப்பி இருக்கும் மலத்தை மறந்து (அல்லது மறைக்க), உன் காலின் பின்புறம் மண் ஒட்டியிருக்கிறதென்று ஏளனம் செய்வதைப் போன்றுள்ளது.
..//

சரியான பதிலடி கொடுத்திருக்கிறீர்கள் சகோ. சுல்தான் அவர்களே.

யார் யாருடைய மலத்தையெல்லாம் ஏமாந்து போய் தலையில் திணிச்சு வச்சுக்கிட்டு பேர மட்டும் ஏமாறாதவன் -ன்னு வச்சுக்கிட்டு பேஸ்த் அடிச்ச மாதிரி நிற்கிறார் இந்த நபர்.

இஸ்லாத்தை பார்த்து 'ஏமாறாத அதி புத்திசாலி' நண்பரே, நீங்கள் எந்த கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறீர் என்று சொல்லத் தயாரா? இஸ்லாத்தை விட நீர் ஏற்றுக் கொண்ட கொள்கை எப்படி உசத்தி என்பதையும் சொல்ல முடியுமா? வெளியில கவுரமா சொல்லிக்கிற மாதிரி கொள்கைதானே அது?

இந்த தகவல்களையெல்லாம் கொஞ்சம் சொன்னேள்னா உங்க தலையில அப்பி இருக்குறது என்னன்றதை நாங்களும் கன்பர்ம் பண்ணிக்கலாமோல்லியோ?

-தப்பிப் பிறந்தவன்
(எங்க நாட்டில 85%த்தினருக்கு கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு எனக்கு பிறப்பிலேயே கிடைத்ததால்..)

3:18 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி தப்பிப்பிறந்தவன்

3:22 PM
சுல்தான் said...
லக்கிலுக் கூறியது. (கை தவறி ரிஜெக்ட் ஆயிடுச்சு)
ஏமாறாதவன் போன்றவர்கள் காலத்துக்கும் இப்படித்தான் பேசுவார்கள். உங்கள் பண்பான பதில் அவர்களது மழுங்கிப்போன மூளைக்கு ஏறப்போவதில்லை. தயவுசெய்து அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள்

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி லக்கிலுக்.
அவர் மாறினாலும், மாறாவிட்டாலும், அவர் போன்ற எண்ணமுள்ளவர்களுக்கு கருத்துக்கள் போய்ச்சேருமே. நன்றி

3:29 PM
அழகு said...
பாவம் தமிழ்மண அனாதை!

3:55 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி அழகு

3:57 PM
Anonymous> said...
Mr. emarathavan, you are wasting your time chaning typical muslim mentality. I had been in Saudi for many years I understood this long ago. Arabs are very very egoistic people. Read my blog for more info

10:34 PM
முஸ்லிம் said...
இஸ்லாத்தை ஆராய்ந்து எதுவும் கிடைக்காமல் ஏமாந்தவன் இப்போ அன்வர் ஷேக்கை அறியாதவர் யாரும் இருக்க முடியாதுன்னு முஸ்லிம்களை ஏமாத்த கிளம்பி இருக்கிறார்.

என்னத்தை சொல்ல..... எமாந்தவனின் மிக மட்டமான பிதற்றல்களையும் மிக நேர்த்தியாக எதிர் கொண்டு பதிலடி தரும் சுல்தான் தொடர்ந்து எழுதுங்கள்.

10:15 AM
சுல்தான் said...
வருகைக்கு நனறி அனானி. உங்கள் பிளாக் முகவரி தரவில்லையே!

வருகைக்கு நன்றி முஸ்லீம் அவர்களே. தங்களின் தொடர்ந்த ஊக்கப்படுத்துதல், எம்மை தொடர்ந்து எழுதத் தூண்டுகிறது. நன்றி

2:21 PM
சுவனப்பிரியன் said...
//உங்களுக்கும் எனக்கும் 'நேர்வழி இன்னதென்று அறியவும் - அதன்படி நடக்கவும், தீயது எது என்று அறியவும் - அதை விட்டு விலகவும்' அந்த ஒப்புவமையற்ற இறை அருளட்டும். நன்றி.//

Best comments
Suvanappiriyan

5:36 PM
சுல்தான் said...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுவனப்ரியன்.

12:40 PM
ஆப்படிப்பவன்> said...
//சுல்தான் said...
வருகைக்கு நனறி அனானி. உங்கள் பிளாக் முகவரி தரவில்லையே!
//
அது தெரியாத உங்களுக்கு. காய்கறி.ப்லோக்ஸ்பாட்.காம்.

2:12 PM
asalamone said...
சுல்தான் அவர்களுக்கு,

உங்களுடைய ஒரு பதிவில், இரவு முழுவதும் இருந்து,கண் முழித்து,அடுத்த நாள் வேலைக்கு செல்லும் நிலைமையில் இருப்பதாகவும் இருக்கும் நிலைமயில் நீங்கள் எழுதியதைபார்த்து, இந்த சுல்தானை இத்துடன் பதிவு எழுதுவதேயே ஓரம் கட்டி விடலாம் என்று தான் நண்பர் ஏமாறாதவன் காட்டமான சொல்களை சொல்லி ஓரம் கட்டி விடலாம் என்று நினைத்து கடைசியில் ஏமாறாதவன் இப்பம் ஏமாந்து நிற்கிறார்.

வல்ல இறைவன் நாட்டம் இருந்தால் ஏமாறாதவன், இனியும் ஏமாறும் கூட்டதில் இருந்து தன் கொள்கைகளை மாற்றிக்கொள்வார் என நினைக்கிறோம்.

2:41 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி அஸலம்ஒன்.

2:58 PM
நண்பன் said...
சுல்தான்,

இந்த அன்வர் ஷேக் என்பவர், தன் அரைகுறை புரிதல்களுடன், எதையாவது எக்குத் தப்பா சொல்லி வைத்தால், பிரபலமாகி விடலாம் என்ற எண்ணத்துடன் ஒரு பத்து வருடங்களுக்கு முன்பாக ஒரு புத்தகம் எழுதினார் - "Islam - An Arab National Movement" என்ற பெயரில்.

இந்த அன்வர் ஷேக்கின் தாத்தா ஒரு காஷ்மீரி பண்டிட். அவர் காலத்தில் முஸ்லிமாக மாறினார். பின்னர் தந்தையர் காலத்தில் அவர்கள் புலம் பெயர்ந்து இங்கிலாந்து சென்று விட்டனர். அவர் முழு மூச்சாக வியாபாரத்தில் ஈடுபட்டு, நன்றாக சம்பாதித்த பின்னர், வியாபாரத்தை விட்டு விட்டு, புத்தகம் எழுதத் தொடங்கினார். கொழுத்த பணம் இருந்தால், ஏதாவது ஏடாகூடம் செய்து புகழ் பெற வேண்டும் என்ற நினைப்புடைய மேலை வர்க்க சிந்தனை புகுந்த அவர் மனதில், நியாயமான உணர்வுகள் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

இஸ்லாத்தை ஒரு அரபிய இயக்கம் என்று தலைப்பிட்டு அவர் வைக்கும் வாதங்கள் எல்லாம் பித்துக்குளித்தனம் தவிர வேறில்லை.

அரபியர்களை முதன்மைப் படுத்த வேண்டும் என்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட மதம் இஸ்லாம் என்று கூறும் அவர், உலகப் பிரசித்தி பெற்ற, நபி பெருமானாரின் இறுதி உரையைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அத்தனை ஞானம் மிக்கவர்!!!

இதே அரபிகளிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக, எத்தனை துயரங்களை முஸ்லிம்கள் அனுபவித்தனர் என்ற தகவல்கள் அற்றவர்.

இஸ்லாமியர்கள் நாடுகளின் எல்லைகள் கடந்து சிந்திக்கின்றனர் - மக்காவை நோக்கித் தொழுகின்றனர் -- காரணம் அரபியர்கள் வாழும் நாட்டை முன்னிலைப் படுத்தவே என்கின்றனர்.

நாடுகளின் எல்லைகளைக் கடந்து சிந்திப்பது இஸ்லாத்தில் மட்டுமல்ல - எல்லா உயர்ந்த நாகரீகங்களிலும் நடந்திருக்கிறது. யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற பாடலை எழுதியவர்கள் அரபிகள் அல்ல, சாட்சாத் நம் தமிழினத்தவர்களே.

உலகம் முழுமையும் ஒரு குடையின் கீழ், என்ற கொள்கையுடன் முயன்ற போர் வீரர்கல் எத்தனை பேர் - மாவீரன் அலெக்ஸாண்டர் என்று கொண்டாடும் வீரன், எல்லைகள் தாண்டிய சிந்தனை, கோடுகளற்ற வரைபடம் இவற்றிற்காகத் தானே முயன்றான்? கடல் சுற்றி, இன்னல் பட்டு, துயரம் மேற்கொண்டு, யூரோப்பியர்கள், கண்டம் கண்டமாக தேடியலைந்தது எதற்காக?

அதை விடுங்கள் - இன்று Global Village என்று உலகை சுருக்கிக் கொண்டவர்கள் யார்? இன்று மாய்ந்து மாய்ந்து எழுதும் இவர்கள் இந்த க்ளோபல் வில்லேஜ் என்ற தத்துவத்தை மாய்ந்து, மாய்ந்து தூக்கிப் பிடிக்கிறார்கள். அவர்கள் டாலர்களை மாற்றி, ரூபாய்களாக விசிறியடிக்கும் பொழுது, இவர்களுக்கு இந்த உலகளாவிய சிந்தனைகள் பிடிக்கின்றன.

இப்படி, எந்த தர்க்க விவாதங்களும் இன்றி, வெறும் பரபரப்பிற்காக, தற்புகழ்ச்சிக்காக எழுதப்பட்ட புத்தகம் - சீந்துவாரின்றி போன புத்தகம். அழுகலைத் தேடி அலையும் பறவை போல், இவற்றையெல்லாம் தேடியெடுத்து வெளியிட என்றே இந்துத்வம் இருக்கையில் இது ஏதோ ஒரு அற்புதமான புத்தகம் என்ற பிரம்மையை எழுப்புகின்றனர் இவர்கள்.

1985லிருந்து இன்று வரை, சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதரபாத், புதுடில்லி, இப்பொழுது துபாய், ஷார்ஜா, என நான் ஏறி இறங்காத புத்தகக் கடைகளே கிடையாது. இயல்பாகவே விமர்சன புத்தகங்களைத் தேடி வாங்குவது எனது பழக்கம் -
தடை செய்யப்பட்ட Salman Rushdieன் The Satanic Verses மற்றும் தஸ்லிமா நஸ்ரின் - Lajja இவற்றையெல்லாம் கூட வாங்கிப் படித்து விட்டேன். (ஸாடானிக் வெர்ஸஸ் புத்தகத்தை என் மனைவியின் தோழி ஒருவர் அமெரிக்காவிலிருந்து திரும்ப வரும்பொழுது வாங்கி வரச் செய்து,) பாதி படித்ததும் குப்பை என்று திருப்பிக் கொடுத்து விட்டேன்.

ஆனால் இந்த அன்வர் ஷேக் எழுதிய புத்தகம் எங்கும் எனது கண்ணில் பட்டதில்லை. இன்னும் சொல்லப் போனால், புத்தக வியாபாரிகளுக்கு அவர் ஒரு பொருட்டே அல்ல. இந்துத்வ வாதிகளின் கண்களுக்கு மட்டுமே இனியவராக தெரிகிறார்.

மேலும்,

எதற்கெடுத்தாலும், அரபிப் பெண்களை கல்யாணம் பண்ணித் தருவார்களா என்று பெண்களை விலை பேசத் துடிக்கும் இவர்கள் இதன் மூலம் பெண்ணியத்தை எத்தனை கேவலப்படுத்துகின்றனர் என்று அறியவில்லை.

சமத்துவம் என்பதற்காக பெண்களைப் பண்ட பரிமாற்றம் செய்து காட்ட வேண்டும் என்பது எத்தனை இழிந்த புத்தி என்பதை இவர்கள் உணர வேண்டும். எத்தனையோ வழிகளில் சமத்துவத்தைப் பற்றி வாதாட வழி இருக்கையிலே, பெணகளைத் தருவார்களா, என்று கேட்டு, பெண்டாளத் துடிக்கும் இவர்கள் தங்கள் ஆண்மையை இழிவுபடுத்திக் கொள்கிறார்களே அன்றி, அங்கு சமத்துவம் இல்லை.

இதே கேள்வியை அவர்களை நோக்கித் திருப்பிக் கேட்க முடியும், உடன் பிறந்த உள்ளூர்க்காரனிடத்திலே உங்கள் வீட்டுப் பெண்ணை கொடுக்க முடியாத சூழல் இருக்கையிலே, வேற்று ஒரு தேசத்திலே, வேறு வேறு கலாச்சாரப் பின்னணி, உணவு, உடை பழக்கவழக்கங்களைக் கொண்ட மக்கள் பெணகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறார்கள்? (பெண்கள் வாசிக்க நேர்ந்தால், மன்னிக்கவும். இவர்களிடத்தில் இப்படித் தான் பேச முடிகிறது.)

என்றாலும், எத்தனை நிதானம் உங்களிடம்!!!

பாராட்டுகள்

அன்புடன்
நண்பன்

1:03 AM
சுல்தான் said...
அன்பின் நண்பன், தங்களின் வருகைக்கு நன்றி.
தங்களின் மறுமொழியிலிருந்து பல தகவல்களை அறிய முடிந்தது.
என்னுடையதில் இன்னின்ன சிறப்புகள் என்று சொல்வது ஒரு ரகம்.
தான் வைத்திருப்பதில் சொல்ல நன்மையான காரியங்கள் ஏதும் இல்லாமல் (அல்லது தெரியாமல்), உன்னுடையதில் இது தவறு என்று ஒரு புரிதலும் இல்லாமல், தப்பும் தவறுமாகச் சொல்லும் விஷமிகள் இன்னொரு ரகம்.
எல்லாம் அறிந்ததுதானே நண்பனே!.
தங்களின் பாராட்டுக்கும் கருத்துகளுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி.

5 comments:

Jafar ali said...

நிதானமான பதில்! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!

Unknown said...

வருகைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி ஜாபர் அலி அவர்களே.

Anonymous said...

//அரபிகள் நமக்கு பெண் தராததற்கு காரணம் அப்பெண்களுக்குத் தேவையான வசதிகளைத் தர நம்மால் இயலாது என்பதால்தான். இந்திய மற்றும் பாகி, பங்காளி மக்கள் இஸ்லாம் என்ற பெயரில் செய்யும் அனாச்சாரங்களையும் அவர்கள் வெறுக்கிறார்கள். ஒவ்வொருவரும் தனக்கு அறிமுகமான, நாட்டில் சாதாரணமாக பழக்கத்திலுள்ள, தேவையானால் உடனே சென்று தட்டிக்கேட்கிற அல்லது ஆறுதல் தருகிற இடத்தில்தான் தன் பெண்ளைக் கொடுக்க விரும்புவர். வேறெந்தக் கட்டுப்பாடும் இல்லை.//

இத்துப்போன சப்பைக்கட்டு.

1. அதெப்படி நம்மூரில் இருப்பவர்கள் எல்லோருமே ஏழைகள் என்ற முடிவுக்கு வந்தீங்க? அஸீம் ப்ரேம்ஜியோட மகன்களுக்கு அரபிப் பெண்களைக் கேட்டாலும் வசதி பத்தாதோ?

2. ஏன், வளைகுடா நாடுகளிலிருந்து 60 வயது அரபுக் கிழவர்கள் நம் நாட்டிற்கு வந்து இளம் பெண்களை மணம் புரிகிறார்களே. இத்திருமணங்களுக்கு மேற்சொன்ன விதி பொருந்தாதோ?

பின்னூட்டத்தை வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்.

கேள்வி கேட்பவன்.

Unknown said...

வருகைக்கு நன்றி அனானியாக வந்துள்ள கேள்வி கேட்பவன்.
முகமூடி இல்லாமலேயே வரலாம். அழகான கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இஸ்லாத்தில் உண்டு.

//இத்துப்போன சப்பைக்கட்டு.//
எது இத்துப்போன சப்பைக்கட்டு நண்பரே.

//1. அதெப்படி நம்மூரில் இருப்பவர்கள் எல்லோருமே ஏழைகள் என்ற முடிவுக்கு வந்தீங்க? அஸீம் ப்ரேம்ஜியோட மகன்களுக்கு அரபிப் பெண்களைக் கேட்டாலும் வசதி பத்தாதோ?//
நம்முரில் எல்லோரும் ஏழைகள் என்று நான் சொல்லவில்லை. அப்பெண்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கை வசதிகளை சாதாரணமாக நாம் எண்ணியும் பார்ப்பதில்லை. விதிவிலக்குகளும் உண்டுதான். ஆனால் விதிவிலக்காக இருக்கும் அவர்கள் அங்கே பெண் கேட்பதில்லை என்று நான் எழுதியிருக்கிறேன்.

அஸீம் ப்ரேம்ஜி போன்றவர்கள் அவர்களிடம் பெண் கேட்பதில்லை (அவர் கேட்டு, அரபி பெண் தரவில்லை, என்று எங்காவது சொல்லியிருந்தால் நீங்கள் அறியத்தாருஙகள்) அவர் கேட்டிருந்தாலும் பெண் தர மறுப்பது, பெண்ணைப் பெற்றவர்களது மற்றும் பெண்ணிண் விருப்பத்தைப் பொறுத்தது. இஸ்லாத்தில் தடையில்லை என்பதுதான் என் விளக்கம். (இஸ்லாத்தில் தடையிருக்கிறதென்றால் ஆதாரத்தோடு அறியத்தாருங்கள். மேற்கொண்டு விவாதிப்போம்)

//2. ஏன்இ வளைகுடா நாடுகளிலிருந்து 60 வயது அரபுக் கிழவர்கள் நம் நாட்டிற்கு வந்து இளம் பெண்களை மணம் புரிகிறார்களே. இத்திருமணங்களுக்கு மேற்சொன்ன விதி பொருந்தாதோ?//

மேற்சொன்ன எந்த விதி நண்பரே?
அவன் நாட்டில் 25வயது குமரனுக்கே பெண் எடுக்க திருமணம் செய்ய அரசு மானியம் தருகிறது. பெண்ணுக்கு அவன்(?) அவ்வளவு... வரதட்சனை தர வேண்டும்.
இதிலே 60வயது கிழவனென்ன செய்வான். நல்ல சாப்பாடு நிறைய பணம், உடலில் வளு. அவனுக்குத் அந்த தேவையிருக்கிறது. எங்கு சுலபமாக, செலவு குறைவாக, கிடைக்கிறதோ அங்கு வருகிறான்.

அங்குள்ள சுகவாழ்க்கையை மட்டும் எண்ணாமல், நாம்தான் (அது போன்றவர்களுக்கு எல்லாம் பெண் கொடுக்காமல்) நம்மை சீர் படுத்திக் கொள்ள வேண்டும்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.