<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-38581011</id><updated>2011-07-25T05:14:54.437+04:00</updated><category term='பகுத்தறிவு'/><category term='கருத்துரை'/><category term='இஸ்லாம்'/><category term='சென்ஷி'/><category term='ரோஷம்'/><category term='தருமி ஐயா'/><category term='பஸாதி'/><category term='உணர்வுகள்'/><category term='ரமதான்'/><category term='ஜிஹாதி'/><category term='பதில்கள்'/><category term='சவூதி'/><category term='அழைப்பு'/><category term='வால்பையன்'/><category term='கோவி'/><category term='வினவு'/><category term='வயிற்றெறிச்சல்'/><category term='சாகித்'/><category term='தினப்படிவம்'/><category term='நன்மை'/><title type='text'>அழைப்பு</title><subtitle type='html'>நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை 
தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://islamicfold.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://islamicfold.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சுல்தான்</name><uri>http://www.blogger.com/profile/02533713155036746645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp1.blogger.com/_9Y2isWBuYHw/RkwrDf92mFI/AAAAAAAAAC0/P_VNqlJkxVg/s320/22022006009.jpg&apos;'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>14</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-38581011.post-2761391514165167479</id><published>2010-07-08T10:47:00.006+04:00</published><updated>2010-08-22T10:24:05.281+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வால்பையன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதில்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்ஷி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோவி'/><title type='text'>வால்பையனுக்கு கடுமை அகற்றப்பட்ட பதில்</title><content type='html'>(அன்பின் வால்பையன்,&lt;br /&gt;உண்மையில் எம் முந்தைய நீக்கப்பட்ட இடுகையில் எழுத்துக்களை கடுமையாக்கி உம்மை வருத்தத்தில் ஆக்கியிருந்தால் அதற்காக உளமாற நான் வருந்துகிறேன். ஏன் அவ்வாறு எழுத நேர்ந்தது என்பது நம்மிருவருடன் மற்றவர்களும் அறிந்ததே. தேவையேற்படின் அதற்காக தங்களிடம் மன்னிப்பு கோரவும் தயங்க மாட்டேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;எழுத்துக்களில் எமக்கும் தடித்தனமாய் எழுத இயலும். எனினும் அவை எம் கொள்கைக்கு எதிரானது. நாம் அழகான முறையில் எம் கருத்துக்களை எடுத்துச் சொல்லவும் விவாதிக்கவுமே எப்போதும் விரும்புகிறோம். எனவே கடுமையான வார்த்தை பிரயோகங்கள் நீக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரத்துக்கு முன் பதிவர் நண்பர் சென்ஷி அவர்கள் &lt;a href="http://senshe-kathalan.blogspot.com/2010/07/blog-post.html/"&gt; வால் பையன் மற்றும் ராஜனுக்கு &lt;/a&gt; என்ற தலைப்பிலும் நண்பர் ஜிகே (கோவி. கண்ணண்) அவர்கள் &lt;a href="http://govikannan.blogspot.com/2010/07/blog-post.html/"&gt; வால்பையன் மற்றும் இராஜனுக்கு வேண்டுகோள்! &lt;/a&gt; என்ற தலைப்பிலும் வெளியிட்டிருந்த இடுகைகளை படிக்க நேர்ந்தது. அதன்பின் வால்பையன் அவர்களின் 'குர்ரானில் குஜிலி கும்பா" என்றஇடுகையும் படிக்க கிடைத்தது (அமீரகத்தில் அவர் பதிவு தடை செயயப்பட்டுள்ளதாம்).  சென்ஷியுடைய, ஜிகேயுடைய பதிவுகளில் வால்பையன் கொடுத்திருந்த பின்னூட்டங்கள் அவரின் வாதங்கள் பதிலளிக்கப்பட இயலாத வாதங்கள் என்ற நிலையிலும் பின்னூட்டங்கள் இட்டிருந்தார். அதற்காகவே இந்த இடுகை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முதலில் &lt;/strong&gt;&lt;br /&gt;அன்பின் வால்பையன்.&lt;br /&gt;ஒரே கேள்வியை அழகாகவும் கேட்க முடியும். அருவருப்பான முறையிலும் கேட்க முடியும். கனியிருப்பக் காய் கவராமல் எந்த விவாதத்தையும் அழகான முறையில் கொண்டு செல்வதுதான் நல்ல பண்பாடாக அமைய முடியும். எனவே உங்கள் இடுகையிலுள்ள அருவருப்பை அகற்றுங்கள். அதற்காக வருத்தம் தெரிவிப்பது நல்ல பண்பாடாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;சிலருக்கு கலைஞர் கருணாநிதி அவர்களிடம் சில கோபங்கள் இருக்கலாம். விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவரை விமர்சிக்கும்போது கண்டிப்பாக சில பண்புகளை ஒழுக்கங்களை கடை பிடித்தாக வேண்டியது அவசியம். ஏனெனில், உங்களுக்கு பிடிக்கா விட்டாலும் தமிழகத்தின் கணிசமான மக்களால் தலைவர் என போற்றப்படும் தலைவர்களில் ஒருவர் அவர். அதற்காக அவரது தொண்டர்களாலேயே ஆட்டோ அனுப்பி கவுரவிக்கப்பட்டால், திமுக அனுதாபிகள் எல்லாம் தீவிரவாதிகள் எனப் பொருள் கொள்ளப்பட மாட்டாது. இது ஒரு உதாரணம்தான். &lt;br /&gt;&lt;br /&gt;அவற்றையெல்லாம் விட பல படிகள் மேலாய் முஹம்மது நபி (அன்னாரின் மீது சாந்தி தவழுவதாகுக) அவர்கள், இவ்வுலகத்தின் குறைந்தது ஐந்திலொரு பகுதி மக்களால் தம் உயிரினும் மேலாய் மதித்து போற்றப்படும் பெரும் தலைவர், வழிகாட்டி. அவரது ஒவ்வொரு சொல்லும், செயலும், அங்கீகாரமும் எங்களுக்கு எங்கள் பெற்றோரை விடவும், மற்றெல்லா மனிதர்களை விடவும், பல்லாயிரம் மடங்கு உயர்ந்தது. அவரை விமர்சியுங்கள். ஆனால் அவற்றில் அவரது கண்ணியத்திற்கு களங்கம் தரும், தரம் தாழ்ந்த வார்த்தை பிரயோகங்கள் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டியது அவசியம். அதுவே நற்பண்பு. அத்தகு விமர்சனங்களுக்கு தகுதியுள்ளோர் தேவையேற்படின் பதிலளிப்பர். யாரும் யாரையும் நிர்ப்பந்திக்க முடியாது. ஏனெனில் 'பதிலில் உள்ள நியாயங்களை ஏற்றுக் கொள்ளும் அறிவு நாணயம், கேள்வி கேட்பவர்களிடத்தில் மிகப் பெரும்பாலும் இல்லை' எனும் வாதத்தை என் அனுபவம் ஏற்றுக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தரமற்ற வார்த்தைகளை கொண்டிருந்ததால் இவ்விமர்சனங்களுக்கு பதில் சொல்லி நேர விரயம் செய்ய விருப்பமில்லாமல் இருந்தது. என்றாலும் உதாரணத்துக்காக சில பதில்கள் மட்டும்&lt;br /&gt;//... ... ... தனது காம இச்சைக்காக, அவர் பல திருமணங்களை செய்யவில்லை என்று கூறுவர் பார்க்க. &lt;br /&gt;மனைவி துணைவி ஸ்டைல் ... ... ...! அம்பது வயசுக்கு மேல இந்தாள ஐஸவர்யா ராயா கட்டும். பல்லு போன கெழவிக தான் கட்டும்! //&lt;br /&gt;1400 வருடத்துக்கு முந்திய அராபிய கலாச்சாரம் பற்றி ஏதாவது தெரியுமா? அப்போதைய பெண்களின் நிலையைப் பற்றி ஏதாவது படித்திருக்கின்றீர்களா? உங்கள் பாட்டியோட காலத்தில் அவர்களின் நிலைமை எவ்வாறிருந்தது என அவர்களிடம் கேட்டுத் தெளிந்து, பின்னர், 1400 வருடத்துக்கு முந்தைய நாட்களில் பெண்களின் வாழ்வு எவ்வாறிருந்து இருக்கும் என எண்ணிப் பாருங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நபி அவர்களது 25வது வயதில் அவரது முதல் திருமணம். 40வது வயதில்தான் அண்ணல் அவர்களுக்கு முதன்முதலாக இறைச்செய்தி வந்தது. அதன் பிறகான அவரது கடுமையான போராட்ட வாழ்வுக்குப்பின் குறைந்தது ஐந்தாறு ஆண்டுகளுக்குப்பின் மக்காவின் மக்கள் அவருடைய செய்திகளுக்கு செவி சாய்த்து கூடுதலாக இணையத் துவங்கினர். அப்போது அவரிடம் பேசப்பட்ட பேரத்தில் ஒன்று. அதை நீங்கள் விட்டு விட்டால் அதற்குப் பிரதியாக அரபுலகத்திலேயே அழகான பெண்களை (பெண்ணையல்ல - பெண்களை) உமக்கு மணமுடித்துத் தருகிறோம் என்பதாகும். யோசியுங்கள். அந்த காலத்து ஐஸ்வர்யா ராய்களை அவர்களே கட்டிக் கொடுக்க தயாராய்த்தான் இருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் மற்ற பெண்களை மணமுடித்த போது, உம்மையும் எம்மையும் போல் பக்கத்து தெருவில் வசிப்பவரே 'பையன் யாரு?' என்று கேட்கக் கூடிய நிலையில் இல்லை. அந்தக் காலத்திய (ரிஸஸனுக்கு முந்தைய) அமெரிக்காவாக இருந்த ரோம சாம்ராஜ்யமே அவரது பேரைக் கேட்டு கதி கலங்கியது. முடி சூட்டிக் கொள்ளா விட்டாலும் மாமன்னர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அடுத்து&lt;/strong&gt; அவரது திருமணங்கள் காம இச்சைக்காக என நிறுவ //ஆயிஷா கூறினார். அல்லாஹ்வின் தூதர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தபோது நாளை ... ... ... அவர்களின் உமிழ்நீர் என் உமிழ் நீருடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களை கைப்பற்றிக் கொண்டான்// என்ற ஹதீஸைக் குறிப்பிட்டு விட்டு &lt;br /&gt;//அடச்ச! சிவ பூஜைல கரடி பூந்தா மாதிரி அருமையான நேரத்துல அல்லா பூந்து குட்டைய கொழப்பிட்டாருப்பா!// அதற்கடுத்து மேலும் பல அசிங்க வாதங்களை வைத்துள்ளீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நபியவர்களின் மரணத்தருவாயில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கூறும் போது, அது அவரைத் தமது உயிரினும் மேலாய் மதிப்பவர்களை எளிதில் உணர்ச்சி வசப்பட வைக்கும் என்பதை அறிந்து, அதற்கான விளக்கங்களை மேலும் அறிய முயற்சித்திருக்க வேண்டும். எங்கேயோ எழுதி வைத்தவைகளை படியெடுத்து, அதில் மேலும் பல அசிங்க வார்த்தைகளை சேர்த்து வைப்பது அறிவுடைமை ஆகாது.&lt;br /&gt;&lt;br /&gt;நபியவர்கள் நோன்பு காலங்களிலும் மற்ற நாட்களிலும் மிஸ்வாக் எனும் பல் துலக்கும் குச்சியால் தம் பற்களை சுத்தம் செய்பவதை அதிகம் விரும்புபவராய் இருந்தார்கள். அது உங்களுக்கு கஷ்டத்தை தராது என்று இருந்திருந்தால் ஒவ்வொரு தொழுகைக்கு முன்னும் மிஸ்வாக் குச்சியினால் பல் துலக்குவதை கட்டாயமாக்கி இருப்பேன் என்று சொல்லுமளவுக்கு இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னார் இறப்பெய்தும் அந்த தருணத்தில் மிகவும் நோய்வாய்ப்பட்டு, அடிக்கடி மயக்கம் வருவதும் தெளிவதுமாய் இருந்து, நடக்க முடியாமல் இருவரின் தோள்களில் தொங்கிக் கொண்டு, கால்கள் தரையில் இழுபட வீட்டை ஒட்டிய பள்ளிக்கு சென்றிருக்கிறர்கள். அத்தகு நிலையில் பள்ளியை ஒட்டிய ஆயிஷா அம்மையார் அவர்கள் வீட்டில் தங்கியிருந்த நிலையில், அவர் வீட்டுக்கு வந்திருந்த ஆயிஷா அம்மையாரின் சகோதரர் கையில் வைத்திருந்த மிஸ்வாக் குச்சியை பார்க்கிறார்கள். அது வேண்டுமா என அம்மையார் கேட்க ஆம் என்பது போல பார்க்கின்றார்கள். அப்போது அம்மையார் அவர்கள் தம் சகோதரர் கையில் வைத்திருந்த மிஸ்வாக்கை வாங்கி அதன் உபயோகப்படுத்தாத மறு முனையைக் கடித்து, நன்றாக மென்று மென்மையாக்கி நபி அவர்களின் வாயில் வைக்கின்றார்கள். இதுதான் 'அன்னாரின் உமிழ்நீர் என் உமிழ்நீருடன் கலந்திருந்த நிலை' என்று அம்மையார் சொல்கிறார்கள். உங்கள் வாத்திலுள்ள தவறை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறென்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கடுத்து இதற்கு துணையாக அபூதாவுதிலுள்ள ஒரு ஹதீஸை குறிப்பிட்டிருக்கின்றீர்கள். &lt;br /&gt;அதில் 'எனது நாவினை சுவைப்பார்' என்ற வார்த்தை கூடுதலாக வந்துள்ளதால் அது தவறான ஹதீஸ் என்பதை விளக்கவும் விளங்கவும் பெரிய முயற்சி எதுவும் தேவையில்லை. அபூதாவுது ஹதீஸ் புத்தகத்திலுள்ள தவறான ஹதீஸ்கள் நீக்கப்பட்டு சுனன் அபூதாவுது எனும் புத்தகம் வந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கடைசியில்&lt;/strong&gt;&lt;br /&gt;நேரான கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இஸ்லாத்தில் எப்போதும் உண்டு. தங்களின் முன் முடிவுகளைத் துறந்து விட்டு, திறந்த மனதுடன், உண்மைகளை அறியும் நன்நோக்குடன் மட்டும் அணுகுவோரால் அதன் உண்மைகளை அறிந்திட இயலும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38581011-2761391514165167479?l=islamicfold.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamicfold.blogspot.com/feeds/2761391514165167479/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38581011&amp;postID=2761391514165167479' title='44 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/2761391514165167479'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/2761391514165167479'/><link rel='alternate' type='text/html' href='http://islamicfold.blogspot.com/2010/07/blog-post.html' title='வால்பையனுக்கு கடுமை அகற்றப்பட்ட பதில்'/><author><name>சுல்தான்</name><uri>http://www.blogger.com/profile/02533713155036746645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp1.blogger.com/_9Y2isWBuYHw/RkwrDf92mFI/AAAAAAAAAC0/P_VNqlJkxVg/s320/22022006009.jpg&apos;'/></author><thr:total>44</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38581011.post-3661339252810482047</id><published>2010-03-29T02:58:00.004+04:00</published><updated>2010-03-29T03:18:10.507+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாகித்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வினவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருத்துரை'/><title type='text'>இஸ்லாம் பற்றி வினவுக்கும் சாகித்துக்கும்-3</title><content type='html'>&lt;strong&gt;தலாக் விவாகரத்து இத்தா&lt;/strong&gt; முதலியவை பற்றி நிறைய தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளன. இந்த பதிவிலேயே என் http://islamicfold.blogspot.com/2007/01/blog-post.html என்றுள்ள இடுகையின் கருத்துரை பகுதியிலும் தலாக் விவாகரத்து பற்றி உள்ளது. இயன்றால் பார்வையிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;//ஆணின் ஆளுமை அதிகாரத்தினால் தலாக் தலாக் தலாக் என்று மும்முறை ஒருவன் கூறிவிட்டால் அவனது மனைவி விவாகரத்து செய்யப்பட்டவளாக கருதப்படும் நிலையே அன்றும் இன்றும் உள்ளது//&lt;br /&gt;இதை இப்படியே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கூவி விற்பீர்களோ!. மேலே மின்னணு பொறியியல் பட்டதாரி பாத்திமாவின் கணவர் விடயத்திலும் இதை தெளிவு செய்திருக்கிறோம். தமிழகத்தில் இஸ்லாமிய எழுச்சியில் முத்தலாக் என்கிற விடயமே தவறு என்று ஆண்களும் பெண்களும் அறியத் துவங்கி விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;//இந்த மூன்று முறை தலாக் என்று சொல்லும் உரிமை, சிந்தித்து தெளிவாக நிதானமாக முடிவெடுத்தாலும் ஒரு பெண்ணிற்கு கிடையாது. தனக்கு பொறுப்பானவர்கள் மூலம் தன் கணவனை இந்த உறவிலிருந்து விடுவிக்கச் செய்துகொள்ளத்தான் ஒரு பெண்ணுக்கு இருக்கின்ற உரிமையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தலாக் என்பது போல்தான் குளலா என்பதும் என்று சில இசுலாமிய பெண் அமைப்புகள், தாங்களும் நேரிடையாக தலாக் செய்துகொள்ள உரிமையுண்டு என்று வாதாடினாலும் ஆண்களால் மட்டுமே நிர்வாகிக்கப்படும் உலமாக்கள் சபை அதை நிராகரித்துவிட்டது. குலா என்பதன் பொருள் “விவாகரத்து செய்துவிடச் சொல்லுங்கள்” என்று கோரிக்கை வைப்பதே ஆகும்.//&lt;br /&gt;இஸ்லாத்தில் ஆணும் பெண்ணும் அவர்களது உறவினர்கள் முன்னிலையில் தமது வீட்டிலேயே சிறிய நிகழ்ச்சியாக நடத்தி திருமணம் செய்து கொண்டாலும் அதை முறையாகப் பதிவு செய்து ஊர் மக்களுக்கு பொதுவில் அறிவிக்க வேண்டியது கடமையாகும். அதைப் போலவே குலாவும். அநதப் பெண் ஒரு பந்தந்திலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டாள் என ஜமாஅத்தின் முன்னிலையில் அறிவிக்கப் பட வேண்டும். இதிலே அப்பெண்ணுக்கு பல நன்மைகள் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண் குலாவுக்காக அனுமதி கேட்டால், விசாரித்து, விளக்கம் சொல்லி, முடிவை மறு பரிசீலனை செய்ய அவளிடம் கோரலாம்.  ஆனால் அப்பெண் தன் நிலையில் உறுதியாக இருந்து குலாவை கேட்டால் அதை நிராகரிக்கும் உரிமை ஜமாஅத்துக்கோ அதன் தலைவருக்கோ சிறிதளவேனும் கிடையாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் வார்த்தையிலிருந்து நீங்களே மாறுபடுவதைக் கவனியுங்கள் //ஆண் தலாக் செய்ய மறுத்தாலும் வலுக்கட்டாயமாக விவாகரத்தை பெற்றுக்கொள்ளும் பாதுகாப்பும் இன்று பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மாற்றத்தின் முன்னேற்றம். சமூகத்தின் இன்றையநிலை பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றமும், பெண்ணுழைப்பும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. 'கல்லானாலும் கணவன்...' மலை ஏறிக் கொண்டிருக்கிறது.//&lt;br /&gt;பெண்களுக்கும் இஸ்லாம் சரிவரத் தெரிய தொடங்கியதால் எற்பட்ட நல்ல விளைவுதான் இது. &lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணுழைப்பு - இஸ்லாமிய கல்வியை அறிவதற்கான அவர்களின் உழைப்பு, அதன் மூலம் அவர்களில் சிலர் பெற்ற கல்வியும் வேலை வாய்ப்பும் என எடுத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தில் ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும், குலம் தழைக்கவும் உள்ள ஒரு புனிதமான ஒப்பந்தம்தான் திருமணம். இந்த மகிழ்ச்சிகள் அவர்கள் குடும்ப வாழ்வில் இல்லாதிருந்தால் ஒப்பந்தந்தை முறித்துக் கொள்ளவும் இஸ்லாம் அனுமதி அளிக்கிறது. இந்த உண்மைகள் உணரப்பட்டதால்தான் 'கல்லானாலும் கணவன் புல்லானும் புருஷன்' என்ற நிலை இஸ்லாத்தில் அவசியமற்றதாகி பெண்களுக்கு நல்வாழ்வு அமைய ஏதுவாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;//விவாகரத்து வழக்குகளில் இன்றைய நடைமுறை மதக்கோட்பாட்டிற்கு வெளியே ஜமாத்துகளால் தீர்மானிக்கப்படுகின்றன.//&lt;br /&gt;மஹ்ர் தொகை என்பது பெண்கள் தங்கள் கணவனால் கைவிடப்படும் நிலைமை ஏற்படும் போதும் அல்லது கணவனை இழக்கும் போதும் உறுதுணையாக இருக்கும் விதத்தில், அந்த அளவுக்கு அமைய வேண்டும். அதை மணப்பெண்ணே தீர்மானிக்க வேண்டும். மஹ்ரை கூட்டிக் குறைத்து பேரம் பேச மணமகனுக்கு அனுமதியுண்டே தவிர இவ்வளவுதான் தருவேன் எனக் கூற அதிகாரம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மஹ்ர் தொகையைப் பற்றி ஓரளவு இஸ்லாமியப் பெண்கள் விளங்கி இருந்தாலும் அதை அவர்கள் சரிவர நடைமுறைப்படுத்தும் அளவுக்கு இதுவரை இங்கே நிலைமைகள் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய காரணங்களினால்தான் விவாகரத்து வழக்குகளில் இன்றைய நடைமுறையில் &lt;strong&gt;மதக்கோட்பாடுகளை விட்டும் வெளியேறாதபடி &lt;/strong&gt;ஜமாத்துகளால் (பெரும்பாலும்) தீர்த்து வைக்கப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;//நடைமுறையில் அப்பெண்ணிற்கு இருக்கும் குழந்தைகளின் பால், வயது ஆகியனக் கணக்கிடப்பட்டு அதற்குப் பாதுகாப்பு தரும்வகையில் தண்டத்தொகையாக தீர்மானிக்கப்பட்டு ஆணிடமிருந்து பெற்று பெண்ணிற்கு வழங்கப்படுகிறது. கொடுக்கப்பட்ட வரதட்சனைகள், நகைகள், சீதனங்கள் திருப்பியளிக்கப் படுகின்றன.// &lt;br /&gt;இந்த தீர்ப்பு இஸ்லாத்துக்கு எதிரான தீர்ப்பல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;//ஜீனாம்சம் என்றச் சொல் மட்டும உச்சரிக்கப்படுவதில்லை.//&lt;br /&gt;ஏனெனில் அது மற்ற மதத்தாரில் நடைமுறையிலுள்ள ஜீவனாம்சம் போன்றதில்லை. மாதம் ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் என்று சொல்லி விட்டு அதை தர மறுப்பவனுக்காக மீண்டும் வழக்காட வழியில்லாத எத்தனையோ பேர் தத்தளிக்கின்ற நிலைமையில் அதை ஒரே முறையில் அல்லது ஜமாஅத்தார் முன்னிலையில் ஒரேயடியாக பெற்றுத் தருவதின் மூலம் எதிர்காலச் சிக்கலில்லாமல் போகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;//குழந்தைகள் ஆண்களுக்கே உரியன. அவர்கள் அவர்களை தமது பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே கோட்பாடு.//&lt;br /&gt;குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள செலவுகளுக்கு முழுப்பொறுப்பும் ஆணுக்குள்ளதே. (பெண் எவ்வளவு பணக்காரியாக இருந்தாலும்) நீயும் சேர்ந்துதானே பெற்றாய், நீ பாதிசெலவை ஏற்றுக் கொள் எனக் கூற முடியாது.  இதில் பெண்களுக்கு பாதுகாப்பா பிரச்னையா என்பதை உங்கள் அறிவுக்கே விட்டு விடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;//கணவன்களால் மட்டுமே தான் கர்ப்பமுற்று குழந்தை பெற்றெடுப்பதாகவும், அதில் தனக்கு பங்கேதுமில்லை என்று இன்னும் இப்பெண்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதால் இப்பிரச்சனையில் தமக்கு ஏதும் உரிமை இல்லை என்பதை எவ்வித மனவருத்தமுமின்றி ஏற்றுக்கொள்கின்றனர்// &lt;br /&gt;இவையெல்லாம் கம்யூனிஸக் கற்பனைகளேயன்றி வேறில்லை. ஆண் பெண் இருவரது அணுக்கலப்பினால்தான் குழந்தை பிறக்கிறது என்பதை குர்ஆன் சொல்லித் தந்தே இருக்கிறது. எந்த தமிழ்த் தாயும் தன் குழந்தையை தான் வளர்ப்பதை ஏமாற்றப்பட்டு விட்டதாக கருதுவதில்லை. சில விதி விலக்குகள் இருக்கலாம். அதைப் பொதுவாகக் கருத முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;//குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு இவள்மீது சுமத்தப்படும்போது இயல்பாகவே உள்ள தாய்ப்பாசம் அதனை தன் தலையில் கட்டும் ஏமாற்றம் என்று கருதுவதற்கு இடமளிப்பதல்லை.//&lt;br /&gt;எவ்வளவு சிறந்த ஆணாயினும், ஒரு பெண்ணைப் போல், அதிலும் குறிப்பாக பெற்ற தாயைப் போல் குழந்தைகளை வளர்ப்பதென்பது இயலாத காரியம். அதனால் பெரும்பாலும் தாயிடமே குழந்தைகள் விடப்படுகின்றனர். அந்தப் பெண்ணுக்கு வேறு வரன்கள் அமையும் பட்சத்தில் அக்குழந்தைகளுடனேயே திருமணம் செய்விக்கப் படுகின்றனர். இயலாத பட்சத்தில் தாய்வழி உறவினர்களே அக்குழந்தைகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரளவு வயது வந்த குழந்தைகள் குறிப்பாக ஆண் குழந்தைகள் தந்தையுடன் செல்லும் நிலை ஏற்படும்போது, அது வளர்ந்து, விபரம் அறிந்து, வருவாய் ஈட்டக்கூடிய நேரத்தில், &lt;br /&gt;'இஸ்லாத்தில் ஒருவர் தம் தாய்க்கு தர வேண்டிய உயர்ந்த அந்தஸ்தும், அப்பெண் எப்படிப் பட்டவளாக இருப்பினும் அவளுக்குள்ள உரிமைகள் அவனது கடமைகள்' ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் அவனுக்கு நினைவுறுத்தப்பட்டு தாய்க்கு சேவையாற்ற ஆர்வமுட்டப்படுகிறான். 'தாயின் காலடியே சொர்க்கம்' என்ற நிலை அவனுக்கு சொல்லித் தரப்படுகிறது. அதனால் இறைவனிடம் கிடைக்கவிருக்கும் உயரிய நிலைமை அவனுக்குச் சொல்லித் தரப்பட்டு தாய்க்குப் பணிவிடையாற்ற ஆர்வமூட்டப்படுகிறான். &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தில் ஒரு மகனிடம் தாய்க்கு உள்ள உரிமை மூன்று பங்கென்றால் தந்தைக்கு ஒரு பங்குதான்- அவனை யார் வளர்த்திருந்தாலும். &lt;br /&gt;//பெண்ணின் விருப்பத்திற்கிணங்க விவாகரத்து நடந்தால் பெண், தான் பெற்ற மகர் தொகையுடன் சிறுதொகை ஒன்றையும் (திட்டவட்டமான அளவு இல்லை) கொடுக்க வேண்டும். அல்லது மகர் தொகையை மட்டுமாவது கொடுக்கவேண்டும், என்று கோட்பாடு கூறுகிறது. நடைமுறை அவ்வாறு இல்லை. பெண் தலாக் செய்யச் சொல்லும் சூழ்நிலை பரிசீலிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக குடிகாரக் கணவன், விபச்சாரிகளுடன் சுற்றும் கணவன், சமூக குற்றங்களைச் செய்வதால் தொடர்ந்து சிறைசென்று வரும் பொறுக்கி போன்ற அடிப்படை நிகழ்வுகள் பரிசீலிக்கப்பட்டு தீர்த்து வைக்கின்றனர். குற்றம் கணவன் மீது என்றால் கணவனுக்கு தண்டத்தொகையும். மனைவி மீது என்றால் மனைவிக்கு தண்டத்தொகையும் தீர்மானிக்கப்படுகிறது//          &lt;br /&gt;மஹ்ர் தொகையை விடக் கூடுதலாக எதையும் கொடுக்க வேண்டியதில்லை. அவன் கொடுத்திருந்த விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் திரும்பக் கேட்கப் பட்டால் (சரியான முறையில் மஹ்ர் கேட்டுப் பெறப்படாததால்) குழந்தை வளர்ப்பு முதலிய காரணங்களுக்கான செலவினங்களில் அவை கணக்கிடப்படுகின்றன. இவையாவும் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு முரணில்லாத வகைதான். (மேலே கல்லானாலும் கணவன் விளக்கத்தையும் பார்வையிடவும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இத்தா – காத்திருத்தல்&lt;/strong&gt;&lt;br /&gt;இஸ்லாத்தைப்பற்றி சரிவர அறிய, ஆராய முயற்சிக்காமல் எவரோ சொன்னவற்றை பிடித்துக் கொண்டு, மார்க்ஸ் கடவுள் கெடுத்த அபின் போதையில்தான் இவரும் தள்ளாடுகிறார் என்பதை இவரது இந்த விளக்கங்களிலே தெளிவாகத் தெரியப்படுத்தி விடுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;//'கணவன் இறந்த பெண்கள் மழித்துக் கொள்ளுங்கள் (மொட்டையடித்துக் கொள்ளுவது)' என்று கூறுகிறார். அந்த அறிவிப்பைத் தவிர//&lt;br /&gt;இதற்கான ஆதாரத்தை தர இயலுமா? இஸ்லாத்தை சிறுமைப் படுத்தவல்லாது வேறெதற்காக இத்தகைய புனைச்சுருட்டுகள்?&lt;br /&gt;&lt;br /&gt;//தனது கணவனை சொர்க்கத்திற்கு இட்டுச் செல்வதில் பங்காற்றும் நன்மைகளின் எண்ணிக்கையை கூட்டும் என்றும் அவள் மனதார நம்புவதால்அப்பெண்களின் மனதில் எவ்வித எதிர்ப்பையும் ஏற்படுத்தவில்லை//&lt;br /&gt;இவையாவும் இவரது சொந்த கற்பனைகள் அல்லது மார்க்ஸிய கற்பிதங்களாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;//விவாகரத்து விரும்பியோ விரும்பாமலோ நடந்தாலும் கணவன்மீது ஏற்பட்டுள்ள “கசப்புணர்வு” அங்கே ஏற்பட்டுள்ளது என்பது தெளிவான ஒன்றே. அப்படியிருந்தும் அவர்கள் இந்த இத்தாவை கடைபிப்பது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்டவர்களின் மனநிலையை அறிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்கு ஏற்படவில்லை//&lt;br /&gt;இவராக சில கற்பனைகளை எழுதி விட்டு அதில் மேற்கொண்டு கேள்விகளை யாரிடம் கேட்கிறார்? கற்பனைக்கு சொந்தக்காரரான அவர்தான் அதற்கு பதில் தர வேண்டும். கற்பனை இல்லையென்றால் அதற்கான ஆதாரத்தை அவர்தான் தர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தா என்பது காத்திருப்பு என்று இவரே விளக்கமளிக்கிறார். இதில் கர்ப்பபைகளில் உள்ளதை அறிவதும் இருக்கிறது. அதல்லாத வெறும் காத்திருத்தலும் உண்டு என்பதை 'கர்பப்பை இல்லாவிட்டாலுமா!' என்ற அவரது இடுகையில் அவர் எடுத்து வைத்த (65:4) குர்ஆன் வசனமே விளக்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;"உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், 'இத்தா'(வின் தவணை) மூன்று மாதங்களாகவும், தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ('இத்தா'வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையுமாகும். மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்"&lt;br /&gt;&lt;br /&gt;மாதவிடாய் நினறு போன வயதானவர்களுக்கும், மாத விடாயே வராதவர்கள் மற்றும் சிறுமிகளுக்கும் (சிறுமிகள் திருமணச் சட்டம் மாற்றப்பட்டு விட்டது) மூன்று மாத தவணை கொடுக்கப்பட்டுள்ளது. இதிலே கர்ப்பபைகளில் உள்ளதை அறிவது இல்லை. வெறும் காத்திருத்தல் சட்டம்தான் என்பது மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கே புரியும். &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தில் கூறப்பட்ட ஒவ்வொன்றும் நபித்தோழர்களால் அவ்வப்போது கேள்விகளாக கேட்கப்பட்டு தெளிவு பெறப்பட்டே வந்திருக்கின்றன.  அதனால்தான் தெளிவாக சொல்லப்பட்டுள்ள இவற்றில் கேள்விகள் அவசியமற்றதாகி விட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதை மேலும் விளக்க: &lt;br /&gt;ரமதான் மாதம் முழுதும் நோன்பிருப்பது கடமை. அதனால் பல பயன்கள் உண்டாவதாக சொல்லப்பட்டுள்ளது. அது விளைவுகள்தான். அந்தப் பயன்கள் எமது நோக்கமல்ல. நோன்பிருக்க வேண்டுமென்கிற இறை கட்டளையை நிறைவேற்றுவதல் எனும் அடிபணிதல்தான் எமது முழு முதல் முக்கிய நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோல காத்திருத்தலில் பல நல்ல பயன்கள் இருக்கிறது. என்றாலும் அவை எமது நோக்கமல்ல. இறை கட்டளைக்கு அடிபணிதல் என்பதுதான் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி: &lt;br /&gt;1. திரு. வினவு அவர்கள் தமது தளத்தில் &lt;a href="http://www.vinavu.com/2010/03/22/muslim-women-today/"&gt; 2010-ல் 'இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும்' &lt;/a&gt; என்ற தலைப்பில் திரு. சாகித் அவர்கள் எழுதி இருந்த இடுகையை எடுத்தது இட்டிருந்தார். அதற்கான கருத்துரை எழுதப்போய் அது மூன்று இடுகைளாக நீண்டு விட்டது.&lt;br /&gt;2. இந்த பதில்கள் உங்களில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்பதையும் இயன்றவரை எல்லா பகுதிகளுக்குமே பதிலளிக்கப் பட்டுள்ளதால் உங்களுக்கு மென்மேலும் வீரியமாய் எதிர்க்கத் தோன்றும் என்பதையும் நான் அனுபவப் பூர்வமாக அறிந்திருக்கிறேன். இந்த பதில்களால் உங்களை வருத்தமுறச் செய்வது எனது நோக்கமல்ல. உண்மையை அறிய முயற்சிக்கும் இது போன்ற கேள்விகளுள்ளவர்கள் மட்டுமே இதனால் பயனடைய முடியும். இவ்வாறு தெளிவு படுத்தவதன் மூலம் என்னளவுக்கு என் கடமையைச் செய்தேன் என்ற மகிழ்ச்சியும் இறை திருப்தியுமே என் நோக்கம்.  என்னால் இயன்றவரை நான் அறிந்தவரை பதிலளித்துள்ளேன். அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38581011-3661339252810482047?l=islamicfold.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamicfold.blogspot.com/feeds/3661339252810482047/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38581011&amp;postID=3661339252810482047' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/3661339252810482047'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/3661339252810482047'/><link rel='alternate' type='text/html' href='http://islamicfold.blogspot.com/2010/03/3.html' title='இஸ்லாம் பற்றி வினவுக்கும் சாகித்துக்கும்-3'/><author><name>சுல்தான்</name><uri>http://www.blogger.com/profile/02533713155036746645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp1.blogger.com/_9Y2isWBuYHw/RkwrDf92mFI/AAAAAAAAAC0/P_VNqlJkxVg/s320/22022006009.jpg&apos;'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38581011.post-4117841972173444423</id><published>2010-03-25T00:47:00.003+04:00</published><updated>2010-03-28T17:00:44.429+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாகித்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வினவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><title type='text'>இஸ்லாம் பற்றி வினவுக்கும் சாகித்துக்கும் - 2</title><content type='html'>//இசுலாமியப் பெண்களின் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும்போது நடைமுறை வாழ்க்கையின் வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் இசுலாமியர்கள் புர்கா என்றதும் சூடாகி விடுவது ஏன்?//&lt;br /&gt;எத்தனை விரிவாக எடுத்துரைத்தாலும் அறிய முயற்சிக்காமல் முதல் கேள்விக்கே திரும்ப வரும் திமிர் கொண்டவர்களாக நிறைய பேர் இருப்பதுதான்.  தனக்கு உரிமையற்ற மற்ற பெண்களை துகிலுரித்து கீழ்த்தரமாக பார்க்கத் துடிக்கும் காமாந்தக கண்களுக்கு புர்கா கேடாகத்தான் தெரியும். இது பெண்களை தங்களின் காமாந்தக கண்களுக்கு விருந்தாக்கத் துடிக்கும் திமிர் பிடித்த ஆண் மேலாண்மையின் வக்கிர உணர்வு. ஆடு நனைகின்றதே என ஊளையிட்டு வெறி கொண்டு அழும் ஓநாய்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;//சமூக ஆர்வாலர்கள் அப்பெண்களுக்கு புர்காவினால் ஏற்படும் சிரமங்களை முன்வைக்கும் போது அது அப்படி இல்லை என்று மறுப்பதும் அதனையே பெண்களை விட்டு பேசவைப்பதும் விவாதத்தில் எட்டப்படாத முடிவாக உள்ளது.//&lt;br /&gt;புர்கா என்பது ஏதோ கருப்புத்துணி என்று நினைப்பதால்தான் பல கோளாறுகள் ஏற்படுகின்றன. உடம்பை மறைக்கின்ற, அழகை, அலங்காரங்களை வெளிப்படுத்தாத முறையில் அணியும் துணி எதுவானாலும் அது புர்காதான். கருப்பு அங்கியே ஆனாலும் அது அவரது உடலின் கன, பரிமாணங்களைக் காட்டி பிறர் கண்களுக்கு விருந்து படைப்பதாக இருந்தால் அது இஸ்லாமிய நெறிமுறைக்குள் வராது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்திரா காந்தி அம்மையாருக்கு தன் பிரதமர் கடைமைகளை ஆற்றுவதற்கோ, ஜெயலலிதா அம்மையாருக்கு தம் முதலமைச்சர் பணிகளை நிறைவேற்றுவதற்கோ, கவர்னர் பாத்திமா பீவிக்கு அவர் கடமைகளை செவ்வனே செய்வதற்கோ, அன்னை தெரசா அம்மையாருக்கு தம் சமூகப்பணிகளை ஆற்றுவதற்கோ, பிணிகளைத் துடைப்பதற்கோ, தற்போதைய குடியரசுத்தலைவர் பிரதிபா தேவி பாட்டிலுக்கு அவர் தம் கடைமையைச் செய்வதற்கோ இத்தகைய துணிகள் எந்தத் தடையையும் ஏற்படுத்தவில்லை. சமூக ஆர்வலர்களாக தம்மை முன்னிறுத்தும் சில காமாந்தகர்கள் கண்களுக்குத்தான் இது தடையாகிறது. அதனால் விவாதப் பொருளாகிறது&lt;br /&gt;&lt;br /&gt;கடினமான உடல் உழைப்பை கொடுக்கின்ற வகையில் உள்ள வேலைகளை பெண்களிடம் கொடுத்து அவர்களின் இயல்புக்கு மாறாய் அவர்களைப் பிழிந்தெடுக்காதீர்கள். அவர்களின் உடலமைப்புக்கு ஏற்ற இயல்பான நாசூக்கான வேலைகளை மட்டும் அவர்களுக்கு கொடுங்கள். வேறு வழியின்றி அவ்வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திலிருக்கின்ற பெண்களுக்கு நிர்ப்பந்தம் என்ற முறையில் இஸ்லாம் அவரது உடைக்காக அவர்களை கட்டாயப் படுத்துவதில்லை. ஜமாஅத்துக்கும் வசதி படைத்தவர்களுக்கும் அவர்களை அந்த நிர்க்கதியான நிலையிலிருநது விரைவில் வெளியேற்றி நல்ல நிலைக்கு கொண்டு வருதல் கடமையாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;//இன்று அனைவரும் படிக்கவைக்கும் நிலையில் அந்த பெண்கள் புர்கா அணிந்தாலும் படிக்கச்செல்ல முடிகிறதே என்ற சந்தோஷத்தில் புர்காவை ஒரு அடக்குமுறையாகக் கருதுவதில்லை. ஒரு சில தீவிர மதப்பற்று இல்லாத குடும்பங்கள் அல்லது பெண்கள் மட்டுமே புர்கா அணியாத நிலையில் பள்ளி கல்லூரிகளுக்குச் சென்றாலும் பெரும்பாலனவர்கள் புர்கா அணிவதை ஒரு பொருட்டாக கருதுவதில்லை//&lt;br /&gt;கல்லூரி செல்லும் இஸ்லாமிய பெண்கள் அறிவு பெற்று கல்லூரிக்கு செல்லும் அதே வேளை அறிவு குறைந்து புர்காவும் இடுகின்றனரா? எத்தகைய வளைந்தொடிந்த சிந்தனை!.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் சரிவர புரியாதிருந்த நேரத்தில் பெண்களென்ன ஆண்களே கல்லூரிக்குச் செல்லாமலிருந்தார்கள். இஸ்லாம் புரிந்து விட்டதால் பெண் கல்விக்கு இஸ்லாம் தரும் மகத்துவம் தெரிகிறது. அதனால் இஸ்லாமிய ஒழுக்கத்தைப் பேணிக் கொண்டே கல்லூரிக்குச் செல்கின்றனர். இஸ்லாமிய நெறிமுறைகளைப் பேணியவாறு இஸ்லாம் வலியுறுத்தும் கல்வியும் பெற முடிகின்ற போது அதில் தடை அவசியமற்றது எனப் பெற்றோரும் தெளிந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;// திருமண விழாக்களில் புர்காவுடன் வலம் வரும் பெண்கள், ஆண்களின் கூட்டத்திடையே இயல்பாக வலம் வருகின்றனர். எதிர் எதிர் வரிசையில் அமர்ந்து விருந்துண்ணுகின்றனர். யாரும் எதற்கும் சங்கடப்படுவதில்லை எல்லாம் இயல்பாக குற்றமற்ற செய்லபாடுகளாக நாம் காணுகிறோம்.//&lt;br /&gt;தங்களை கம்யுனிஸ்டுகளாகச் சொல்லிக் கொள்ளும் சிலரை வேறு சிலர் கம்யூனிஸ்டுகளாக முகமூடி அணிந்தவர்களென சித்தரிக்கின்றனர். இது போல உள்ளவைதான் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆயிஷா, ஸகனாஸ், மதுரைச் சேர்ந்த பாத்திமா, திருச்சியைச் சேர்ந்த பானு முதலானோர். எல்லா இடங்களிலும் அது போன்றவர்கள் உண்டு. இவையொன்றும் முஸ்லீம்களில் மட்டும் உள்ளதல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;புர்கா அணிந்து தம்மை அழகாக மறைத்துக் கொண்டு தம் தேவைகளுக்காக வெளிவர இஸ்லாத்தில் தடை ஏதும் இல்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;//காதுகளையும், நகை அலங்காரங்களையும் மறைத்துக்கொள்ளும் புர்காவெல்லாம் இன்று கிடையாது.//&lt;br /&gt;எதற்காக புர்கா அணிய வேண்டும் எனத் தெரியாமல் கை, கால்கள், உடம்பின் பாகங்கள் வெளித்தெரிய சிலர் அணியும் துணிகளை அவர்கள் என்ன பெயரில் அழைத்துக் கொண்டாலும் அது இஸ்லாமிய உடையாகி விடாது.&lt;br /&gt;&lt;br /&gt;//தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ற இசுலாமிய அமைப்புகள் தமிழக இசுலாமியப் பெண்களை புர்கா அணியச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளனர்//&lt;br /&gt;ஆம். முஸ்லீம்களுக்கு முதலில் இஸ்லாத்தை போதிப்பதில் ஓரளவு வெற்றி பெற வைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.&lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;//&lt;strong&gt;பெண் உழைப்பு&lt;/strong&gt;//&lt;br /&gt;கணவர்தான் இஸ்லாமிய குடும்பத் தலைவர். தலைவர் பொருள் திரட்டும்போது பெண்ணை குடும்பத்துக்காக பொருள் திரட்ட இஸ்லாம் கட்டாயப் படுத்தவில்லை. சொத்துகளை தனியாக அடையவும் அதை முறையாக நிர்வகிக்கவும் பெண்களுக்குள்ள உரிமையை இஸ்லாம் தடுக்கவுமில்லை.   &lt;br /&gt;&lt;br /&gt;இதில் இஸ்லாம் செய்துள்ள குறைகள் என்ன என்று விளக்கினால் தெளிவு படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;//உழைக்கும் பெண்களைப் பொருத்தவரை அன்றும் இன்றும் ஏற்ப்பட்டுள்ள வேறுபாடு முதலாளித்துவத்தின் பண்பாடுதானேயொழிய குனர்ஆனுக்கும் இவர்களுக்கும் வெகுதூரம்//&lt;br /&gt;உங்கள் பிழைப்புக்கு முதலாளித்துவம் பிரபுத்துவம் எதுவானாலும் பெயர் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் இஸ்லாமிய அறிவு பெற்ற நம் தமிழ் சமுதாய பெண்கள் 'இத்தனை பேசுகின்றீர்களே எங்கள் நிலைமையிலிருந்து நாங்கள் வெளிவர என்னென்ன ஏற்பாடுகளைச் செய்துள்ளீர்கள்?' என்று தங்கள் இஸ்லாமிய மற்றும் தார்மீக உரிமையை பொதுவில் வைக்கக் கூடிய திறன் பெற்று விட்டனர். அதனால் உழைக்கும் மக்களோடு எல்லோருக்கும் இஸ்லாமிய அறிவு இன்னும் சிறப்பாக சென்றடையத்தான் நாம் இப்போது அதிகம் முயற்சிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;//பெண்ணின் உழைப்பில் உட்கார்ந்து தின்பதா? அல்லது அவள் வெளிநாடு சென்று சம்பாதிக்க நாம் இங்கே 'பொட்டையைப்' போல் பிரிந்து வாழ்வதா?' சுய கௌரவம் இடம்தரவில்லை. சமூகம் தனக்கு வழங்கியுள்ள விவாகரத்து என்ற அங்குசத்தை நீட்டத் தொடங்கினார்//&lt;br /&gt;இஸ்லாம் புரியத் தொடங்கி விட்ட இந்த கால கட்டத்தில் தலாக் தலாக் தலாக் எனச் சொல்லி விட்டாலும் பிரிந்து விட முடியாது. ஒரு முறையாகவே கணக்கெடுக்கப்படும். அதனால்தான் இந்த அங்குசத்தை அவர் நீட்டத் &lt;strong&gt;தொடங்கினார்&lt;/strong&gt;. சரியான இஸ்லாமியத் தெளிவு நாட்டில் ஏற்படத் தொடங்காமல் இருந்திருந்தால் அவர் அப்போதே முடித்திருப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;//பாத்திமாவோ 'எதுவானாலும் பரவாயில்லை, நான், எனது முன்னேற்றத்தை கெடுத்துக்கொள்ள முடியாது' என்று உறுதியாக வீசிய கவண்கல் வேலை செய்தது//&lt;br /&gt;இஸ்லாத்தில் அவருக்குள்ள உரிமையும் கடமையும் புரியத் தொடங்கி விட்டதாலோ என்னவோ அவரால் கவண்கல் வீச முடிந்தது. பொருள் முதல்வாதம் பேசிக் கொண்டிருந்தால், பொருளையும் இழந்து, யாராரிடமோ சிக்கி சின்னா பின்னமாகி இருப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;//நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. தான் சம்பாதிக்கும் தொகையை தனது பெற்றோர்களுக்கு கொடுப்பதில் கட்டுப்பாடு இருக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக உறுதிமொழிகளைப் பெற்றுக்கொண்டு திருமணம் செய்து கொள்ளும் பெண்களும் இவர்கள் மத்தியில் வளர்ந்து கொண்டுதான் வருகின்றனர்.//&lt;br /&gt;இஸ்லாமிய குடும்பவியலில் குடும்பத்தை நடத்த கணவர்தான் பொருள் கொண்டு வர வேண்டும். குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்புதான் மனைவிக்கு. தான் வேலை செய்து கொண்டே குடும்பத்தையும் சரி வர நிர்வகிக்க முடியும் என்ற நிலையிலிருக்கும் பெண்கள், தாம் பெறும் ஊதியத்தை அவர்கள் விரும்பிய நேர்மையான வழிகளில் செலவிடுவதில் தலையிட, கணவனுக்கு எவ்வித உரிமையுமில்லை. அவளாக விரும்பி அதிலிருந்து ஏதும் கொடுத்தால்தான் பெற்றுக் கொள்ளலாம். இவையனைத்தும் இஸ்லாமிய நெறிமுறைகளை பெண்கள் அறியத் தொடங்கியதால் விளைகின்ற நன்மைகள்தான்  &lt;br /&gt;&lt;br /&gt;//இசுலாமிய பெண் உழைப்பை முதலாளித்தவம்தான் தீர்மானிக்கிறதேயொழிய மதக் கோட்பாடுகள் இல்லை//&lt;br /&gt;இதிலே முதலாளித்துவம் எங்கு வந்தது? அவ்வப்போது முதலாளித்துவம், பிரபுத்துவம், உழைக்கும் வர்க்கம். காலணியாதிக்கம், அடிமைத்தனம் இதில் எதையாவது போட்டால்தான் கட்டுரையை யார் எழுதினார் என்று தெரியும் என்பதற்காக போட்டிருந்தால்... சரிதான் பரவாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் வரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38581011-4117841972173444423?l=islamicfold.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamicfold.blogspot.com/feeds/4117841972173444423/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38581011&amp;postID=4117841972173444423' title='69 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/4117841972173444423'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/4117841972173444423'/><link rel='alternate' type='text/html' href='http://islamicfold.blogspot.com/2010/03/2.html' title='இஸ்லாம் பற்றி வினவுக்கும் சாகித்துக்கும் - 2'/><author><name>சுல்தான்</name><uri>http://www.blogger.com/profile/02533713155036746645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp1.blogger.com/_9Y2isWBuYHw/RkwrDf92mFI/AAAAAAAAAC0/P_VNqlJkxVg/s320/22022006009.jpg&apos;'/></author><thr:total>69</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38581011.post-8398479672626427533</id><published>2010-03-23T03:38:00.005+04:00</published><updated>2010-03-23T03:53:38.680+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாகித்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வினவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><title type='text'>இஸ்லாம் பற்றி வினவுக்கும் சாகித்துக்கும்-1</title><content type='html'>//கதவைத் திறக்காமலேயே உள்ளிருந்தபடியே பதில் சொன்னார் என் நண்பனின் மனைவி. அரைக்கால் ட்ரவுசரை போட்டுக் கொண்டு தெருவில் விளையாடிய போதிலிருந்தே அவன் எனக்கு நணபன்//&lt;br /&gt;அவருக்கு நீங்கள் நண்பன். அவர் மனைவிக்கு நீங்கள் தோழி இல்லையே. அவரது நீண்ட கால நண்பர் என்றதால் அன்பாகச் சொன்னார்கள். அதே தெரியாத ஒருவராக இருந்தால் "அவர் வீட்டில் இல்லை. எப்ப வருவாரோ தெரியாது" என்று முகத்திலறைந்தாற்போல் சொல்லி இருப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;'அவர் எனக்கு சகோதரி மாதிரி' என்பதெல்லாம் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது. &lt;br /&gt;'உடன் பிறந்த சகோதரியா? இல்லையே! இடத்த காலி பண்ணு' - இதுவே இஸ்லாமிய முறை.&lt;br /&gt;இவ்விரண்டில் எது சரி என்று எங்காவது உங்களுக்குத் தெரிந்த இடத்தில் நண்பர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள், கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதுதான் இஸ்லாமா? &lt;br /&gt;இல்லை. தவறு நடக்க ஏதுவான பாதைகளும் அடைக்கப்பட வேண்டும் - இதுதான் இஸ்லாம்.&lt;br /&gt;இது பெண்களுக்கு மட்டுமான சிறையா? இல்லை. இருபாலாருக்கும் பொது. மற்றவர்கள் வீட்டுக்கு போனால் வெளியிலிருந்து ஸலாம் சொல். மூன்று முறை சொல்லியும் பதிலில்லையா? அவ்விடத்தில் நிற்காதே. போய் விடு. &lt;br /&gt;உனக்கு மஹ்ரமில்லாத பெண்ணிடத்தில் தனித்திருக்காதே. ஒரு பெண்ணும் அவளுக்கு மஹ்ரமில்லாத ஆணும் தனித்திருந்தால் மூன்றாவதாக அங்கே (மனதை வழிகேட்டில் இழுக்கின்ற) ஷைத்தான் இருக்கின்றான் - இது இஸ்லாம். (மஹ்ரம்- திருமணம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட உறவினர்கள். உதாரணமாக: பெண்களுக்கு - தந்தை, தமையன், மாமன் முதலியோர். ஆண்களுக்கு - தாய், தமக்கை, மாமன் மனைவி முதலியோர்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//“மாமா” நல்லா இருக்கீங்களா? எப்பவந்தீங்க? என்று நலம் விசாரிக்கும் பண்புக்கு மாறிவிட்டாள்.//&lt;br /&gt;'சரியாகத்தான் சொல்லி இருக்கின்றீர்கள். 'நல்ல பண்பு'&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய பெண்கள் அன்னிய ஆடவர் முன்னிலையில் ஒரு குறிப்பிட்ட அளவு உடை அணிந்திருக்க வேண்டியது அவசியம். அந்தளவு உடை எல்லா நேரத்திலும், குறிப்பாக தன் கணவர், குழந்தைகள் முன் அவசியமில்லை. குறைந்த உடையில் துணி விலக வாய்ப்புகள் அதிகம். எழுந்து மறைவான இடம் செல்வதற்கு இது முதல் முக்கிய காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் சந்திக்க வந்தது அவரை. அவரைச் சந்திப்பதில் தடை இல்லை. &lt;br /&gt;வீட்டுக்கு வந்தவரை உபசரிப்பது நல்ல குடும்பப் பண்பாடு. அவர்களால் இயன்றவரை உங்களை நல்ல முறையில் உபசரிக்கின்றார்கள். &lt;br /&gt;அவர்கள் குடும்பப் பெண்களை பார்க்க வேண்டிய தேவை உங்களுக்கு ஏன்?! அல்லது தேவையின்றி அவர்கள் ஏன் உங்களைப் பார்க்க வேண்டும்?!.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை நாள் மாமா என்றழைத்து விளையாடியிருந்த பெண் (வயதுக்கு வந்து விட்டது என்பதற்காக) ஒரேயடியாய் விலகி விட்டால் வித்தியாசமாகத் தெரியும். அதனால் அம்மாவோட ஒட்டிக் கொண்டு உங்களை விசாரிக்கிறது. படிப்படியாக அதுவும் குறைந்து விடும். &lt;br /&gt;&lt;br /&gt;இதிலே என்ன குறையை கண்டு பிடித்தீர்கள். நல்ல பண்புகளைப் பழகட்டும் பேணட்டும். இருட்டிலிருந்து கொண்டு வெளிச்சத்தை பழிக்காதீர்கள்.  &lt;br /&gt;-----------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;//உழைக்கும் பெண்களிடமும் கடைநிலையில் இருந்த அன்றாடங்காச்சி களிடமும் இந்தப் பண்பாடு வேறாகத்தானிருந்தன//&lt;br /&gt;வண்ணாரப்பேட்டை, திருச்சி குத்பிஷா நகர், பாலக்கரை ஆற்றோரத்தின் அருகில், பாளையங்கோட்டை விவசாயக் குடும்பங்கள் போன்றவர்களிடம் வீடுகளில் மறைவாக இருந்து கொள்ள வசதிகளில்லை என நீங்களே சொல்கிறீர்கள். அவர்களிடம் எண்ணமிருந்தாலும் வீடுகளில் வசதிகளில்லாததால் அப்படி இருக்கின்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் எப்போதுமே ஒருவரது இயலாமைக்காக அவரைக் குற்றம் பிடிப்பதில்லை. வசதியுள்ளவர்கள் அவர்களது இயலாமையைப் போக்க வேண்டும் என்று பணிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களும் வசதி வந்து விட்டால் அதாவது நடுத்தர நிலைமைக்கு வந்து விட்டால், அதன் பின்னர் நீங்கள் சொன்னதுதான்&lt;br /&gt;"தான் மதிப்புமிக்க கௌரவமான குடும்ப பாரம்பரியம் கொண்டவர்கள் என தன்னைக் கருதிக் கொள்ளும் நடுத்தரவர்க்கத்தின் மத்தியில் மட்டுமே இந்தப் பண்பாடு காணப்பட்டது. இவர்களே இசுலாமிய சமுதாயத்தின் பிரதான தூண்களாகவும் இருந்தனர்."&lt;br /&gt;&lt;br /&gt;//எனது நண்பர் கஹாரின் தாயார் விவசாயி. அவர் திருமணம் செய்ததிலிருந்து அவரை கதவுகளும் பாதுகாப்பு செயினும் தடுக்கவில்லை. தலையில் சாணம் சுமந்து விவசாயம் செய்தவர். ஆனால் கஹாரி எலக்ட்ரிசியன் பட்டப்படிப்பு படித்துவிட்டு ஓரளவு சுமாராக சம்பாதிக்கத் தொடங்கியதால் நடுத்தரவர்க்கத்தின் பண்பாட்டினையே கௌரவம் என வரித்துக் கொண்டுவிட்டார்.//&lt;br /&gt;கஹாரின் தாயாரின் சாணம் சுமந்து விற்ற ஏழ்மை. அதனால் இந்தப் பண்பாடுகளைப் பேண முடியாத இயலாமை. வசதி வாய்ப்புகள் வந்ததும் தம்மை சரி செய்து கொண்டுள்ளார். இதிலென்ன தவறு.&lt;br /&gt;-----------------------------------------------------------------------------------&lt;br /&gt;//உலமாக்கள், இந்திய இசுலாமிய அமைப்புகள் போன்றவர்கள் கிராமங்களிலுள்ள ஏழை விவசாயிகளை தன்னுடைய சமூக அங்கமாக ஏற்றுக்கொண்டாலும் சேரிகளில் வாழ்பவர்களையும், அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் பெண்களின் குடும்பங்களையும் கண்டுகொள்வதே இல்லை. இவர்களின் உழைக்கும் வர்க்க பண்பாடு இசுலாமியக் கோட்பாடுவாதிகளுக்கு நெருடலாக இருப்பதே காரணம்.//&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் பிரதானமாக நீங்கள் தவறிழைக்கும் இடம். ஒரு சில காலத்துக்கு முன் இஸ்லாம் சரிவர தெரியாதிருந்த போதுதான் பள்ளிவாசல்களில் சில்லறையை கொடுப்பதும், மக்களை நெருக்கியடிக்க வைத்து சில்லறைகளை விநியோகிப்பதும்தான் ஜகாத் (எனும் ஏழைகளுக்கான வரி) என நினைக்கப்பட்டிருந்தது. இப்போது அது (ஸதக்கா எனும்) சிறிய தர்மம்தான் அதனால் ஜகாத் வழங்கப்பட்டு விட்டதாக எண்ணி விடக்கூடாது என தெளிவாக அறியப்பட்டு விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய அமைப்புகளின் மூலம் உரியவர்களிடம் பெறப்பட்ட ஜகாத், அதைப் பெறத் தகுதியான (நீங்கள் கூறியுள்ளது போலுள்ள) ஏழைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உதவி செய்யப் படுகின்றனர். இன்ஷாஅல்லாஹ் இது தொடர்ந்தால் முஸ்லீம்களில் ஒரு பெரிய மாற்றம் நிகழும். &lt;br /&gt;&lt;br /&gt;எம் ஊருக்கு அடுத்த முஸ்லீம்கள் நிறைந்து வாழும் ஒரு ஊரில் யார் வீட்டில் திருமணம் போன்ற எந்த விருந்து வைபவங்கள் நடந்தாலும் வசதியற்ற அந்த அனைத்து குடும்பங்களுக்கும் உணவளிப்பதாக உறுதியளித்தால் மட்டுமே உலமாக்களும் ஜமாஅத்தினரும் அவ்விருந்துகளில் கலந்து கொள்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லீம்களுக்கும் முஸ்லீமல்லாதவர்களுக்கும் இஸ்லாம் சரிவர புரிய வைக்கப்பட வேண்டும் என (இப்படி தலைகீழாக இல்லாமல் நேர்மையான முறையில்) நீங்களும் எங்களுடன் இயைந்து யோசிக்கின்ற காலம் விரைவில் வர இறைவனை இறைஞ்சுகிறேன்.&lt;br /&gt;------------------------------------------------------------------------------------&lt;br /&gt;                                                           இன்னும் வரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38581011-8398479672626427533?l=islamicfold.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamicfold.blogspot.com/feeds/8398479672626427533/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38581011&amp;postID=8398479672626427533' title='65 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/8398479672626427533'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/8398479672626427533'/><link rel='alternate' type='text/html' href='http://islamicfold.blogspot.com/2010/03/1.html' title='இஸ்லாம் பற்றி வினவுக்கும் சாகித்துக்கும்-1'/><author><name>சுல்தான்</name><uri>http://www.blogger.com/profile/02533713155036746645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp1.blogger.com/_9Y2isWBuYHw/RkwrDf92mFI/AAAAAAAAAC0/P_VNqlJkxVg/s320/22022006009.jpg&apos;'/></author><thr:total>65</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38581011.post-6566535724669741716</id><published>2009-08-26T11:22:00.013+04:00</published><updated>2009-08-26T11:45:49.805+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரமதான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நன்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினப்படிவம்'/><title type='text'>ரமதானில் சரி பார்க்க தினப்படிவம்</title><content type='html'>1. ஸஹ்ர் உணவை பிற்படுத்தி கடைசி நேரத்தில் (பஜ்ர் அதானுக்கு பத்து நிமிடம் முன்பு) உண்டீர்களா?&lt;br /&gt;2. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா?&lt;br /&gt;3. காலைப்  பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா? &lt;br /&gt;4. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா?&lt;br /&gt;5. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா?&lt;br /&gt;6. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா?&lt;br /&gt;7. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா?&lt;br /&gt;8. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா?&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_9Y2isWBuYHw/SpTkDrbvEqI/AAAAAAAAAsA/Gv_5L29znVQ/s1600-h/ramadan.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 209px;" src="http://4.bp.blogspot.com/_9Y2isWBuYHw/SpTkDrbvEqI/AAAAAAAAAsA/Gv_5L29znVQ/s320/ramadan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5374171007209640610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;9. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா?&lt;br /&gt;10. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா?&lt;br /&gt;11. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா? (ஆண்களுக்கு)&lt;br /&gt;12. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா?&lt;br /&gt;13. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா?&lt;br /&gt;14. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா?&lt;br /&gt;15. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா?&lt;br /&gt;16. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா?&lt;br /&gt;17. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா?&lt;br /&gt;18. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா? அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா?&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_9Y2isWBuYHw/SpTnFV_YeeI/AAAAAAAAAsg/8BB19UYhvEI/s1600-h/ramadan1copy.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 219px;" src="http://4.bp.blogspot.com/_9Y2isWBuYHw/SpTnFV_YeeI/AAAAAAAAAsg/8BB19UYhvEI/s320/ramadan1copy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5374174334348196322" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;19. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா? யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா? &lt;br /&gt;20. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா?&lt;br /&gt;21. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா?&lt;br /&gt;22. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா?&lt;br /&gt;23. தர்மம் செய்தீர்களா? (பொருளால்)&lt;br /&gt;24. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா?&lt;br /&gt;25. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா?&lt;br /&gt;26. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா?&lt;br /&gt;27. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா?&lt;br /&gt;28. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா?&lt;br /&gt;29. உங்களுடைய உணவிலிருந்து உங்களை அடுத்துள்ளோருக்கும் நோன்பு திறக்க உதவினீர்களா?&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_9Y2isWBuYHw/SpTmXyyPzaI/AAAAAAAAAsY/YPXU8ARgsEU/s1600-h/ramadan1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 186px;" src="http://1.bp.blogspot.com/_9Y2isWBuYHw/SpTmXyyPzaI/AAAAAAAAAsY/YPXU8ARgsEU/s320/ramadan1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5374173551803747746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;29a. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா?&lt;br /&gt;30. நோன்பை அதன் முதல் நேரத்தில் துரிதப்படுத்தி திறந்தீர்களா?&lt;br /&gt;31. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா?&lt;br /&gt;32. இரவுத் தொழுகையை (அல்லது தராவீஹ்) தொழுதீர்களா?&lt;br /&gt;33. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா? அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா? &lt;br /&gt;34. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா?&lt;br /&gt;35. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா?&lt;br /&gt;36. வித்ரு தொழுகையை தொழுதீர்களா?&lt;br /&gt;37. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா?&lt;br /&gt;38. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா?&lt;br /&gt;39. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெள்ளிக்கிழமைக்கு (கூடுதலாக)&lt;/strong&gt;&lt;br /&gt;40. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா?&lt;br /&gt;41. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா?&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_9Y2isWBuYHw/SpTkgX-5aBI/AAAAAAAAAsI/V5yjGFtaFdE/s1600-h/RamadanBlessings.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 233px;" src="http://1.bp.blogspot.com/_9Y2isWBuYHw/SpTkgX-5aBI/AAAAAAAAAsI/V5yjGFtaFdE/s320/RamadanBlessings.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5374171500204615698" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;42. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா?&lt;br /&gt;43. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒரு வாரத்துக்கு - சிறப்பாக&lt;/strong&gt;&lt;br /&gt;1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா?&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_9Y2isWBuYHw/SpTk0tkzDHI/AAAAAAAAAsQ/vFSH83SvXyM/s1600-h/Ramadan-thumb.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 268px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_9Y2isWBuYHw/SpTk0tkzDHI/AAAAAAAAAsQ/vFSH83SvXyM/s320/Ramadan-thumb.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5374171849598110834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா? யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா?&lt;br /&gt;3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா?&lt;br /&gt;4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா?&lt;br /&gt;5. வேறுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா?  &lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_9Y2isWBuYHw/SpTn9-VVxlI/AAAAAAAAAsw/n8qauupkDtY/s1600-h/2ryj3o3.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 233px;" src="http://3.bp.blogspot.com/_9Y2isWBuYHw/SpTn9-VVxlI/AAAAAAAAAsw/n8qauupkDtY/s320/2ryj3o3.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5374175307250386514" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38581011-6566535724669741716?l=islamicfold.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamicfold.blogspot.com/feeds/6566535724669741716/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38581011&amp;postID=6566535724669741716' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/6566535724669741716'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/6566535724669741716'/><link rel='alternate' type='text/html' href='http://islamicfold.blogspot.com/2009/08/blog-post.html' title='ரமதானில் சரி பார்க்க தினப்படிவம்'/><author><name>சுல்தான்</name><uri>http://www.blogger.com/profile/02533713155036746645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp1.blogger.com/_9Y2isWBuYHw/RkwrDf92mFI/AAAAAAAAAC0/P_VNqlJkxVg/s320/22022006009.jpg&apos;'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_9Y2isWBuYHw/SpTkDrbvEqI/AAAAAAAAAsA/Gv_5L29znVQ/s72-c/ramadan.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38581011.post-4389014457193723650</id><published>2009-03-04T18:36:00.002+04:00</published><updated>2009-03-04T19:14:17.400+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வயிற்றெறிச்சல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழைப்பு'/><title type='text'>உண்மையை விரும்பாத அறிவிலிகளா!?</title><content type='html'>நான் &lt;a href="http://sultangulam.blogspot.com/"&gt; சுல்தான் &lt;/a&gt; என்ற பெயரில் பதிவை ஏற்படுத்தி சில இடுகைகளை இட்டிருக்கிறேன். அந்தப் பதிவிலிருந்த சில இஸ்லாமிய இடுகைகளை தனியே எடுத்து இந்த பதிவைத் தொடங்கினேன். இஸ்லாத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை நீக்குவதற்காக என்னால் இயன்ற முயற்சிதான் இப்பதிவு. தேவையுள்ளவர்கள் அவ்வப்போது வந்து படிக்கிறார்கள். யாரோ ஒரு நண்பர் இன்று லிங்க் கொடுத்ததால், இதைப் பார்வையிட்ட ஒருவருக்கு அல்லது ஒரு குழுமத்திற்கு, இந்த பதிவு பிடிக்கவில்லையென்றால் மூடிக் கொண்டு போக வேண்டியதுதானே. என் இந்த பதிவை ஸ்பேம் என்று ரிப்போர்ட் செய்திருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நல்ல உள்ளங்களுக்கு ஏற்பட்ட வயிற்றெறிச்சலில்தான் நான் உறங்கிப் போனது தெரிந்தது. அவர்கள் வயிற்றெறிச்சலை வளர்க்க இனி அடிக்கடி இங்கேயும் எழுத முயற்சிப்பேன். டைஜின் போன்ற மாத்திரைகளை கொஞ்சம் தாராளமாக கைவசப்படுத்திக் கொள்ளுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;என் நண்பர் ஒருவர் அவர் நண்பரோடு பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரே அறையில் வசித்து வந்தார். பின்னர் நம் நண்பரின் நண்பர் வாழ்வின் முன்னேற்றம் வேண்டி கனடா போய்ச் சேர்ந்தார். அங்கே போன ஓரிரு ஆண்டுகளில் அவர் இஸ்லாத்தை தம் வாழ்வியலாக ஏற்றார். சில மாதங்கள் கழித்து அவர் நம் நண்பருடன் போனில் பேசும் போது தாம் முஸ்லீமான விடயத்தையும் தெரியப் படுத்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நம் நண்பர், "ஏனப்பா இவ்வளவு ஆண்டுகள் என் கூட இருந்தாய். இவ்வாறு ஒரு நாட்டமுள்ளது எனக்கு தெரியவுமில்லை. நீர் சொல்லவுமில்லையே" எனக் கேட்டபோது, அவரோ, "நான் இவ்வளவு ஆண்டுகள் உன்னுடன் இருந்தும் நீ என்றாவது இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லி இருக்கிறாயா?  நீ சொல்லி இருந்தால் எனக்குள் இந்த மாற்றம் முன்னமே நடந்திருக்கலாம். சொல்ல வேண்டியது உனக்கு கடமையில்லையா? ஆனாலும் இறைவன் எனக்கு இப்போதுதான் நாடியிருக்கிறான் போலிருக்கிறது" என்று சொன்னாராம். அதைக் கேட்டதிலிருந்து என் நண்பர் பல நாட்கள் தவித்தது போலவே, நானும் சில நாட்கள் தவித்திருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய கடமை எடுத்துச் சொல்வது மட்டும்தான். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தில் உள்ளது. நேர்வழி கொடுக்கக் கூடியவன் இறைவன் ஒருவன்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனின் நாட்டப்படி இனி தொய்வின்றி தொடத்  தொடர முயற்சிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;சுல்தான்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38581011-4389014457193723650?l=islamicfold.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamicfold.blogspot.com/feeds/4389014457193723650/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38581011&amp;postID=4389014457193723650' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/4389014457193723650'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/4389014457193723650'/><link rel='alternate' type='text/html' href='http://islamicfold.blogspot.com/2009/03/blog-post.html' title='உண்மையை விரும்பாத அறிவிலிகளா!?'/><author><name>சுல்தான்</name><uri>http://www.blogger.com/profile/02533713155036746645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp1.blogger.com/_9Y2isWBuYHw/RkwrDf92mFI/AAAAAAAAAC0/P_VNqlJkxVg/s320/22022006009.jpg&apos;'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38581011.post-9008416890849016136</id><published>2008-12-01T11:01:00.002+04:00</published><updated>2008-12-02T18:20:18.569+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜிஹாதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பஸாதி'/><title type='text'>ஜிஹாதி</title><content type='html'>இந்தியர்கள் பல்வேறு வகைகளில் தனித்துவம் வாயந்தவர்கள். நம் நாட்டில் முக்கியமான நான்கு நம்பிக்கையாளர் மத்தியிலும் சிலர் தீவிரவாதிகளாக உள்ளனர். கஷ்மீரில் முஸ்லீம்கள், நாகலாந்தில் கிறித்துவர்கள், பஞ்சாபில் சீக்கியர்கள், அஸ்ஸாமில் உல்பா இந்துக்கள். மாவோயிஸ்டுகளுக்கும் நக்ஸல்களுக்கும் தீவிரவாதமே துணை. இதல்லாது முக்கியமாக காவி ஹிந்துத்வ தீவிரவாதிகள்.    &lt;br /&gt;&lt;br /&gt;நேர்மையான போரை ஜிஹாத் என்றும், அநீதியாக வன்முறை மூலம் ஒன்றுமறியாத அப்பாவிகளின் மேல் இழைக்கப்படும் கொடுமையை பஸாத்(Fasaad) என்றும் குர்ஆன் தெளிவாக வரையறுத்துள்ளது. நாட்டிலே குழப்பம் விளைவிப்பவன் பஸாதி. எவனொருவன் ஒரு மனிதரை நியாயமின்றி (பஸாத் மூலம்) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான் மேலும், எவரொருவர் ஓர் உயிரை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்' எனச் சொல்கிறது குர்ஆன்(வசனம்32 சூரா5). &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய பார்வையில் குழப்பம் விளைவித்தல் கொலையைப் போன்றது. அதற்கு அதன் கடுமைக்கேற்ப கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல் போன்ற நான்கு விதமான விதமான தண்டணைகளை குர்ஆன் பரிந்துரைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குழப்பம் விளைவிக்கும் ஒரு பஸாதி தன்னை ஜிஹாதி எனச் சொல்லிக் கொள்வதன் மூலம் முஸ்லீம்கள் மத்தியில் தன்னை நியாயப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறான். இவர்கள் மக்களுக்கு மத்தியில், குறிப்பாக முஸ்லீம்களுக்கும் ஹிந்துக்களுக்கும் மத்தியில் வெறுப்பை விதைப்பதற்காக குர்ஆன் வசனங்களுக்கு தவறான பொருள் தருகின்றனர். ஹிந்துத்வாக்களும் அதையேதான் செய்து கொண்டிருக்கின்றனர்.  இவர்கள் இரு பிரிவாருக்கிடையில் எந்த வேற்றுமையும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இறை நம்பிக்கை சார்ந்த விடயங்களில் இரு பிரிவாருக்குள் வேறுபாடுகள் தோன்றி விட்டல் அதில் தீர்ப்பு சொல்லும் அதிகாரம் மனிதனுக்கில்லை அது இறைவனுக்குரியது. "லா இக்ரா பித்தீன் - மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமுமில்லை" என்பதும் "லகும் தீனுக்கும் வலிய்யத்தீன் உங்கள் மார்க்கம் உங்களுக்கு என் மார்க்கம் எனக்கு" என்பதும்தான் இஸ்லாத்தின் வழி. கத்தோலிக்க புலனாய்வுக்குப்பின் வெளியேற்றப்பட்ட ஸ்பெயின் நாட்டு யூதர்களுக்கு உதுமானிய சுல்தான்கள் தங்க இடம் கொடுத்தது தற்செயலாக நடந்ததல்ல. மேற்சொன்ன குர்ஆனின் நெறி. &lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லீம் பெயர் தாங்கிகள் நடத்தும் சண்டைகள் எல்லாம் ஜிஹாத் ஆகி விடாது. எவ்வித உலக இலாபங்களையும் நாடாமல் இறைவனிடம் நன்மையை பெறுவதை மட்டுமே குறியாகக் கொண்டு செய்யப்படும் எல்லா நல்லறங்களும் ஜிஹாத் தான்.  உண்மை அறிஞனுடைய நீதிக்கான பேச்சும், எழுத்தும், பொருள் உள்ளவர்கள் வறியவர்களுக்காகவும் நன்மையான வழிகளில் தர்மமாக செலவு செய்வதும் தன்னைத்தான் தூய்மையாக்கிக் கொள்ளுதல் எனும் பெரும் ஜிஹாத் ஆகும். சிறிய ஜிஹாதுகளில் உள்ளவைதான் போர்கள்.     &lt;br /&gt;&lt;br /&gt;தம் உளத்தூய்மைக்காக செய்யப்படும் ஜிஹாதைப் போல யார் வேண்டுமானாலும் ஜிஹாத் எனும் போர் அழைப்பை செய்ய முடியாது. இஸ்லாம் கடுமையான நிபந்தனைகளுடன் போரை அனுமதித்துள்ளது. அங்கே நம்பிக்கைத் துரோகம், தவறான வழிகளில் கொள்ளையடித்தல், உடல்களை சிதைத்தல், முதியோர், பெண்கள், குழந்தைகள், அப்பாவிகள் ஆகியோரைக் கொல்லுதல், மரங்களை வெட்டுதல், உணவுக்காக அன்றி ஆடு மாடுகளைக் கொல்லுதல் போன்ற யாவும் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்றாகி விடாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாடு தாருல் இஸ்லாம் ஆக இல்லாமல் தாருல் ஹர்ப் ஆக இருந்தால் அங்கே போர் செய்ய இஸ்லாத்தில் அனுமதியுள்ளது. முஸ்லீம்கள் தங்கள் மார்க்கத்தை பின்பற்ற முடியாதவாறு பிற மத ஆட்சியாளர்களால் துன்புறுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு நாடு இருந்தால் அந்த நாடுதான் தாருல்ஹர்ப். மொஹலாயர் வீழ்ச்சிக்குப்பின் மராட்டியர்களும் இராஜபுதனத்தாரும் ஆட்சி செய்த காலம் கூட தாருல்ஹர்ப் எனச் சொல்லப்படவில்லை. முஸ்லீம்களும் அவர்களும் ஒருவருக்கொருவர் உதவியாளர்களாகத்தான் இருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;நமது இந்தியா சோசலிச நாடு ஹிந்து நாடில்லை. நமக்கு முஸ்லீம் தனியார் சட்டத்தை நடைமுறைபடுத்திக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. முஸ்லீம்கள் தங்கள் இஸ்லாமிய நம்பிக்கை படி வாழ நமது அரசியல் நிர்ணயச்சட்டம் உரிமை வழங்கியுள்ளது. மறுக்கப்படும் நமது உரிமைகளுக்காக நாம் நடத்தும் சிறு சிறு போராட்டங்களால் எல்லாம் நாடு தாருல் ஹர்ப் நிலையை அடைந்து விட்டதாக யாரும் நினைத்து விடக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;நீதியும் நியாயமும் மக்களை சமமாகப் பாவித்தலுமே குர்ஆன்படியான வாழ்வு முறையாகும்.&lt;br /&gt;ஜிஹாத் எனச் சொல்லிக் கொண்டு பயங்கரவாதம் செய்வோர் எல்லாம் ஜிஹாதிகளில்லை பஸாதிகள்(வெறும் குழப்பக்காரர்கள்)தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38581011-9008416890849016136?l=islamicfold.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamicfold.blogspot.com/feeds/9008416890849016136/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38581011&amp;postID=9008416890849016136' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/9008416890849016136'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/9008416890849016136'/><link rel='alternate' type='text/html' href='http://islamicfold.blogspot.com/2008/12/blog-post.html' title='ஜிஹாதி'/><author><name>சுல்தான்</name><uri>http://www.blogger.com/profile/02533713155036746645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp1.blogger.com/_9Y2isWBuYHw/RkwrDf92mFI/AAAAAAAAAC0/P_VNqlJkxVg/s320/22022006009.jpg&apos;'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38581011.post-7332539929525197512</id><published>2007-03-17T13:16:00.000+04:00</published><updated>2007-03-17T16:12:42.066+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தருமி ஐயா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரோஷம்'/><title type='text'>தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் கடைசி பகுதி</title><content type='html'>4)//"அவன் படைத்த மனிதர்களாகிய நமக்குள்ளேயே பிறப்பாலோ, செல்வத்தாலோ அல்லது தொழிலாலோ உயர்வும் தாழ்வும் கற்பிக்காதவனாக இறைவன் வேண்டும்."&lt;br /&gt;இக்கூற்றும் சரியாக எனக்குத் தோன்றவில்லை. பார்க்குமிடமெல்லாம் வேற்றுமைகள் நிறைந்த உலகமாகத்தானே இருக்கிறது. படைப்பினில் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறோம்? இல்லையே!//&lt;br /&gt;&lt;br /&gt;ஆம். வேற்றுமைகள் நிறைந்ததுதான் உலகம். படைப்பில் அனைவரும் ஓரே மாதிரியாக இருப்பதில்லை என்பதும் உண்மைதான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவன் படைத்த இந்த வேற்றுமைகளின் அடிப்படையில், அவனது முன்னிலையில், மனிதர்களில் உயர்ந்தவர்கள் தாழந்தவர்கள் என்ற பேதமிருக்கக் கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தில், இறைவனது முன்னிலையில், மேற்கூறிய வேற்றுமைகளின் அடிப்படையிலான உயர்வு தாழ்வு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;5)//"பூமியும் வானமும் அவனது ஒரே வார்த்தைக்குள் ஆகும்"&lt;br /&gt;பின் எதற்கு 6 நாட்கள் படைப்பிற்கு - அதுவும் ஒவ்வொன்றாய்? பின் கடவுள் ரெஸ்ட் எடுத்ததாகவும் உள்ளதே!//&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் ரெஸ்ட் எடுத்ததா:&lt;br /&gt;இறைவனுக்கு ஓய்வு தேவைப்படாது என்று இஸ்லாம் சொல்கிறது. &lt;br /&gt;ஏனெனில் அவன் ஓய்வெடுக்கும் நேரத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் தேவைகளை யாரிடம் கேட்பது என்ற கேள்வி எழுகிறதல்லவா?.&lt;br /&gt;&lt;br /&gt;பின் எதற்கு ஆறு நாட்கள்?&lt;br /&gt;குர்ஆன் அத்தியாயம் 7 வசனம் 54 மற்றும் அத்தியாயம் 10 வசனம் 3லும் அல்லாஹ் வானங்களையும் புமியையும் ஆறு நாட்களில் படைத்ததாக கூறுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் முடிவெடுத்து செய்கின்ற ஒன்றில் கேள்வி கேட்கிற உரிமை யாருக்கும் இல்லை. ஏன் அவ்வாறு செய்தான் என்பது அவனுக்கே வெளிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறு அவன் படைத்ததால், நடைமுறை வாழ்க்கையில் அதனால் மனிதர்களுக்கு எந்த கெடுதலும் வரப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சக்தியை அவன் கூறும் போது,; 'மறுமையில் அவனுடைய ஒரு கைப்பிடிக்குள் பூமி அடங்கும்' என்றும் சொல்கிறான். பார்க்க குர்ஆன் அத்தியாயம் 39 வசனம் 67&lt;br /&gt;&lt;br /&gt;6)(அ)//"தாடி வைக்க வேண்டுமென்று இறை கட்டளை உள்ளதால்..."&lt;br /&gt;இதைக் கூட கட்டளையாகக் கடவுள் கொடுப்பாரா?//&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வின் அனைத்து நிலைகளுக்கும் இஸ்லாம் சில வழிமுறைகளை விதித்துள்ளது. சில கட்டளைகளை வலியுறுத்தி சொல்கிறது. சிலவற்றை தேவையானால் ஏற்று நடக்கச் சொல்கிறது. &lt;br /&gt;சிறுநீர் கழிப்பதில் கூட (மற்ற மனிதர்களுக்கும், அவருக்கும் துன்பமேற்படக் கூடாதென்பதற்காக) சில வழிமுறைகளை சொல்கிறது. &lt;br /&gt;இஸ்லாம் வெறும் சடங்கும் சம்பிரதாயமும் கொண்ட மதமல்ல வாழ்வியல். &lt;br /&gt;&lt;br /&gt;6.(ஆ)தாடி இல்லாதவர்கள் முழு முஸ்லீம்கள் இல்லையா? &lt;br /&gt;தாடி இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட சுன்னத். &lt;br /&gt;நிர்ப்பந்தங்களினால் ஒரு முஸ்லீம் தாடி வைக்கவில்லையென்றால் அவர் குற்றம் பிடிக்கப்பட மாட்டார். தகுந்த காரணமேதுமின்றி ஒருவர் தாடி வைக்காது விட்டால், அவர் ஒரு சுன்னத்தை விட்ட குற்றமிழைத்தவராவார். அது அவருக்கும் இறைவனுக்கும் மத்தியிலுள்ளதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;7அ). //"இஸ்லாத்தை ஏற்று அம்மார்க்கத்தை சரியாகப் பின்பற்றியவர்களுக்கு பரிசாக சொர்க்கமும், இஸ்லாத்தை நிராகரித்தவர்களுக்கு தண்டனையாக நரகமும் வழங்கப்படும் என்று எவ்வித ஒளிவு, மறைவு இல்லாமல், வெளிப்படையாக இஸ்லாம் கூறுகிறது."&lt;br /&gt;&lt;br /&gt;"You are either with us or with them". 9/11 -க்குப் பிறகு ஜார்ஜ் புஷ் சொன்ன இந்த வாக்கியத்தின் பொருளை நான் விளக்க வேண்டியதில்லை. மதத்தின் பெயரால் ஒசாமா செய்ததால் அந்த மதத்தையும், மதத்தைச் சார்ந்தவர்களையும், விரோதிகளாக அவர் பார்த்தார்; அதே போல்தான் எல்லோரும் பார்க்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தார். அவரின் இந்தக் கூற்றுக்கு உலகத்தின் பல நாட்டவரும், பல நாட்டுத் தலைவர்களும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவரைப் பொருத்தவரை அவருக்குச் சரியானதாகத் தோன்றும் ஒன்று, உலகத்தில் எல்லோருக்கும் அதே போல்தான் தோன்ற வேண்டுமென அவர் எதிர்பார்த்ததை உலகம் ஒப்புக் கொள்ளவில்லை. இல்லையா?அதாவது, நீ அந்தப் பக்கமா, இந்தப் பக்கமா என்பதை வைத்துதான் உன் மறு வாழ்க்கையும், அதற்குரிய பரிசு / தண்டனையும் தீர்மானிக்கப் படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புஷ்ஷின் கருத்திற்கும், மேலே சொல்லியுள்ள இஸ்லாமியக் கருத்திற்கும் - ஒன்று மனிதன் கூறியது; இன்னொன்று கடவுளால் கூறப்பட்டதாக நம்பிக்கையாளர்களால் கருதப்படுவது என்பதைத் தவிர. இரண்டுமே கருத்துக்கள் என்ற வரையில் ஒன்றுதானே? ஆனால் ஒன்றை தவறென்று கூறி, இன்னொன்றை எப்படி புனித வார்த்தையாகக் கொள்ளுவது?//&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சில உதாரணங்களின் மூலம் இதற்கு பதிலளிக்கலாம் என எண்ணுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;i. கம்பெனியில்: நன்றாகவும் சரியாகவும் வேலை செய்தால் நல்ல சம்பளமும் பணியில் உயர்வும் தரப்படும். தவறாகவும் குறைவாகவும் வேலை செய்தால் சம்பளக்குறைப்போடு பணி உயர்வும் தரப்படாது என்கிறார்கள். &lt;br /&gt;ii. கல்லூரியில்: சரியான முறையில் வந்து, ஒழுங்காக நடப்பவர்களுக்கு internal assessmentல் நல்ல மதிப்பெண்கள் தரப்படும். சரியாக வராமலும், வந்தால் தகராறு செய்பவர்களுக்கும் குறைந்த மதிப்பெண்களே கிடைக்கும் என்கிறார்கள்.&lt;br /&gt;iii. பள்ளியில்: ஒழுங்காக படித்து நல்ல முறையில் தேர்வெழுதினால் தேர்ச்சி அடைவதோடு வாழ்க்கையிலும் முன்னேறலாம். சரியாக படிக்காமல் தேர்வில் சரியாக எழுதாமல் இருந்தால் தேர்வடைவதிலும் வாழ்வில் முன்னேறுவதிலும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்கிறார்கள்.&lt;br /&gt;iv. கொள்ளையன் ஒருவன்: என்னோடு சேர்ந்து அந்த வங்கியை கொள்ளையடித்தால் வெகு விரைவில் நிறைய பணம் கிட்டும், மகிழலாம். யாராவது வர மறுத்தால் அவர்களை நான் உதைப்பேன், வலிதான் கிடைக்கும் என்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறப்பட்ட நான்குமே "You are either with us or with them" என்ற ஜார்ஜ் புஷ் வாதத்தைப் போன்றதுதானா தருமி ஐயா.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று போல தோற்றமளித்தாலும், அந்தந்ந விடயங்களுக்கு தகுந்தாற் போல் பொருள் மாறுபடும். திருடன் சொல் ஆணவமாகவும் தவறானதாகவும் மற்றவை நேர்மையானதாகவும் இருக்கிறது. எனவே சிந்தனையைப் பயன்படுத்தி நாம்தான் முடிவெடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;7ஆ). //However, my Q is based on the VIOLENCE in the words. whether it is aimed at fidels or infidels it is a very violent statement - a divine violence towards human beings.&lt;br /&gt;a god need and should not bother whether a man reaches him through path A or B ... man should reach him, that is all what it should be.//&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கும் சில உதாரணம் மூலமே விளக்க நினைக்கிறேன் ஐயா.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரக்கணக்கானோர் பணிபுரியம் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் இருக்கிறார். அவருடைய நிறுவனத்தின் சில ஊழியர்கள் அவரை விட்டு விட்டு வேறொருவரை உரிமையாளர் என்கின்றனர். அல்லது, ஒரு கடைநிலை ஊழியர், உரிமையாளர் அமர வேண்டிய இடத்தில் அமர்ந்து கொண்டு, உரிமையாளர் போன்ற ஆணையிடுகிறார் எனக் கொள்வோம்.&lt;br /&gt;உண்மையான உரிமையாளரால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சரியாக விளங்குவதற்காக ஒரு கடுமையான உதாரணம் தருகிறேன். (முகம் சுளிக்க வேண்டாம். கடுமை என நினைப்பவர்களும், பெண்களும் மன்னிக்கவும்.)&lt;br /&gt;தம் மனைவி, மகிழ்வோடு இருப்பதைத்தான் நல்ல கணவன் விரும்புகிறான். அதற்காக ஒருவனது மனைவி வேறொரு ஆணிடம் படுக்கை சுகம் காண்கிறாள். கணவனுக்கும் அவ்விடயத்தில் குறை வைப்பதில்லை எனக் கொள்வோம். எந்த நல்ல ஆண்மகனும்/கணவனும் இதை ஏற்றுக் கொள்வானா? மனிதனுக்கே இவ்வளவு ரோஷம் இருக்கிறதே!&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் அன்பானவன்தான் ஆனால் ரோஷமில்லாதவனில்லை. மனிதனை விடவும் பலகோடி மடங்கு  ரோஷமானவன். "அல்லாஹ் எதை வேண்டுமானாலும் தான் நாடினால் மன்னிப்பான் ஆனால் படைத்தவனாகிய தன்னை விடுத்து, வேறெதையும் இறைவனாக எடுத்துக் கொள்வதை மட்டும் மன்னிப்பதேயில்லை" என்று இஸ்லாம் கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என் அறிவுக்கு எட்டிய வகையில் பதிலளித்திருக்கிறேன். இறைவனே மிக அறிந்தவன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38581011-7332539929525197512?l=islamicfold.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamicfold.blogspot.com/feeds/7332539929525197512/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38581011&amp;postID=7332539929525197512' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/7332539929525197512'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/7332539929525197512'/><link rel='alternate' type='text/html' href='http://islamicfold.blogspot.com/2007/03/blog-post.html' title='தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் கடைசி பகுதி'/><author><name>சுல்தான்</name><uri>http://www.blogger.com/profile/02533713155036746645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp1.blogger.com/_9Y2isWBuYHw/RkwrDf92mFI/AAAAAAAAAC0/P_VNqlJkxVg/s320/22022006009.jpg&apos;'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38581011.post-5448029109668702187</id><published>2007-03-14T15:35:00.000+04:00</published><updated>2007-03-29T16:05:46.777+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகுத்தறிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தருமி ஐயா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><title type='text'>தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் (பகுதி-2)</title><content type='html'>[&lt;a href="http://islamicfold.blogspot.com/2007/01/blog-post.html"&gt; பகுத்தறிவு தீர்ப்பளிக்கட்டும் &lt;/a&gt; என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவில் தருமி ஐயா சில கேள்விகள் கேட்டிருந்தார். விரிவாக விளக்கமளிக்க வேண்டிய கேள்விகளாக இருப்பதால், பதிவின் நீளம் கருதி, தனிப்பதிவுகளாக இட்டு வருகிறேன். &lt;a href="http://islamicfold.blogspot.com/2007/03/1.html"&gt; விளக்கங்களின் பகுதி ஒன்று &lt;/a&gt; அங்கிருக்கிறது. இது இரண்டாம் பகுதி]&lt;br /&gt;&lt;br /&gt;3. //"மனிதனுக்கு மேலாக சர்வ வல்லமை பொருந்திய ஒரு சக்தி உண்டென்று பகுத்தறிவு சொல்கிறது"&lt;br /&gt;இந்தக் கூற்று எனக்குத் தவறாகத்தெரிகிறதே. பொதுவாக பகுத்தறிவு சொல்கின்றது என்று எதை ஒன்றையும் குறிப்பிடுவது தவறாக ஆகிவிடும் என்று நினைக்கிறேன். ஆளாளுக்கு மாறுபடக்கூடிய விஷயமாக பார்க்கிறேன்.//&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக 'பகுத்தறிவு சொல்கிறது' என்று சொல்வது தவறாக ஆகி விடும் என்று நீங்கள்  நினைக்கிறீர்கள். இந்த விடயத்தில் என் பகுத்தறிவு எதைச் சொன்னதோ அதையே வேறொரு அறிஞரும் சொன்னார். அதனால் அதை என் பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளத் தயங்கவில்லை. அது என்னவென்று நான் சொல்கிறேன். மற்றவர்களின் பகுத்தறிவு இதற்கு மாற்றமாக இருக்கிறதா என்று அவரவர்கள் முடிவு செய்யட்டும். &lt;br /&gt;&lt;br /&gt;நாம் உருவாக்கப்பட்டுள்ள விதம், இயங்குவதற்கேற்ற மனித உடலமைப்பு, மனிதர்களின் மாறுபட்ட மன நிலை, புவி மற்றும் வான வெளி, விடாது மாறி மாறி வரும் இரவும் பகலும், &lt;br /&gt;சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவற்றின் ஒழுங்கமைப்பு மற்றும் &lt;br /&gt;கட்டுக்கோப்பான அதன் இயக்கங்களும் தானாகவே வந்ததா?&lt;br /&gt;மனித மூளையின் கட்டுப்பாட்டில் இல்லாத அவற்றின் நிர்மாணத்தையும், அவற்றின் ஒழுங்குகளையும், இயக்கங்களையும், கற்பனையில் கொண்டு வந்து கணிக்கக்கூட இயலவில்லை. மனிதனால் கணிக்கவியலாத இவையனைத்தும் தானாகவே வந்திருக்க முடியுமா? தற்செயலாக நிகழ்ந்தவையா?&lt;br /&gt;&lt;br /&gt;பத்து நிறங்களில் பல கோலி குண்டுகளை எடுத்து, ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு எண்ணாக 1 முதல் 10 வரை இலக்கமிட்டு, ஒரு பையினுள் போட்டு, கண்ணை மூடிக்கொண்டு, ஒழுங்கான வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக 1 முதல் 10 வரை எடுப்பதற்கு உண்டான வாய்ப்பு, நிகழ்தகவு (Probability) படி, சுமார் இரண்டரை கோடி தடவைகளில் ஒன்று என்று சொல்கிறார்கள். எனில், சூரியனிலிருந்து தானாக தூக்கி எறியப்பட்ட ஒரு பொருள் (Big Bang theory) இத்தனை வகையான ஒழுங்குகளோடு அமைக்கப்பட, நிகழ்தகவின்படி வாய்ப்புகள் எத்தனை? Big Bang என அது தானாக வந்ததா? அல்லது ஒரு வல்லமை பொருந்திய சக்தி தூக்கியெறிந்து பின்னர் அதை ஒழுங்குற வடிவமைத்ததா?&lt;br /&gt;&lt;br /&gt;சிறந்த வடிவமைப்புள்ள ஒரு உயர்ந்த கட்டிடம், ஒரு பெரிய விமானம், ஒரு ராக்கெட், ஒரு சேட்டிலைட், பெரிய கப்பல், ஒரு வாகனம் அல்லது பாலமொன்றை  நீங்கள் பார்ப்பதாகக் கொள்வோம். உடனடியாக அதை வடிவமைத்துக் கட்டிய கம்பெனி அல்லது பொறியாளரைப் பற்றி மனது சிந்திக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அணுகுண்டு தொழில் நுட்பம் பற்றி சிந்தித்தால் குடியரசுத்தலைவர் அபுல்கலாம் நினைவுக்கு வரும் அல்லது ஸ்ரீஹரிகோட்டா சென்று ராக்கெட் வடிவமைக்கும் இடத்தை பார்வையிட்டால் உடனடியாக அவற்றை வடிவமைத்த அறிவியல் அறிஞர்களையம் பொறியியலாளர்களையம் நாம் சிந்திப்போம்.   &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது,&lt;br /&gt;மனித மூளையைப் பற்றி சிந்தியுங்கள். எப்படி அது சிந்திக்கிறது? இயங்குகிறது? தகவல்களை திரட்டுகிறது? சேகரிக்கிறது? தேவைப்படும்போது சரியானதை பிரித்து எடுத்துத் தருகிறது? ஒன்றோடொன்றை தொடர்பு படுத்துகிறது? இவையனைத்தையும் ஒரு வினாடியின் ஆயிரத்திலொரு பங்கு நேரத்தில் எப்படிச் செய்கிறது? அதையும் எப்படி தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கிறது? இந்த மூளைதான் வான் முட்டும் கட்டிடங்களையும், விமானத்தையும், ராக்கெட்டையும், சேட்டிலைட்டையும், கப்பலையும், பாலத்தையும் இன்ன பிற காண்பவற்றையும் வடிவமைத்தது - தொழில் நுட்பத்தை உருவாக்கியது! மனித மூளையைப் பற்றி மேலும் சிந்தியுங்கள். அதை யார் இத்தகைய ஒழுங்குடன் உருவாக்கியது? &lt;br /&gt;&lt;br /&gt;இதயத்தை பற்றி சிந்தியுங்கள். சுமார் அறுபது அல்லது எழுபது ஆண்டுகள் இடைவிடாமல் தொடர்ந்து எவ்வாறு மனித உடலுக்குள் குருதியைப் பெற்று, அதை உடலின் எல்லா பாகங்களுக்கும் தொடர்ந்து எவ்வாறு இறைத்துக் கொண்டேயிருக்கிறது?. அது அம்மனித வாழ்நாள் முழுதும் தொடர்ந்து எவ்வாறு இயஙகிக் கொண்டேயிருக்கிறது? &lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரகத்தின் பணிகளை சிந்தித்துப் பாருங்கள். அது மனித உடலின் சுத்தப்படுத்தும் இயந்திரம். அது ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து, நூற்றுக்கணக்கான வேதி வினைகளைப் புரிந்து, இரத்தத்தை பகுத்தாய்ந்து, மனித உடலின் நச்சுப் பொருட்களின் அளவை கூடாமல் கண்காணிதது வருகிறது. இவையனைத்தையும் அது தொடர்ந்து தானாகவே நடத்திக் கொண்டே இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கண்களைப் பற்றி சிந்தியுங்கள். அது மனித கேமரா. தீர்மானித்தல், focus செய்தல், என்னவென்று மதிப்பீடு செய்தல், மூளையை அறியச்செய்தல், தேவையான அளவு நிறங்களை வழங்குதல், வெளிச்சத்தின் அளவுக்கேற்றவாறு தன் உள் வெளிச்சத்தை கூட்டுதல் அல்லது குறைத்தல், தூரத்துக்கேற்றவாறு சரி செய்து கொள்ளுதல் ஆகிய இவையனைத்தையும் தானாகவே செய்து கொள்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இவற்றையெல்லாம் யார் உருவாக்கியது என சிந்தியுங்கள். அவற்றின் எஜமானன் யார்? இவ்வாறு இருக்க வேண்டுமென முடிவு செய்தது யார்? யார் அவற்றின் பணிகளை ஒழுங்குற நிர்வகிக்கிறார்கள்? மனிதர்கள் தமக்குத் தாமே செய்து கொண்டார்களா? நிச்சயமாக இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இனி இந்த அண்டம், பேரண்டம் இவைகளைப் பற்றி சிந்தியுங்கள். இப்புவியானது நமது சூரியக்குடும்பத்திலுள்ள(solar system) ஒரு கோள்(planet). பால் வீதியிலுள்ள(milky way) பல குடும்பங்களில் நமது சூரியக்குடும்பமும் ஒன்று. நமது பால்வீதி என்பது பால்வீதி மண்டலத்தி(galaxy)ல் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டம்(constellation).  இது போன்று பல இலட்சக்கணக்கான பால் வீதி மண்டலங்கள் அறியப்படாமலேயே இருக்கின்றன. (நமது சூரியக்குடும்ப ஆராய்ச்சியே இன்னும் முடிவுறாத தூரத்தில்....!) இவையனைத்தும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கமைப்பில், இம்மியும் பிறழாமல், தங்களுக்கென வரையறுக்கப்பட்ட பாதையில் தொடர்ந்து நீந்திக் கொண்டேயிருக்கின்றன. அவை தங்கள் பாதையில் முரண்படுவதுமில்லை. மோதிக்கொள்வதுமில்லை. இவற்றை மனிதர்களா அவற்றின் பாதையில் மிதக்க விட்டார்கள்? இம்மியும் பிறழாமல் செல்ல வடிவமைத்தார்கள்?. நிச்சயமாக இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இனி கடல்கள், மீன்கள், பூச்சிகள், பறவைகள், தாவரங்கள், பாக்டீரியா, இன்னும் அறியப்படாத, நாம் கண்டுபிடித்து வைத்துள்ள மிக உயர்ந்த கருவிகளாலும் காண முடியாத பல கோடி வேதிப்பொருட்கள் என்பனவற்றை சிந்தித்துப் பாருங்கள். எனினும் இவையனைத்தும் தங்களுக்கென விதிக்கப்பட்டுள்ள விதிப்படி இயங்கிக் கொண்டுதானிருக்கிறது என அறிவியல் சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே நேரத்தில் நிகழ்கிற, ஒன்றுக்கொன்று தொடர்புடைய, ஒன்றோடொன்று பொருந்துகிற, சமன்செய்யப்பட்ட, இத்தகைய திட்டங்கள், அவற்றைப் பராமரித்தல், அவைகளில் ஏற்படும் மாற்றங்கள், செயல் ஒழுங்குகள் இன்னும் முடிவுறாத எண்ணிறந்தவைகள் ஆகிய இவையனைத்தும் தானாகவே, தற்செயலாக உண்டாயிருக்குமா?  &lt;br /&gt;&lt;br /&gt;அவை நிரந்தரமாக, தவறின்றி, ஒழுங்கு குலையாமல் நடைபெறுவதும் தானாக, தற்செயலாக நடப்பதுதானா? &lt;br /&gt;&lt;br /&gt;அவை தொடர்ந்து மறு உற்பத்தி செய்து கொள்வதும், பராமரித்துக் கொள்வதும், தானாகவே, தற்செயலாகவே நடைபெறுவதுதானா?&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக இருக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;தானாகவே தற்செயலாகவே வந்தது என்று நினைப்பது பொருத்தமற்றதாகவும் முட்டாள்தனமாகவும் என் பகுத்தறிவுக்குத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அது எவ்வாறு வந்ததென்று இருந்தாலும், குறைந்த பட்சம் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது என்றும், இவையனைத்தையும் திட்டமிடவும், படைக்கவும், சீராக்கவும், பாதுகாக்கவும் அறிவு படைத்த, சர்வ வல்லமை பொருந்திய ஒரு சக்தியாலேயே இவையனைத்தும் ஏற்படுத்தப்பட்டதாகவும் என் பகுத்தறிவு சொல்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அவரவர்கள் தத்தமது பகுத்தறிவை தட்டி முடிவு கேட்டுக் கொள்ளுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இதைத்தான்,&lt;br /&gt;வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது இன்னும் அல்லாஹ். ஓவ்வொன்றின் மீதும் மிகுந்த சக்தியுடையவன். நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியை படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் சிந்தித்து உணருவோருக்குப் பல சான்றுகள் இருக்கின்றன. சிந்தித்துணரும் அத்தகையோர் நின்று கொண்டும், படுத்துக் கொண்டும,; ஒருக்களித்துப் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைத்து, வானங்கள் மற்றும் பூமியின் படைப்பை ஆழ்ந்து சிந்தித்து, 'எங்கள் இரட்சகனே! நீ இவற்றை வீணுக்காக படைத்து விடவில்லை. உனக்கு இணையாக்கப்படுபவை அனைத்தையும் விட நீ மிகவும் தூயவன், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை காத்தருள்வாயாக!' என்று பிரார்த்திப்பார்கள். (அத்தியாயம் 3ல் 189 முதல் 191 வரை உள்ள வசனங்களின் கருத்துகள்)      &lt;br /&gt;என்று குர்ஆன் கூறுகிறது. இன்னும் பல நூற்றுக்கணக்கான வசனங்களில் மனிதனை சிந்திக்க அழைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(பதிவு நீண்டதாக இருப்பதால், படிக்க சோர்வேற்படாதிருக்க பகுதி பகுதியாக எழுதுகிறேன். மீதமுள்ள கேள்விகளுக்கு அடுத்த பதிவில் எழுதி, முடிக்கிறேன்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38581011-5448029109668702187?l=islamicfold.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamicfold.blogspot.com/feeds/5448029109668702187/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38581011&amp;postID=5448029109668702187' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/5448029109668702187'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/5448029109668702187'/><link rel='alternate' type='text/html' href='http://islamicfold.blogspot.com/2007/03/2.html' title='தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் (பகுதி-2)'/><author><name>சுல்தான்</name><uri>http://www.blogger.com/profile/02533713155036746645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp1.blogger.com/_9Y2isWBuYHw/RkwrDf92mFI/AAAAAAAAAC0/P_VNqlJkxVg/s320/22022006009.jpg&apos;'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38581011.post-1981548047303787120</id><published>2007-03-14T13:25:00.000+04:00</published><updated>2007-03-14T13:58:07.425+04:00</updated><title type='text'>தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் (பகுதி-1)</title><content type='html'>நான் புதிய வீடு பார்த்து, மாறுவதற்கான முயற்சிகளில், தங்களுக்கு உடனுக்குடன் விளக்கமளிக்க இயலாதிருந்தது. தாமதத்துக்கு வருந்துகிறேன்.&lt;br /&gt;இறைவன் நாடினால், இன்னும் ஓரிரு வாரங்களில் புது இடத்தில் முழுதும் செட்டிலாகி (settle) விடுவேன். அதன் பின், நிலைமை சீராகி விடும் என நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி ஒவ்வொன்றாக உங்கள் கேள்விக்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. //வன்முறைக்கும் துவேசத்துக்கும் இங்கே இடமேயில்லை. இது உங்கள் கருத்து.&lt;br /&gt;எனது கேள்வி:&lt;br /&gt;ஹ்ல்ரத் அலீ (ரலி): "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதந்தான் சிறந்த வழி. ...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான்.&lt;br /&gt;உங்களது வார்த்தைகளுக்கும், இந்த மேற்கோளுக்கும் உள்ள வித்தியாசம் ஏன்?//&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள், அலி (ரளி) அவர்களுடைய கூற்றை எடுத்துக்காட்டி,  எனது வார்த்தைக்கும், இந்த மேற்கோளுக்கும் வித்தியாசம் என்று கூறியுள்ளீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு பதில் சொல்லும் முன், இஸ்லாத்தைப் பற்றிய சிறு அறிமுகம் அவசியமாகும். அப்போதுதான் பதிலின் யதார்த்தம் இயல்பாய் விளங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தில் இணைய விரும்புபவர் நன்றாக அறிந்து, யோசித்து முடிவெடுக்க வேண்டும். இந்த உலக வாழ்க்கையே பெரிதென்றும், போதுமென்றும் நம்புபவர்களுக்கு இஸ்லாம் சிறந்த முடிவாக இருக்காது. ஏனெனில், இஸ்லாம் இறப்பிற்கு பின்னுள்ள மறுமை வாழ்க்கையை அடிப்படையாக நோக்குவது. இவ்வுலக வாழ்க்கைதான் நம் மறுமை வாழ்வுக்கு நாமிடுகிற அடித்தளம் என்று இஸ்லாம் கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'இவ்வலகத்தின் சுக போக வாழ்வே எல்லாம்' என்று நினைப்பவர்களின் பார்வையில், உண்மையான இறை நம்பிக்கையாளனுடைய இவ்வுலக வாழ்க்கை, சிறை வாழ்க்கையாகவே காட்சி தரும். ஏனெனில் கட்டுப்பாடுகளில்லாத சுகபோக வாழ்க்கையையே  மனிதன் ஆசிக்கிறான். இஸ்லாம், வெறும் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் உள்ளடக்கிய மதமன்று. அது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கடைபிடித்தொழுக வேண்டிய நெறிமுறைகளை சொல்லித் தந்து, அதன்படி வாழ வழிகாட்டும் ஒரு உயரிய வாழ்வியல்.       &lt;br /&gt;&lt;br /&gt;அதனால்தான் இஸ்லாத்தில் முழுதுமாக நுழைந்து விட வேண்டுமென்று  இஸ்லாம் பணிக்கிறது. 'ஆற்றில் ஒரு காலும், சேற்றில் ஒரு காலும்' வைத்துக் கொண்டு வாழ்பவர்களால் இஸ்லாம் எதிர்பார்க்கும் உயர்வைப் பெற முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் எடுத்துக்காட்டிய மேற்கோள், இஸ்லாத்தை தன் வாழ்வியலாகத் தேர்ந்தெடுத்தவர்களைப் பார்த்துச் சொன்ன நபிகளாரின் வாசகமாகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடிப்படையில் முடிவெடுத்தால் இஸ்லாத்தில் பல பிரிவினைகள் எற்பட்டு மார்க்கம் துண்டு துண்டாகி விடும். உதாரணத்துக்கு: (எந்தவொரு பிரிவினரையும் புண்படுத்துவதோ குற்றம் சொல்வதோ என் நோக்கமன்று) &lt;br /&gt;&lt;br /&gt;அ.) கிறிஸ்துவத்தில் ஏகப்பட்ட பிரிவுகள் இருப்பதற்கு முக்கியமான ஒரு காரணம்: அவர்களின் மூல நூலாகக் கொள்ள வேண்டிய பைபிளே பல மாதிரியாக இருப்பதும், அவரவர் கையிலுள்ளதைக் கொண்டு, ஒவ்வொரு குழுவும் தனித்தனி சட்டங்களை உருவாக்கி கொண்டதும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆ.) இஸ்லாத்தை விளக்கிச் சொல்ல வந்த சில முந்தைய அறிஞர்கள் (போற்றுதலுக்குரிய இமாம்கள்), குர்ஆனையும், அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு கிடைத்த, நபியவர்களின் (வாழ்வும், வாக்கும், ஒப்புதலும்) ஹதீஸ்களையும் அடிப்படையாக கொண்டு சட்டங்களை அமைத்துச் சென்றனர். 'எமக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் சட்டமியற்றினோம். ஆதாரங்களை நோக்காமல் வெறுமனே எம் சட்டங்களை நோக்கலாகாது. இதைவிட சிறந்த ஆதாரங்கள் கிடைக்குமிடத்து எம் சட்டங்களை தூக்கியெறிந்து விட வேண்டும்' என்றும் சொல்லிச் சென்றனர்.  &lt;br /&gt;ஆனால் அவர்களது சட்டங்களை எடுத்துக் கொண்ட முஸ்லீம்களில் சிலர், (குர்ஆனும் எல்லா ஹதீஸ்களும் தரம் பிரிக்கப்பட்டு புத்தக வடிவில் கிடைக்கும் இந்நாளிலும்) அவர்கள் கூறிய அடிப்படையை விட்டதால், இஸ்லாத்தின் ஒரு சில உள் சட்டங்களினுள் சில வித்தியாசங்களை ஏற்படுத்தி விட்டனர். இந்த மாயை, தற்போது விளக்கப்பட்டு, விலகிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வந்த நபிகளார், முஸ்லீம்கள் தங்களிடையே ஏற்படும் எல்லா பிணக்குகளுக்கும் பூசல்களுக்கும் தீர்வை, அடிப்படையான குர்ஆனைக் கொண்டே பெறச் சொல்கின்றனர். அவ்வாறு தீர்ப்பளிக்காவிட்டால் மக்கள் சிதறுண்டு விடுவார்கள். அதனால் அவ்வாறு தீர்ப்பளிக்காதவர்கள் இறப்பிற்கு பின்னுள்ள மறுமை வாழ்வில் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள் (நொறுக்கப்படுவார்கள்) என்று எச்சரிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய பார்வையில் குழப்பம் விளைவித்தல் கொலையைப் போன்ற கொடுமையானது. இஸ்லாம் தவறு செய்தவர்களுக்கு தவறுகளுக்கேற்ப மறுமையின் தண்டணையை கடுமையாக்கியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இதிலே இவ்வுலகின் வன்முறையையும் துவேசத்தையும் குறிப்பிடவில்லை. மாறாக, இறப்பிற்கு பின்னுள்ள மறுமை வாழ்வின் தண்டணையைப் பற்றி குறிப்பிடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;(நீங்கள் மேற்கோள் காட்டீய ஹதீஸ் திர்மிதீ என்ற நூலில், நபியவர்கள் அவ்வாறு சொன்னதாக அலி (ரளி) அவர்கள் கூறியதை ஹாரிஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள். தாங்கள் நூல் குறிப்பிடாததால், இதைத் தேடுவதில் புகாரீ, முஸ்லீம் ஹதீஸ் கிரந்தங்களில் ஓரிரு நாட்கள் வலம் வந்தேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;2. //"அது அல்லாத (வேறு கிரந்தத்)தில் நேர்வழியைத் தேடுபவரை வழிதவறச் செய்து விடுவான்." இஸ்லாத்தில் எவ்வித நிர்பந்தமுமில்லை என்பதும் இதன் அடிப்படைகளில் ஒன்று.//&lt;br /&gt;&lt;br /&gt;'இஸ்லாத்தில் எவ்வித நிர்ப்பந்தமுமில்லை' என்பதை தாங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்களோ என ஐயுறுகிறேன் ஐயா!&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை (எனும் நேர்வழி) எது! பொய் (எனும் தவறான வழி) எது! என பிரித்தறிவிக்கப்பட்டு, தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. அதை முயற்சி செய்து அறிந்து, தெளிந்து, அதன் மூலம், நேர்வழி அல்லது தவறான வழி இரண்டில் எதை வேண்டுமானாலும் ஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அவரவர் தேர்ந்தெடுத்து வாழ்ந்த வாழ்க்கைக்குரிய நன்மை, தீமைகளை அவர்கள், மறுமை எனும் நிரந்தர வாழ்வில் அனுபவிப்பார்கள் என்பதே இஸ்லாம் கூறுவதாகும். &lt;br /&gt;&lt;br /&gt;எனவே 'இஸ்லாத்தில் நுழைந்தாக வேண்டுமென யார் மீதும் எவ்வித நிர்ப்பந்தமுமில்லை' என்பதே அதன் விளக்கமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில், ஒருவர் இஸ்லாத்தில் நுழைந்த பின், தான் தோன்றித்தனமான வாழ்க்கை வாழ்ந்தால் அவர் சிறந்த முஸ்லீமாக முடியாது. வாழ்வின் எல்லா நிலைகளிலும் இஸ்லாமிய வாழ்வியலுக்கு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தாலே, இவ்வுலகில் அவர் மனிதத்தை நிலை நிறுத்தி புனிதராக வாழ முடியும். (இந்த உண்மையை வாழ்வின் ஒவ்வொரு கோணத்திலும் எங்களால் உணர முடிகிறது. அந்த நல்வழிகளில் வாழ முயற்சிப்பதையே ஒவ்வொரு முஸ்லீமும் தன் வாழ்வின் இலட்சியமாகக் கொள்கிறான்). மறுமையிலும் சிறந்த பயன்களைப் பெற முடியும் என இஸ்லாம் சொல்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தினுள் நுழைந்த பின்னர், பல கிரந்தங்களில் நேர்வழியைத் தேடும் ஒருவனால் வழி தவறத்தான் முடியுமே ஒழிய, இஸ்லாம் கூறும் உன்னத வழியை அடைய முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தை தேர்ந்தெடுக்கு முன், இஸ்லாம் உள்பட எல்லா வழிகளையும் சோதிக்கலாம். இஸ்லாம்தான் சரியான வழி என்று தேர்வு செய்து, நுழைந்த பின் அதில் உறுதியுடன் வாழ வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;(விடயம் நீண்டதாக இருப்பதால், படிக்க சோர்வேற்படாதிருக்க பகுதி பகுதியாக எழுதுகிறேன்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38581011-1981548047303787120?l=islamicfold.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamicfold.blogspot.com/feeds/1981548047303787120/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38581011&amp;postID=1981548047303787120' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/1981548047303787120'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/1981548047303787120'/><link rel='alternate' type='text/html' href='http://islamicfold.blogspot.com/2007/03/1.html' title='தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் (பகுதி-1)'/><author><name>சுல்தான்</name><uri>http://www.blogger.com/profile/02533713155036746645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp1.blogger.com/_9Y2isWBuYHw/RkwrDf92mFI/AAAAAAAAAC0/P_VNqlJkxVg/s320/22022006009.jpg&apos;'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38581011.post-7557600043812474148</id><published>2007-02-17T19:47:00.000+04:00</published><updated>2007-03-29T16:10:03.895+04:00</updated><title type='text'>அரபிக்குதிரையால் ஏமாந்த ஏமாறாதவன்</title><content type='html'>&lt;a href="http://ayemarathavan.blogspot.com/2007/02/blog-post.html"&gt; ஏமாறாதவன் என்ற பெயரில் எழுதும் வலைப்பதிவரின் &lt;/a&gt; இந்த பதிவுக்கு என்னுடைய பதில் இது.)&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவர் ஏமாறாதவன், நான் இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்றுள்ளதால், எனக்காக மிகவும் வருந்தியுள்ளார். பாவம். &lt;br /&gt;&lt;br /&gt;//பதிவர் திரு.சுல்தான் அவர்கள் சமீபத்தில் இரு பதிவுகளை தந்திருக்கிறார். சவுதிதான் இஸ்லாமா என்று எழுதினார். பின்னர், திருப்தி இல்லாமல் அதன் இரண்டாம் பாகத்தையும் போட்டார். (இதை போட இரவு முழுக்க ஆனதாம். ஏனென்றால், அவர் தரப்பு வாதங்கள் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை போலும்...)//&lt;br /&gt;தேவையில்லாமல் இஸ்லாத்தை வம்புக்கிழுத்த ஒரு நண்பரின் பதிவுக்கு பதிலாக, என் முதல் பதிவை எழுதினேன். என் பதிவுக்கு அந்த நண்பர் தன் மறுப்பை பதிலாகப் பதிந்த பின், அதற்கு விளக்கமாக, அடுத்தொரு பதிவையும் அது சம்பந்தமாக வெளியிட நேர்நதது. ஏமாறாதவன் என்றால் இதற்கெல்லாம் வம்பு பேசத் தோன்றுமோ!&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஏமாறாதவன் போல் நன்றாக எழுதத் தெரிந்த அறிவாளி இல்லைதான். தமிழில் வேகமாக தட்டச்சு செய்யவும் தெரியாது. இஸ்லாத்தை முழுதும் அறிந்தவனாக மார்தட்டிக் கொள்ளவுமில்லை. ஆதாரமில்லாத விடயங்களை எழுதினால், என் இஸ்லாமிய சகோதரனே என் தலையில் கொட்டுவான். அதனால் சில சமயம் தெரிந்தவர்களிடம் கேட்க நேரிடும் அல்லது தேட நேரிடும். பெரிய பதிவாகி விட்டதனால் தாமதம் ஆனது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் குறிப்பிட்ட நேரம், என் உறங்கும் நேரத்தின் பெரும் பகுதி. இரவின் முழுமை என்பது நான் குறிப்பிட்ட நேரம்தான் என்பது ஏமாறாதவன் போன்ற அறிவாளிகளுக்கே வெளிச்சம். &lt;br /&gt;&lt;br /&gt;//திரு.சுல்தான் அவர்கள் மிகவும் முயன்று இஸ்லாமுக்கு அலங்காரம் செய்து அதன் ஈனங்களை மறைக்கப்பார்த்திருக்கிறார்.&lt;br /&gt;இஸ்லாமின் கோட்பாடுகளின் கோரம் முஸ்லிம் அல்லாத எல்லோருக்கும் தெரியும்.//&lt;br /&gt;இஸ்லாமிய கோட்பாடுகளின் அழகையும், மேன்மையையும், தமது கைகளாலேயே தம் கண்களை மறைத்துக் கொண்டவர்களாலும், தம் இதயங்களை பூட்டிக் கொண்டவர்களாலும் உணர முடியாதுதான். அவரது கைகளில் மறைத்து வைத்திருக்கும் ஈனங்கள்தான், இஸ்லாத்திலும் இருக்குமென நினைந்து, பரிதாபமாக ஏமாந்து நிற்கிறார் ஏமாறாதவன். பாவம். அவர் கண்களும் இதயங்களும் திறக்க இறைவன் அருளட்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அது போகட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;//இஸ்லாமிய பல்லாயிரக்கணக்கான அழுக்கின் ஒரு பாகத்தை திரு.சுல்தான் அவர்களின் சப்பைக்கட்டில் படித்தபோது சிரிப்பு வந்தது.//&lt;br /&gt;உங்களுக்கு சிரிப்பு மூட்டிய பகுதிகளைப் பார்த்து, விளக்கம் சொல்லாமல் நீங்கள் மட்டும் சிரித்து, அதை மற்றவர்கள் மரைகழன்ற சிரிப்பாக யூகிக்க விடாதீர்கள். ஏமாறுவீர்கள் ஏமாறாதவன்!.&lt;br /&gt;&lt;br /&gt;//அல்லாஹ் அரபிக்களை ஏன் இறைதூதராக தேர்ந்தெடுத்தார் என்று அல்லாஹ் சொல்வதை இந்த நல்ல மனிதர் பார்க்கவில்லை//&lt;br /&gt;அல்லாஹ் என்ன சொன்னார் என்று தெரியாததால் ஏமாந்து விட்டீர்கள் ஏமாறாதவன். &lt;br /&gt;உலகத்தின் எல்லா பகுதிகளுக்கும் தன் தூதரை அனுப்பியதாகவும், அவனுடைய தூதுவர் வராத சமுதாயமே இல்லையென்றுமல்லவா சொல்கிறான். ஒவ்வொரு சமுதாயத்துக்கும் அவர்கள் பேசும் மொழி பேசக்கூடியவரையே தூதராக அனுப்பியதாக வேறு சொல்கிறான். &lt;br /&gt;பாவம் ஏமாறாதவன். இன்னும் கொஞ்சம் புரட்டுங்கள். நேர்வழி இன்னதென்று தெரியவும் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;//ஒரு சவுதி பெண்ணை ஒரு பங்களாதேஷி கட்ட முடியுமா? இது குறித்து ஷரிய்யா என்ன சொல்கிறது என்று திரு.சுல்தான் அறிவாரா?//&lt;br /&gt;அரபிகளுக்கு, அஜமியை (அரபியல்லாதவர்களை) விடவும், அதுபோல் அரபியல்லாதவர்களுக்கு, அரபியர்களை விடவும் எந்த மேன்மையுமில்லை. அவரவருடைய இறையச்சம்தான் மேன்மையை அறிவிக்கும் என ஷரீயா சொல்கிறது.&lt;br /&gt;இறையச்சமில்லாத அழகான ஆண்மகனை விடவும், இறையச்சமுள்ள ஒரு அடிமை மேலானவன் என்றும் ஷரீயா சொல்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அரபிகள் நமக்கு பெண் தராததற்கு காரணம் அப்பெண்களுக்குத் தேவையான வசதிகளைத் தர நம்மால் இயலாது என்பதால்தான். இந்திய மற்றும் பாகி, பங்காளி மக்கள் இஸ்லாம் என்ற பெயரில் செய்யும் அனாச்சாரங்களையும் அவர்கள் வெறுக்கிறார்கள். ஒவ்வொருவரும் தனக்கு அறிமுகமான, நாட்டில் சாதாரணமாக பழக்கத்திலுள்ள, தேவையானால் உடனே சென்று தட்டிக்கேட்கிற அல்லது ஆறுதல் தருகிற இடத்தில்தான் தன் பெண்ளைக் கொடுக்க விரும்புவர். வேறெந்தக் கட்டுப்பாடும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் அரேபியாவில் மட்டுமில்லை, அமைந்தகரையில் உள்ள பெற்றோருக்கும் உள்ள நிலைதான். எல்லா நல்ல பெற்றோர்களும், தன் மகளுக்கு தான் கொடுத்த வசதிகளை விடவும் சிறந்த வசதிகளை தரக்கூடிய நல்ல மணமகனையே தேர்நதெடுக்க முயற்சிப்பர். திருமண வயதுடைய பெண் குழந்தைகள் உங்களுக்கு இருந்தால் அவர்களை ஏமாற்றமல் இருங்கள் ஏமாறாதவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அரபிகளைக் கட்டுமளவுக்கு வசதிகளைப் பெற்றுள்ள நமது நாட்டவர்களும் தன் சுற்றத்திலேயே, தான் மிகவும் அறிந்தவர்களிலேயே, நாட்டில் சாதாரணமாக பழக்கத்திலுள்ளது மாதிரியே, தேவையானால் உடனே சென்று தட்டிக்கேட்கிற அல்லது ஆறுதல் பெருகிற இடமாகப் பார்த்துதான் மணமுடிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணைத் திறந்து கொண்டு பேசாமல் உங்கள் சுற்றத்திலேயே தேடுங்கள். நான் சொல்வது கொஞ்சம் புரியக்கூடும். புலம் பெயர்ந்தவர்களில், வேறு வழியில்லாமல், சில விதிவிலக்குகள் இருக்கும். அரபிகளிலும் அது அப்படித்தான். &lt;br /&gt;&lt;br /&gt;என் ஊர் லெப்பைக்குடிக்காடு. எனது ஊரில், எங்கள் தெருவில் வசித்த ஒரு முஸ்லீமுக்கு தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தவர் துபையில் உள்ள அரபி. அந்த என் ஊர் சகோதரருக்கு பெண் பிறந்து, அதற்கும் திருமணமாகி, அது சமீபத்தில் குழந்தையும் பெற்று விட்டதாக கேள்வி. அவ்வளவு பழங்கதை இது. இன்னும் அரைத்த மாவையே அரைத்து..... ஏமாந்து..... அலுக்க வில்லையா? ஏமாறாதவன்!. &lt;br /&gt;&lt;br /&gt;//இஸ்லாம் அரேபியர்களின் உலக ஆதிக்கத்திற்கான ஒரு இயக்கம் என்பது வெளிப்படை. இஸ்லாமிய மதத்தை விருப்பு வெறுப்பின்றி ஆராயும் எல்லோருக்கும் இது புரியும். அரேபியர்கள் உலக நாட்டாமைக்காக ஏற்படுத்திய ஒரு சூழ்ச்சியே இது என்று தெரிந்ததே//&lt;br /&gt;இனிமேலாவது காய்தல் உவத்தலின்றி இஸ்லாத்தை ஆராய முற்படுங்கள். அதனால் நேர்வழி இன்னதென்று ஏமாறாமல் அறிய வாய்ப்பும் கைவரக்கூடும் ஏமாறாதவன்.&lt;br /&gt;&lt;br /&gt;//இஸ்லாமிய மத ஆராய்ச்சியாளர்களில் அண்வர் ஷேக் அவர்களை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவர் நூல்களை படிக்காமல் இஸ்லாமியர்கள் இருக்க கூடாது என்று கருதுபவன் நான். திரு. சுல்தான் அவர்களைப்போல கண்களை மூடிக்கொண்டிருந்த வேளையில் என் கண்களை திறந்தவர் அவர்//&lt;br /&gt;அன்வர் ஷேக்கை நான் படிக்கவுமில்லை. தற்போதைக்கு ஆர்வமுமில்லை. தேவையேற்படும் போது சொல்லி, வாங்கிக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு அம்பேத்கர், அம்பேத்கர் என்று ஒருவர் இருந்தார் தெரியுமா?. தற்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர்களோடு தலைவர்களாக மேடையில் படம் காட்டப்படுகிறதாம்!!. அவர் எழுதிய 'Riddles of Rama &amp; Krishna' படித்துக் காட்டட்டுமா? அல்லது பதிவில் எழுதிக் காட்டட்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இதை விடவும் சிறப்பாக 'Oh You Hindu Awake'என்ற தலைப்பில் 'Dr. Chatterjee. M.A., Ph.D. (USA)' அவர்கள் எழுதிய புத்தகம் இருக்கிறது. அது, 'ஓ! இந்துக்களே! விழித்தெழுங்கள்' என்று தமிழிலும் உள்ளது. வாசித்துக் காட்டட்டுமா? அல்லது பதிவுகளில் தொகுதி வாரியாக எழுதிக் காட்டட்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புத்தகங்கள், உங்களைப் போன்ற பல பேரின் மூடியிருந்த அறிவுக் கண்ணைத் திறந்ததாம். நீங்களும் அறிவைப் பலப்படுத்திக் கொள்ளவும், கண் திறக்கவும் ஆர்வமாயிருந்தால் சொல்லுங்கள். தமிழிணைய அனுமதியும் பெற்றுத் தாருங்கள். படிக்க, என் கண்களே கூசுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு இறைவன் கொடுத்த அறிவைப் பயன்படுத்துங்கள். நீங்களே ஆராய முற்படுங்கள். திருக்குர்ஆனும், ஹதீஸ் நூல்களும் தமிழிலேயே கிடைக்கின்றது. இராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை, மனுஸ்மிருதி முதலிய புத்தகங்கள் கூட தமிழிலும் உள்ளதாம். உதவிக்கு நல்லெண்ணத்தில் எழுதப்பட்ட அறிஞர்களின் ஆக்கங்களைப் பார்வையிடுங்கள். இது போன்ற திமிர் புத்தகங்களை (just for curiosity) படித்தவுடன் குப்பைக்குத் தள்ளுங்கள். கண்டதையும் பார்த்து ஏமாந்ததால்தான் இப்படி ஏமாறாதவன்(!) ஆகி விட்டீர்கள். &lt;br /&gt;இனியாவது சரியானதைப் படித்து, சரியான முறையில் விவாதியுங்கள். நேர்வழி பெறலாம். &lt;br /&gt;&lt;br /&gt;//பதிவில் எங்கேயோ போய்விட்டேன்// &lt;br /&gt;ஆமாம். உங்களுடன் நானும்.&lt;br /&gt;&lt;br /&gt;//திரு.சுல்தான் அவர்கள் இதைப்பார்த்து அதிர்ந்து போனால், மேலே இந்த ஹதீஸையும் பார்க்க வேண்டுகிறேன்//&lt;br /&gt;ஏமாறாதவன் ஆனால் ஏமாந்து விட்டீர்கள். &lt;br /&gt;இதைப்பார்த்து அதிர்ந்து போக என்ன இருக்கிறது.?!!&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் அறிந்து கொள்ளுங்கள். இஸ்லாம் என்பது இறைவனிடமிருந்து வந்த திருக்குர்ஆன் போதனைப்படியும், திருநபி அவர்களின் சொல், செயல், ஆங்கீகாரம் ஆகியவற்றிலிருந்தும் பெறப்படுவதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளது, நபி குழந்தையாக இருக்கும்போது, யாரோ ஒரு பெண் கண்ட கனவும், அதன் படி நடந்தவுடன் கிடைத்த மழையையும் பற்றி இருக்கிறது. அந்தப் பெண் குறிப்பிடும் நபியுடைய பாட்டனார் வெள்ளை நிறத்தவராயிருப்பார் என்று அடையாளமாகச் சொல்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இன்னொரு முறை நீங்கள் எழுதியதை நீங்களே படித்துப் பாருங்கள். ஏன் எழுதினோம் என்று உங்களுக்கே கூச்சமாயிருக்கும். பாவம் ஏமாறாதவன்! உங்கள் மீது கழிவிரக்கம்தான் ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;//வேலூரில் ஒரு இஸ்லாமிய மாநாட்டுக்கு (ஒரு 200 பேர் இருக்கும்..) போயிருந்தேன்//&lt;br /&gt;உங்களைப் போன்ற எண்ணமுள்ளோரை 'ஏதோ சொல்லப் போகிறார்கள். நாமும் போய்ப் பார்ப்போமே, கேட்போமே என' ஈர்த்ததே அந்த மாநாட்டின் வெற்றி என்றும் சொல்லலாம்.&lt;br /&gt;அவர்கள் எந்த மாதிரியெல்லாம் விளம்பரம் செய்தார்கள் என்று சொன்னால், அடுத்த எங்கள் கூட்டத்துக்கு அந்த முயற்சியும் செய்கிறோம். உங்களை போன்ற பத்து பேரை திருத்த முடியுமா என்று பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;//சுல்தான் அவர்களே, இந்த இன வெறியை பாருங்கள். பாப்பான் தோத்தான் இங்கு!!//&lt;br /&gt;நானும் முதலில் விபரம் தெரியாமல் 'பார்ப்பனர்' என்றுதான் எழுதினேன். பாப்பான் என்றால் அவமரியாதை பார்ப்பனர் என்றால் அவ்வாறில்லை என நினைத்தேன். அதன் பின் ஒரு நண்பர் திருத்தினார். அவர்களை பிராமணர்கள் என்றழைப்பதையே அவர்கள் சரி காண்கின்றனர் என்று.&lt;br /&gt;அதன் பின்னர் அவ்வாறே எழுதுகிறேன். தேவையில்லாமல் சிலருடைய மனதை வருந்தச் செய்வதெதற்கு?&lt;br /&gt;அது சரி. நீங்களே பாப்பான் என்று எழுதுகிறீர்களே. பரவாயில்லையா?. &lt;br /&gt;&lt;br /&gt;//இஸ்லாமிய கலீபாவுக்கு ஏற்ற தகுதிகளை இஸ்லாமிய சட்டத்தின்படி பார்ப்போமா...//&lt;br /&gt;இதில் நீங்கள் முக்கியமென்று தடித்த எழுத்துக்களில் போட்டுள்ளதும் அதற்கு முன்னுள்ள வரியினதும் பொருள்&lt;br /&gt;நபியவர்கள். தன்னுடைய உரையில்&lt;br /&gt;உலக முடிவு நாள் வரும் வரை &lt;br /&gt;1. இஸ்லாம் இருந்து கொண்டேயிருக்கும் அல்லது&lt;br /&gt;2. 12 கலீபாக்கள்தான் வருவார்கள் அவர்கள் குறைஷி வம்சத்தவராயிருப்பர்.&lt;br /&gt;என்று கூறினார்கள்.&lt;br /&gt;இந்த 2வது விஷயத்தை கீழுள்ள மாதிரியும் எடுக்கலாம். அரபி தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெளியுங்கள். அதாவது உலக முடிவு நாள் வரை 12 குறைஷிக் கலீபாக்கள்தான் தோன்றுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்றில் எதை எடுப்பது?. எதை எடுத்தாலும் அதற்கு கூடுதல் ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.&lt;br /&gt;உலக முடிவு நாளுக்கு சில காலம் முன்பு வரை இஸ்லாம் இருக்கும் என்று பல ஹதீஸ் உள்ளது. அதனால் அதை எடுத்தக் கொள்வோமே.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, நீங்கள் எழுதிய&lt;br /&gt;//பெண்களை இழிவுபடுத்தும் இந்த சட்டம் ஒருபக்கம் இருக்கட்டும். அடிமைத்தனத்தை இன்றும் தூக்கி வால் பிடிக்கும் இந்த சட்டம் இருக்கட்டும். ஆனால், இஸ்லாத்தை ஆள ஒரு அரபி (அதுவும் முகம்மதுவின் சாதிதான் வேண்டுமாம்...) வேண்டும் என்பது எதற்காக//&lt;br /&gt;என்பதெல்லாம் அபத்தங்களின் கூட்டுக்கலவை என்றாகி விட்டது. பாவம் சார் நீங்க. அடுத்த தடவை நிறைய home work செய்யுங்க. உங்கள் மூலம், அதாவது உங்களுக்கு நான் பதிலெழுதுவதன் மூலம், பல பேர் பயனடைய வாய்ப்பாயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;//சவுதியின் தெருக்களில் குப்பை வாரும் ஆயிரக்கணக்கான அரபியல்லாத முஸ்லிம்கள் எப்போதுமே அரேபியர்களின் மலங்களை அள்ளுவதே அல்லாஹ்வுக்கு பிரியமானது.//&lt;br /&gt;பெட்ரோல் வருவதற்கு முன், அவன் மலத்தை அவன்தான் அள்ளினான். இப்போது அவனிடம் இருக்கும் வசதிக்கு அது அவசியமில்லாமல் போய் விட்டது. &lt;br /&gt;ஆனால் பாருங்கள். சொகுசுக் கழிவறைகளில் மலம் சுத்தப்படுத்திய அவனும், அவனுடைய முதலாளியும் உயர்வு தாழ்வில்லாமல் ஓரே தட்டில் உணவருந்துவதையும் (நோன்பு காலங்களில் சவூதிப் பள்ளிவாயில்களில் சாதாரணமாகக் காணக்கிடைப்பது), தொழும்போது உயர்வு தாழ்வின்றி அவன் தோளோடு அவன் தோளைச் சேர்த்து, அவன் காலோடு அவன் காலை உரசி நின்று தொழும் அதிசயத்தை. இதைத்தான் இஸ்லாம் உலகுக்குச் சொல்லி, செயல்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வசதி குறைந்தால், நாளை அவனும் சுத்தம் செய்ய நேரிடும். யாருக்காகவும் (அல்லது ஒரு குழவினருக்கு) இவ்வேலையை இஸ்லாம் ஒதுக்கி வைத்துள்ளது எனக் கூறுவது அயோக்கியத்தனமானது. &lt;br /&gt;உங்களின் இந்த வாதம், தன் தலை முழுவதிலும் அப்பி இருக்கும் மலத்தை மறந்து (அல்லது மறைக்க), உன் காலின் பின்புறம் மண் ஒட்டியிருக்கிறதென்று ஏளனம் செய்வதைப் போன்றுள்ளது.&lt;br /&gt;ஏமாறாதவனாய் இருந்தால் போதாது. மற்றவர்களை ஏமாற்றதவானாகவும் இருக்க வேண்டும் நண்பரே.&lt;br /&gt;&lt;br /&gt;//அல்லாஹ் அரேபியர்களை மற்ற இனத்திரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்' என்று சொன்னதாக ஹதீஸ்களில்//&lt;br /&gt;எந்த ஹதீஸ் புத்தகம். ஆங்கிலத்திலுள்ள சட்டம் நான்கில் பாதியைப் போட்டு மீதியை விழுங்கியது போல் தோன்றுகிறது. &lt;br /&gt;அரபியல்லாதவரைவிட அரபிக்கு எந்த உயர்வுமில்லை, இறையச்சம் கூடுதலாய் இருந்தாலே தவிர. அதே போல, அரபியை விட அரபியல்லாதவருக்கும் எந்த உயர்வுமில்லை இறையச்சம் கூடுதலாய் இருந்தாலே தவிர என்ற கருத்தில் வரும் நபிமொழி, தெளிவாக மேற்கண்ட கூற்றை மறுத்துக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;//இதனால், இந்த அரேபிய இனவெறியை கொண்ட இஸ்லாம் ஹிட்லரின் நாஸியியக்கத்தை ஒத்தது//&lt;br /&gt;எது? ஒவ்வொரு சமுதாயத்துக்கும் நபிமார்களைத் தேர்தெடுக்கும்போது அந்த சமுதாயத்தின் நல்ல குலத்திலிருந்து (தலையிலும், மூக்குச்சளியிலும் பிறந்ததனால் வந்த உயர் குலம் இல்லை. தான தர்மங்கள், மற்றவர்களுக்கு உதவுதல் போன்ற பண்பாட்டில் உயர் குலம்), நல்ல மனிதரை இறைவன் தேர்நதெடுப்பதாக நபி அறிவிக்கிறார்கள். இதில் என்ன தவறிருக்கிறதென்பதை ஏமாறாதவன்தான் தெளிவுபடுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் ஹிட்லரின் நாஜியிசத்தையும், யூதர்களின் இனவெறியையும் ஒத்ததா? படிப்பவர்கள்தான் &lt;br /&gt;ஏமாறாதவனுக்கு சொல்லித் தர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;//குரேஷி அரேபியர்களை விரோதிக்கும் எல்லோரையும் அல்லாஹ் தீர்த்துவிடுவாராம். அல்லாஹ்வை அரேபியருக்கு சண்டியர் வேலை செய்ய விட்டு விட்டார்கள்.//&lt;br /&gt;இஸ்லாமிய சரிதத்தை கொஞ்சமும் புரட்டிப் பார்க்காமல், யாரோ எடுத்த வாந்தியை, விழுங்கி, இங்கே துப்பியிருக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் ஆங்கிலத்தில் எழுதியதைப் பாருங்கள். கஹ்தான் என்பவரும் அரபிதான் ஆனால் குறைஷிக் குலத்தவரில்லை. இது அரபியருக்கும், அரபியரல்லாதவருக்கும் சொல்லப்பட்டதல்ல. குறைஷிக் குலத்தவர்க்கும் மற்ற அரபிகளுக்கும் சொல்லப்பட்டது.&lt;br /&gt;இஸ்லாத்தின் ஆரம்ப காலங்களில் உயிர், உடைமை, மானம் எல்லாவற்றையும் கூடுதலாக அர்ப்பணித்தவர்கள் குறைஷிகள். அதோடு நிர்வாகத் திறமையும் கைவரப் பெற்றிருந்தார்கள்.&lt;br /&gt;அன்சாரிகளின் தியாகத்தை நான் குறைத்து மதிப்பிடுவதாக பொருளில்லை. ஆனால் குறைஷிகளின் தியாகம் பல மடங்கு உயர்ந்தது. அத்துடன் இஸ்லாமிய விளக்கங்களை கூடுதலாக அறிந்தவர்களாகவும், அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்டவர்களாகவும், இறைவனால் சொர்க்கத்துக்கு உறுதியளிக்கப்பட்டவர்களில் கூடுதலாகவும் இருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தென் ஆப்ரிக்காவில் கறுப்பின மக்களுக்காக அதிக தியாகங்கள் செய்த நெல்சன் மண்டேலாவுக்குதான் அதிபர் பதவி தரப்பட்டது. அதுவே எல்லா மக்களின் எதிர்பார்ப்புமாயிருந்தது. இதுதான் உலக இயல்பு. இதுதான் இயற்கை.&lt;br /&gt;&lt;br /&gt;(நீங்களும் இலங்கையைச் சேர்ந்தவரா? பொதுவாக சண்டியர் என்ற பதத்தை இந்தக்கருத்தில் இந்திய தமிழர்களாகிய நாங்கள் உபயோகிப்பதில்லை. சேலத்தைப் பற்றியெல்லாம் நீங்கள் எழுதியுள்ளதால், இங்கு நான் சாதாரணமாக இந்தியத் தமிழருக்கு பதிலளிப்பதாகவே எழுதியுள்ளேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;//ஹஜ் என்ற ஒரு அபத்தத்தை ஏற்படுத்தியதும் அரேபியர்களின் பொருளாதாரத்தை மேன்படுத்தவே. (அப்போது பெட்ரோல் இருப்பது தெரியாது...).//&lt;br /&gt;ஹஜ் என்பதை அபத்தமெனச் சொல்வது ஈனத்தனமான, கொச்சை வார்த்தை. வன்மையாக கண்டிக்கிறேன். ஒவ்வொரு வருடத்திலும் குறைந்தது இரண்டரை மில்லியன் முஸ்லீம்கள், அதை தங்களின் வாழ்க்கையில் கிடைத்த, கிடைத்தற்கரிய பாக்கியமாக, உயர்வாக எண்ணி அங்கே செல்கின்றனர். மற்றவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு தாருங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சரி. உங்கள் கேள்விக்கு வருவோம்!. &lt;br /&gt;அப்போதுதான் பெட்ரோல் இருப்பது தெரியாது!. இப்போதுதான் தெரிந்து, வருமானம் தழைக்கிறதே.! வருடா வருடம் ஹஜ்ஜூக்காக ஆட்கள் வந்து, அவர்கள் வழிகாட்டு முறைகளை மீறி, மரணங்களைச் சந்தித்து, அதனால் அந்நாட்டுக்கு அவப்பெயர் வந்து.....,&lt;br /&gt;இதெல்லாம் இல்லாமல், ஒவ்வொரு வருடமும் புதுப்புது ஏற்பாடுகளைச் செய்யாமல், ஒரு தொந்தரவுமில்லாமல் மூடி விடலாமே. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த வருமானத்துக்கு பதில் பெட்ரோலை கொஞ்சம் கூடுதலாய் இறைத்தால் போகிறது. அல்லது துபை போல் தங்கள் நாட்டையும் வணிக மையமாக்குவதன் மூலம், வருமானத்தை பெருக்கிக் கொண்டு இருக்கலாமே.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் அவ்வாறு செய்வதில்லை என்பதை நல்ல கண்களுடன் பார்க்கப் பழகுங்கள். திருந்த வாய்ப்பிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;//இதை திரு.சுல்தான் அவர்கள் சிந்தித்து இந்த அடிமை கோட்பாட்டை தகர்த்து எறியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.//&lt;br /&gt;இஸ்லாம் என்பது நியாயமான, நீதியான, அனைவரையும் சமமாகப் பாவிப்பதாக உள்ள வாழ்க்கைத் திட்டம். ஆதலால், நீங்கள்தான், பிறந்து விட்டதால் போற்றுகின்ற, இதுவரை மாற்று வழியைப்பற்றி சிந்திக்கவே மறுத்த, உங்கள் எண்ணக் கோட்பாட்டை தூக்கி எறிய முயற்சிக்க வேண்டும் நண்பரே. எது எல்லா மனிதர்களுக்கும் நன்மை பயக்குமோ அதையே நாமிருவரும் தேர்ந்தெடுப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கும் எனக்கும் 'நேர்வழி இன்னதென்று அறியவும் - அதன்படி நடக்கவும், தீயது எது என்று அறியவும் - அதை விட்டு விலகவும்' அந்த ஒப்புவமையற்ற இறை அருளட்டும். நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;Posted by சுல்தான் at 12:48 PM   &lt;br /&gt;&lt;br /&gt;Labels: அரபிக்குதிரை, ஏமாந்த ஏமாறாதவன் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;13 comments: &lt;br /&gt;தப்பிப் பிறந்தவன்&gt; said... &lt;br /&gt;//..உங்களின் இந்த வாதம், தன் தலை முழுவதிலும் அப்பி இருக்கும் மலத்தை மறந்து (அல்லது மறைக்க), உன் காலின் பின்புறம் மண் ஒட்டியிருக்கிறதென்று ஏளனம் செய்வதைப் போன்றுள்ளது.&lt;br /&gt;..//&lt;br /&gt;&lt;br /&gt;சரியான பதிலடி கொடுத்திருக்கிறீர்கள் சகோ. சுல்தான் அவர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;யார் யாருடைய மலத்தையெல்லாம் ஏமாந்து போய் தலையில் திணிச்சு வச்சுக்கிட்டு பேர மட்டும் ஏமாறாதவன் -ன்னு வச்சுக்கிட்டு பேஸ்த் அடிச்ச மாதிரி நிற்கிறார் இந்த நபர். &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தை பார்த்து 'ஏமாறாத அதி புத்திசாலி' நண்பரே, நீங்கள் எந்த கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறீர் என்று சொல்லத் தயாரா? இஸ்லாத்தை விட நீர் ஏற்றுக் கொண்ட கொள்கை எப்படி உசத்தி என்பதையும் சொல்ல முடியுமா? வெளியில கவுரமா சொல்லிக்கிற மாதிரி கொள்கைதானே அது? &lt;br /&gt;&lt;br /&gt;இந்த தகவல்களையெல்லாம் கொஞ்சம் சொன்னேள்னா உங்க தலையில அப்பி இருக்குறது என்னன்றதை நாங்களும் கன்பர்ம் பண்ணிக்கலாமோல்லியோ?&lt;br /&gt;&lt;br /&gt;-தப்பிப் பிறந்தவன்&lt;br /&gt;(எங்க நாட்டில 85%த்தினருக்கு கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு எனக்கு பிறப்பிலேயே கிடைத்ததால்..)&lt;br /&gt;&lt;br /&gt;3:18 PM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;வருகைக்கு நன்றி தப்பிப்பிறந்தவன்&lt;br /&gt;&lt;br /&gt;3:22 PM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;லக்கிலுக் கூறியது. (கை தவறி ரிஜெக்ட் ஆயிடுச்சு)&lt;br /&gt;ஏமாறாதவன் போன்றவர்கள் காலத்துக்கும் இப்படித்தான் பேசுவார்கள். உங்கள் பண்பான பதில் அவர்களது மழுங்கிப்போன மூளைக்கு ஏறப்போவதில்லை. தயவுசெய்து அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி லக்கிலுக்.&lt;br /&gt;அவர் மாறினாலும், மாறாவிட்டாலும், அவர் போன்ற எண்ணமுள்ளவர்களுக்கு கருத்துக்கள் போய்ச்சேருமே. நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;3:29 PM   &lt;br /&gt;அழகு said... &lt;br /&gt;பாவம் தமிழ்மண அனாதை!&lt;br /&gt;&lt;br /&gt;3:55 PM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;வருகைக்கு நன்றி அழகு&lt;br /&gt;&lt;br /&gt;3:57 PM   &lt;br /&gt;Anonymous&gt; said... &lt;br /&gt;Mr. emarathavan, you are wasting your time chaning typical muslim mentality. I had been in Saudi for many years I understood this long ago. Arabs are very very egoistic people. Read my blog for more info&lt;br /&gt;&lt;br /&gt;10:34 PM   &lt;br /&gt;முஸ்லிம் said... &lt;br /&gt;இஸ்லாத்தை ஆராய்ந்து எதுவும் கிடைக்காமல் ஏமாந்தவன் இப்போ அன்வர் ஷேக்கை அறியாதவர் யாரும் இருக்க முடியாதுன்னு முஸ்லிம்களை ஏமாத்த கிளம்பி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னத்தை சொல்ல..... எமாந்தவனின் மிக மட்டமான பிதற்றல்களையும் மிக நேர்த்தியாக எதிர் கொண்டு பதிலடி தரும் சுல்தான் தொடர்ந்து எழுதுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;10:15 AM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;வருகைக்கு நனறி அனானி. உங்கள் பிளாக் முகவரி தரவில்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;வருகைக்கு நன்றி முஸ்லீம் அவர்களே. தங்களின் தொடர்ந்த ஊக்கப்படுத்துதல், எம்மை தொடர்ந்து எழுதத் தூண்டுகிறது. நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;2:21 PM   &lt;br /&gt;சுவனப்பிரியன் said... &lt;br /&gt;//உங்களுக்கும் எனக்கும் 'நேர்வழி இன்னதென்று அறியவும் - அதன்படி நடக்கவும், தீயது எது என்று அறியவும் - அதை விட்டு விலகவும்' அந்த ஒப்புவமையற்ற இறை அருளட்டும். நன்றி.//&lt;br /&gt;&lt;br /&gt;Best comments&lt;br /&gt;Suvanappiriyan&lt;br /&gt;&lt;br /&gt;5:36 PM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுவனப்ரியன்.&lt;br /&gt;&lt;br /&gt;12:40 PM   &lt;br /&gt;ஆப்படிப்பவன்&gt; said... &lt;br /&gt;//சுல்தான் said... &lt;br /&gt;வருகைக்கு நனறி அனானி. உங்கள் பிளாக் முகவரி தரவில்லையே!&lt;br /&gt;//&lt;br /&gt;அது தெரியாத உங்களுக்கு. காய்கறி.ப்லோக்ஸ்பாட்.காம்.&lt;br /&gt;&lt;br /&gt;2:12 PM   &lt;br /&gt;asalamone said... &lt;br /&gt;சுல்தான் அவர்களுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுடைய ஒரு பதிவில், இரவு முழுவதும் இருந்து,கண் முழித்து,அடுத்த நாள் வேலைக்கு செல்லும் நிலைமையில் இருப்பதாகவும் இருக்கும் நிலைமயில் நீங்கள் எழுதியதைபார்த்து, இந்த சுல்தானை இத்துடன் பதிவு எழுதுவதேயே ஓரம் கட்டி விடலாம் என்று தான் நண்பர் ஏமாறாதவன் காட்டமான சொல்களை சொல்லி ஓரம் கட்டி விடலாம் என்று நினைத்து கடைசியில் ஏமாறாதவன் இப்பம் ஏமாந்து நிற்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வல்ல இறைவன் நாட்டம் இருந்தால் ஏமாறாதவன், இனியும் ஏமாறும் கூட்டதில் இருந்து தன் கொள்கைகளை மாற்றிக்கொள்வார் என நினைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;2:41 PM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;வருகைக்கு நன்றி அஸலம்ஒன்.&lt;br /&gt;&lt;br /&gt;2:58 PM&lt;br /&gt;நண்பன் said... &lt;br /&gt;சுல்தான்,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அன்வர் ஷேக் என்பவர், தன் அரைகுறை புரிதல்களுடன், எதையாவது எக்குத் தப்பா சொல்லி வைத்தால், பிரபலமாகி விடலாம் என்ற எண்ணத்துடன் ஒரு பத்து வருடங்களுக்கு முன்பாக ஒரு புத்தகம் எழுதினார் - "Islam - An Arab National Movement" என்ற பெயரில். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அன்வர் ஷேக்கின் தாத்தா ஒரு காஷ்மீரி பண்டிட். அவர் காலத்தில் முஸ்லிமாக மாறினார். பின்னர் தந்தையர் காலத்தில் அவர்கள் புலம் பெயர்ந்து இங்கிலாந்து சென்று விட்டனர். அவர் முழு மூச்சாக வியாபாரத்தில் ஈடுபட்டு, நன்றாக சம்பாதித்த பின்னர், வியாபாரத்தை விட்டு விட்டு, புத்தகம் எழுதத் தொடங்கினார். கொழுத்த பணம் இருந்தால், ஏதாவது ஏடாகூடம் செய்து புகழ் பெற வேண்டும் என்ற நினைப்புடைய மேலை வர்க்க சிந்தனை புகுந்த அவர் மனதில், நியாயமான உணர்வுகள் இருப்பதற்கு வாய்ப்பில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தை ஒரு அரபிய இயக்கம் என்று தலைப்பிட்டு அவர் வைக்கும் வாதங்கள் எல்லாம் பித்துக்குளித்தனம் தவிர வேறில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அரபியர்களை முதன்மைப் படுத்த வேண்டும் என்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட மதம் இஸ்லாம் என்று கூறும் அவர், உலகப் பிரசித்தி பெற்ற, நபி பெருமானாரின் இறுதி உரையைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அத்தனை ஞானம் மிக்கவர்!!! &lt;br /&gt;&lt;br /&gt;இதே அரபிகளிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக, எத்தனை துயரங்களை முஸ்லிம்கள் அனுபவித்தனர் என்ற தகவல்கள் அற்றவர். &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமியர்கள் நாடுகளின் எல்லைகள் கடந்து சிந்திக்கின்றனர் - மக்காவை நோக்கித் தொழுகின்றனர் -- காரணம் அரபியர்கள் வாழும் நாட்டை முன்னிலைப் படுத்தவே என்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;நாடுகளின் எல்லைகளைக் கடந்து சிந்திப்பது இஸ்லாத்தில் மட்டுமல்ல - எல்லா உயர்ந்த நாகரீகங்களிலும் நடந்திருக்கிறது. யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற பாடலை எழுதியவர்கள் அரபிகள் அல்ல, சாட்சாத் நம் தமிழினத்தவர்களே. &lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுமையும் ஒரு குடையின் கீழ், என்ற கொள்கையுடன் முயன்ற போர் வீரர்கல் எத்தனை பேர் - மாவீரன் அலெக்ஸாண்டர் என்று கொண்டாடும் வீரன், எல்லைகள் தாண்டிய சிந்தனை, கோடுகளற்ற வரைபடம் இவற்றிற்காகத் தானே முயன்றான்? கடல் சுற்றி, இன்னல் பட்டு, துயரம் மேற்கொண்டு, யூரோப்பியர்கள், கண்டம் கண்டமாக தேடியலைந்தது எதற்காக? &lt;br /&gt;&lt;br /&gt;அதை விடுங்கள் - இன்று Global Village என்று உலகை சுருக்கிக் கொண்டவர்கள் யார்? இன்று மாய்ந்து மாய்ந்து எழுதும் இவர்கள் இந்த க்ளோபல் வில்லேஜ் என்ற தத்துவத்தை மாய்ந்து, மாய்ந்து தூக்கிப் பிடிக்கிறார்கள். அவர்கள் டாலர்களை மாற்றி, ரூபாய்களாக விசிறியடிக்கும் பொழுது, இவர்களுக்கு இந்த உலகளாவிய சிந்தனைகள் பிடிக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி, எந்த தர்க்க விவாதங்களும் இன்றி, வெறும் பரபரப்பிற்காக, தற்புகழ்ச்சிக்காக எழுதப்பட்ட புத்தகம் - சீந்துவாரின்றி போன புத்தகம். அழுகலைத் தேடி அலையும் பறவை போல், இவற்றையெல்லாம் தேடியெடுத்து வெளியிட என்றே இந்துத்வம் இருக்கையில் இது ஏதோ ஒரு அற்புதமான புத்தகம் என்ற பிரம்மையை எழுப்புகின்றனர் இவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;1985லிருந்து இன்று வரை, சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதரபாத், புதுடில்லி, இப்பொழுது துபாய், ஷார்ஜா, என நான் ஏறி இறங்காத புத்தகக் கடைகளே கிடையாது. இயல்பாகவே விமர்சன புத்தகங்களைத் தேடி வாங்குவது எனது பழக்கம் - &lt;br /&gt;தடை செய்யப்பட்ட Salman Rushdieன் The Satanic Verses மற்றும் தஸ்லிமா நஸ்ரின் - Lajja இவற்றையெல்லாம் கூட வாங்கிப் படித்து விட்டேன். (ஸாடானிக் வெர்ஸஸ் புத்தகத்தை என் மனைவியின் தோழி ஒருவர் அமெரிக்காவிலிருந்து திரும்ப வரும்பொழுது வாங்கி வரச் செய்து,) பாதி படித்ததும் குப்பை என்று திருப்பிக் கொடுத்து விட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த அன்வர் ஷேக் எழுதிய புத்தகம் எங்கும் எனது கண்ணில் பட்டதில்லை. இன்னும் சொல்லப் போனால், புத்தக வியாபாரிகளுக்கு அவர் ஒரு பொருட்டே அல்ல. இந்துத்வ வாதிகளின் கண்களுக்கு மட்டுமே இனியவராக தெரிகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்,&lt;br /&gt;&lt;br /&gt;எதற்கெடுத்தாலும், அரபிப் பெண்களை கல்யாணம் பண்ணித் தருவார்களா என்று பெண்களை விலை பேசத் துடிக்கும் இவர்கள் இதன் மூலம் பெண்ணியத்தை எத்தனை கேவலப்படுத்துகின்றனர் என்று அறியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சமத்துவம் என்பதற்காக பெண்களைப் பண்ட பரிமாற்றம் செய்து காட்ட வேண்டும் என்பது எத்தனை இழிந்த புத்தி என்பதை இவர்கள் உணர வேண்டும். எத்தனையோ வழிகளில் சமத்துவத்தைப் பற்றி வாதாட வழி இருக்கையிலே, பெணகளைத் தருவார்களா, என்று கேட்டு, பெண்டாளத் துடிக்கும் இவர்கள் தங்கள் ஆண்மையை இழிவுபடுத்திக் கொள்கிறார்களே அன்றி, அங்கு சமத்துவம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இதே கேள்வியை அவர்களை நோக்கித் திருப்பிக் கேட்க முடியும், உடன் பிறந்த உள்ளூர்க்காரனிடத்திலே உங்கள் வீட்டுப் பெண்ணை கொடுக்க முடியாத சூழல் இருக்கையிலே, வேற்று ஒரு தேசத்திலே, வேறு வேறு கலாச்சாரப் பின்னணி, உணவு, உடை பழக்கவழக்கங்களைக் கொண்ட மக்கள் பெணகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறார்கள்? (பெண்கள் வாசிக்க நேர்ந்தால், மன்னிக்கவும். இவர்களிடத்தில் இப்படித் தான் பேச முடிகிறது.)&lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும், எத்தனை நிதானம் உங்களிடம்!!!&lt;br /&gt;&lt;br /&gt;பாராட்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;நண்பன்&lt;br /&gt;&lt;br /&gt;1:03 AM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;அன்பின் நண்பன், தங்களின் வருகைக்கு நன்றி.&lt;br /&gt;தங்களின் மறுமொழியிலிருந்து பல தகவல்களை அறிய முடிந்தது.&lt;br /&gt;என்னுடையதில் இன்னின்ன சிறப்புகள் என்று சொல்வது ஒரு ரகம்.&lt;br /&gt;தான் வைத்திருப்பதில் சொல்ல நன்மையான காரியங்கள் ஏதும் இல்லாமல் (அல்லது தெரியாமல்), உன்னுடையதில் இது தவறு என்று ஒரு புரிதலும் இல்லாமல், தப்பும் தவறுமாகச் சொல்லும் விஷமிகள் இன்னொரு ரகம். &lt;br /&gt;எல்லாம் அறிந்ததுதானே நண்பனே!.&lt;br /&gt;தங்களின் பாராட்டுக்கும் கருத்துகளுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38581011-7557600043812474148?l=islamicfold.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamicfold.blogspot.com/feeds/7557600043812474148/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38581011&amp;postID=7557600043812474148' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/7557600043812474148'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/7557600043812474148'/><link rel='alternate' type='text/html' href='http://islamicfold.blogspot.com/2007/02/blog-post_17.html' title='அரபிக்குதிரையால் ஏமாந்த ஏமாறாதவன்'/><author><name>சுல்தான்</name><uri>http://www.blogger.com/profile/02533713155036746645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp1.blogger.com/_9Y2isWBuYHw/RkwrDf92mFI/AAAAAAAAAC0/P_VNqlJkxVg/s320/22022006009.jpg&apos;'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38581011.post-7584914181751598811</id><published>2007-02-15T14:58:00.000+04:00</published><updated>2007-02-15T15:01:52.419+04:00</updated><title type='text'>நண்பர் ஆரூரன் பதில்களுக்கு என் விளக்கங்கள்</title><content type='html'>//என்னுடைய பதிவின் கருத்தையும் நோக்கத்தையும் நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள் என்பது தான்.//&lt;br /&gt;உங்களின் ஆதங்கம் புரிகிறது. உங்கள் நாட்டு முஸ்லீம்களாகிய அவர்களை குறை கூறுவதை விடுத்து, அதற்காக ஒரு பழைய செய்தியை எடுத்துப் போட்டு, இஸ்லாத்தை குறை கூறுவது உங்கள் நோக்கத்துக்கு எந்த வகையிலாவது உதவும் என நினைப்பது வீணில்தான் முடியும் நண்பரே. &lt;br /&gt;&lt;br /&gt;//தமிழ் முஸ்லிம்களிடம் காணப்படும் அளவு கடந்த அரேபிய மோகமும், விசுவாசமும், தமது தமிழடையாளத்தை விட்டு, மதத்தால் வந்த அரேபிய அடையாளத்தைச் சிறந்ததாக நினைப்பதும்//&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு உங்களைச் செய்யத் தூண்டுவது எது என்பது பற்றி, உங்கள் நாட்டு முஸ்லீம் நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அவர் சொல்லியது கீழே. &lt;br /&gt;'நாங்கள் வணிகர்களாக இருந்து, இனத்தோடு இனமாக இருந்து, மற்றவர்களைப்போல, அவர்கள் கேட்டபோதெல்லாம் கொடுத்துக் கொண்டுதானிருந்தோம். அடாவடியாக மிகக்கூடுதலாக கேட்டபோது தர இயலவில்லை. வணிகத்திலிருந்து எப்போதும் பெருந்தொகைகளை எடுத்துக் கொண்டேயிருக்க இயலாது. அதனால் நாங்கள் தனிமை படுத்தப்பட்டு முத்திரை குத்தப்பட்டோம். &lt;br /&gt;மசூதியில் தொழுது கொண்டிருந்த முஸ்லீம்களை கண்மூடித்தனமாகச் சுட்டு எங்களையும், எங்களின் சிறார்களையும, முதியவர்களையும் கொன்று குவித்து அதை மமதையோடு பெருமையடித்துக் கொண்டது எங்கள் பொது எதிரிகளல்ல - இதுநாள்வரை எங்கள் இனமாக நாங்கள் விரும்பிய அதே குழுவினர்தான். &lt;br /&gt;எங்களை, எங்கள் பெண்டு பிள்ளைகளுடன், எங்கள் சொந்த வாழுமிடங்களிலிருந்து, சொந்த நாட்டின் அகதிகளாக வெளியேற்றியது எங்கிருந்தோ முளைத்து வந்த எதிரிகளல்ல - இதுவரை என் சகோதரனாயிருந்த எங்கள் இனத்தவர்தாம்.&lt;br /&gt;அவர்கள் முஸ்லீம்களாகிய எங்களை தங்கள் இனமாக நினைத்திருந்தால், சொந்த இனத்திலேயே ஒரு குற்றமுமறியாதவர்களை கொலை செய்யத் துணிவரா? &lt;br /&gt;&lt;br /&gt;எங்களை அந்த இனமென்று சொல்லப்படுவதையே இப்போது நாங்கள் வெறுக்கிறோம். எங்களை நீங்கள்; சொல்வதுபோல் எங்களின் வேர்களைத் தேடி அலைய வைத்த குற்றவாளிகள் யார்? ........ ....... ....... (இன்னும் பல, கடுமையான வார்த்தைப் பிரயோகங்களுடன்)' &lt;br /&gt;&lt;br /&gt;//நீங்கள் என்னுடைய கருத்தை மறுக்கலாம், ஆனால் நான் இதை என்னுடைய சொந்த அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன்.//&lt;br /&gt;உங்களுடைய அதே போன்ற வார்த்தையையே நானும் போடுகிறேன். நீங்கள் அவருடைய இக்கருத்தை மறுக்கலாம். ஆனால் நான் அவரிடமிருந்து கேட்டதை மட்டுமே சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;//எந்த விதத்திலும் இஸ்லாமையோ அல்லது எந்தமதத்தையும் ஏளனம் செய்வதல்ல.//&lt;br /&gt;எந்த விதத்திலும் இழிவு புடுத்தவில்லை என்று சொல்லி, இந்தப் பதிவிலேயே ஏளனம் செய்துள்ளீர். அதைப் பின்னால் விளக்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;//இலங்கையின் தமிழ் முஸ்லீம்கள், மத அடிப்படையில் ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தியதன் ஆதங்கம், ஆற்றாமை//&lt;br /&gt;அதுவேதான், அதாவது: தமிழ் முஸ்லீம்களின் முதுகில் குத்தியதன் ஆதங்கம், ஆற்றாமை தான் அவர் பேச்சிலும் தொனிக்கிறது. &lt;br /&gt;இதன் உண்மையும் பொய்யும் பற்றி பாதிக்கப்பட்ட நீங்கள் அல்லது அவர்கள் கூடுதலாக அறிவீர்கள். அது பற்றி நான் வாதிட விரும்பவில்லை. &lt;br /&gt;அதற்காக இஸ்லாத்தை இழித்ததால், நான் ஊடே புக நேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இலங்கைத் தமிழராயிருக்கக்கூடும் என்று உங்களது ஓரிரு வார்த்தைகளை வைத்து நான் யூகித்தேன். அதில் உறுதியில்லாததால்தான் இந்தியத் தமிழருக்கு சொல்வது போல் எழுதினேன். இலங்கைத் தமிழராயிருக்கும் பட்சத்தில் மாற்றிப்படிக்கும்படியும், மேற்பகுதியில், கடைசியில் இணைத்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்குள் நீங்கள் கலந்து பேசி நல்ல முடிவெடுங்கள். பிரச்னை பற்றியெறியும் இந்நேரத்தில், 'உங்கள் நாட்டுக்குள் ஒரு இனத்துக்குள் உள்ள பிரச்னையில் நல்ல முடிவெடுங்கள். நிம்மதியாக வாழுங்கள்' என்றுதான் நான் கேட்டுக்கொள்கிறேன். என் தமிழினம், தங்களுக்குள் சண்டையிட்டு பிரிந்து விடாமல், சேர்ந்து நல்லிணக்கத்துடன் வாழ வேண்டுமாய் ஏக இறையைப் பிரார்த்திக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து உங்கள் பதிலுக்கான விளக்கத்தைத் தருகிறேன்.&lt;br /&gt;//சவூதி அரேபியாவையும், அதன் அரசகுடும்பத்திலும், அரேபியர்களிலும், தமது இனமக்களிலுள்ள பாசத்தை விடக் கூடிய பாசமும், விசுவாசமுமுள்ள பல முஸ்லீம்களை எனக்குத் தெரியும், நீங்கள் கூட அதற்கு விதிவிலக்கல்ல.//&lt;br /&gt;அரேபிய மக்களையும் அதன் அரச குடும்பத்தினரையும் பீற்றிக் கொள்ளுமளவுக்கு ஏதுமில்லை என்பதை என் பதிவிலேயே தெளிவு படுத்தியிருக்கிறேன். மீண்டும் ஒரு முறை பார்வையிடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;//சவூதி அரேபியாவின் பெரும்பான்மையான மக்களும், பெரும்பான்மையான அரபுக்களும் வெறுக்கும் சவூதி அரச குடும்பத்துக்கு வக்காலத்து வாங்கும் உங்களின் எழுத்திலிருந்தே அது தெளிவாகிறது.//&lt;br /&gt;இது குறித்து மாய் யமானி கூறியதாக, நீங்கள் கூறியதை 'சரியாகக் கூறுகிறார்' என்றே எழுதியிருக்கிறேன். மீண்டும் ஒரு முறை பார்வையிடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;//உலகமே வெறுக்கும் ஒசாமா பின்லாடனுக்கு ஆதரவளித்து வீதிக்குப் படையெடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லீம்கள் இலங்கையிலும், இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், பங்களாதேசிலும் ஏன், உலகம் முழுவதிலும் உள்ளார்கள். ஒசாமாவைக் கூடத்தான் ஜகத்குரு ( புனிதர்) என நினைக்கின்றனர் பல முஸ்லீம்கள்.//&lt;br /&gt;ஒசாமாவை எந்த முஸ்லீமும் ஜகத்குரு என்றேல்லாம் நினைப்பதில்லை. உலகமே வெறுக்கும் அமெரிக்க ரவுடியிசத்தை, இஸ்லாத்தை வெறுக்கும் அமெரிக்காவாலேயே ஊட்டி வளர்க்கப்பட்ட அவர் தனியாக நின்று எதிர்க்கிறாரே என்று ஒரு ஹீரோவாகத்தான் மதிக்கப்படுகிறார். (ஓசாமாவின் அணுகுமறைகள் சரியானவையா என்பது தனி விடயம்.) &lt;br /&gt;இந்தியாவில் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட இந்துக்களை நான் காட்டினால் இந்து மதமே தவறானது என வாதிக்க நீங்கள் முன் வருவீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;//சர்வாதிகாரி சதாமுக்காக எத்தனை தமிழ் முஸ்லீம்கள் அழுது வடித்தார்கள் இங்கே. சதாமைக் கூட மாவீரன் என மார்தட்டிய தமிழ் முஸ்லீம்கள் எம்மிடையேயுள்ளார்கள்//&lt;br /&gt;நான் மேலே கூறிய அதே மாதிரி, சதாமையும் அமெரிக்க வில்லத்தனத்துக்கு எதிரான ஒரு ஹீரோவாகத்தான் பார்க்கிறார்கள். திரும்பவும் அதையேதான் கேட்கிறேன். &lt;br /&gt;அவ்வாறு வாதிட்ட முஸ்லீமல்லாத தமிழர்களை காட்டினால் அதை இந்து மதத்தின் அரேபிய விசுவாசம். இந்து மதத்தின சாபக்கேடு, ஆபத்தானது என்று சொல்வீர்களா? நண்பரே. இப்போதாவது உங்கள் எண்ணத்தில் உள்ள பிழையை உணர முடிகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;//முஸ்லிம்களுக்கு தமது புனித நகர் மக்கா எந்தளவுக்குப் புனிதமானதோ அதே போல் தான் இந்துக்களுக்கும் அவர்களது புனித நகரங்கள் புனிதமானவை என்பதைச் சில நேரங்களில் முஸ்லீம்கள் மறந்து விடுகிறார்கள் என்பது போல் தோன்றுவது தான் கவலைக்குரிய விடயம்//&lt;br /&gt;உங்களுக்கு தவறாகத் தோன்றுகிறது நண்பரே.&lt;br /&gt;என்னுடைய நிலத்தை அபகரிக்காமல், என்னுடைய வீட்டை இடிக்காமல், எனக்கு எந்தப் பாதகமும் செய்யாமல், உங்களது புனித நகரை நீங்கள் புனிதப்புடுத்தினால் எங்களுக்கு ஆட்சேபணை தெரிவிக்க என்ன இருக்கிறது?. அவ்வாறெல்லாம் முஸ்லீம்கள் உங்கள் புனித நகரங்களுக்கு புனிதம் தருவதை மறுக்கவோ மறக்கவோயில்லை&lt;br /&gt;&lt;br /&gt;//அதனால் தான் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்த பல்வேறு மதங்களும் இந்தியாவில் செழித்து வளர்ந்தன. ஆனால் அவை எவ்வளவோ முயன்றும் கூட அவற்றால் இந்துமதத்தை விழுங்கி, ஏப்பமிட முடியவில்லை//&lt;br /&gt;சிறிது குழம்பி விட்டீர்கள். இந்து மதம், ஏத்தனையோ மதங்களை விழுங்கி, அவற்றை செரித்து, வளர்ந்ததாக, ஆதாரங்களை அடுக்கியுள்ள பல பதிவுகளை இங்கு என்னால் காட்ட முடியும் நண்பரே. ஆனால் இஸ்லாம் எங்கு சென்றாலும் அதன் தனித்துவத்தை இழக்காது, செம்மாந்து, உயர்ந்து நிற்கும். எத்தனை காலமாகியும் இஸ்லாத்தை விழுங்க முடியா குறைதான், தன்னை உயர்சாதியாக பீற்றிக் கொள்ளும் சில ஈனர்களிடம் இருப்பதை என்னால் அவதானிக்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குறிப்பு நண்பரே!. மற்றவற்றிலிருந்து எதையாவது ஒன்றை எடுத்து இஸ்லாத்தில் கூடுதல், குறைவு செய்ய முடியாதென்பதுதான் இஸ்லாத்தின் தனிச்சிறப்பே!&lt;br /&gt;&lt;br /&gt;//அரேபியாவில் அன்பிருப்பதில் தவறில்லை, ஆனால் அந்த அன்பு அளவுகடந்து, சொந்த சகோதரர்களையும், இனத்தையும் விட்டு, இல்லாத வேர்களைத் தேடி ஒடுவது தான் தவறு என்பது என்னுடைய கருத்து//&lt;br /&gt;'அவ்வாறு அவர்களை ஓடச்செய்தது யாருடைய குற்றம்' என்று அவர் கேட்பதற்கு என்னிடம் பதிலில்லை. அதை நீங்களும் அவர்களும் உங்களுக்குள் கலந்து பேசி நல்ல முடிவாயெடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;//கிறிஸ்தவத் தமிழர்களுக்கு யேசுநாதர் பிறந்த பெத்லகேமிலும், பலஸ்தீனத்திலும் தமிழ் முஸ்லீம்கள் மக்காவில் கொண்ட 'அன்பு' போன்றளவுக்கில்லை. இலங்கைச் சைவர்களுக்கு கைலாசத்திலும், நேபாளத்திலும் அப்படியான அளவு கடந்த அன்பு கிடையாது//.&lt;br /&gt;அது உங்கள் கண்ணோட்டம் மற்றும் அவரவர்களுடைய விருப்பம். அதில் குறை நிறை சொல்வது எனக்கு அவசியமாகப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;//ஈழத்தில் தமிழன் கொல்லப்படும் போது அவர்களின் இதயம் துடிக்காது ஆனால் ஈராக்கில் குண்டு விழுந்தால் ஆவி துடிக்கும்//&lt;br /&gt;ஈழ மக்களுக்காக போராட்டத்தில் கலந்து கொண்ட எத்தனை எத்தனையோ முஸ்லீம்களும், அமெரிக்காவின் ஈராக்கிய போருக்கெதிராக போராட்டத்தில் கலந்த கொண்ட எத்தனையோ முஸ்லீமல்லாதவர்களும் இருக்கிறார்கள். உங்களின் அழுக்குக் கண்ணாடியை கழற்றிப் பார்த்தால் தெரியம். இது பார்வைக் கோளாறு. &lt;br /&gt;தமிழகத்தில், பெரம்பலூரில், (இஸ்லாத்தில் தற்கொலை பெருந்தவறென்றிருந்தும்) ஈழத்தமிழர்களுக்காக தமது இன்னுயிரை தீக்குத் தின்னக் கொடுத்தவன் ஒரு முஸ்லீம். அவன் எனதூரைச் சார்ந்த எனது சொந்தங்களில் ஒருவன்.&lt;br /&gt;&lt;br /&gt;//பெங்களுரில் தமிழர்களுக்கு எதிராக நடப்பவற்றை வெளிப்படையாகக் கண்டிக்க முன்வருவதில்லையே ஏன்?//&lt;br /&gt;என் நாங்களும் கண்டிக்கிறோம். உங்களுக்குத் தெளிவாகத் தெரிவதற்காக – &lt;br /&gt;தஞ்சைத் தரணியில் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை, தமிழகத்தின் நியாயமான உரிமையை, உரிய முறைப்படி தராமல் இருப்பதையும், பெங்களுருவில் என் தமிழினத்துக்கு எதிராக நடக்கும் கொடுமைகளையும் வன்மையாக கண்டிக்கிறோம் என்பதை இதன் மூலம் பதிவு செய்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;//நான் கேட்டதெல்லாம், இஸ்லாம் சமத்துவமான மதம், சவூதி அரேபியா வேறுபாடற்ற சமத்துவமான நாடென்றால்//&lt;br /&gt;இந்து மதத்திலே இல்லாத, நான் கூறிய அந்த சமத்துவம் இஸ்லாத்தில் இருக்கிறது. அது அரேபியாவில் நடைமுறைப் படுத்தப்படுகிறது.&lt;br /&gt;சவூதி இளவரசர் தவறு செய்து, அதற்கு ஆள்பவர்கள் ஆதரவு தந்தால் அது தவறு. இறைவன் முன்னிலையில் தண்டனை பெறுவார் என்று நான் எழுதியுள்ளதை திரும்புவும் பாருங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;//நான் எத்தனையோ கோயில்களுக்குப் போயிருக்கிறேன், எங்குமே தீண்டாமையை நான் பார்த்ததில்லை//&lt;br /&gt;அவ்வாறிருந்தால் நல்லதுதான். சில குழுவினர்தான் இறைவன் முன் ஓத முடியும். சில குழுவினர் கருவறைக்குள் நுழையக்கூட முடியாதென்ற நடைமுறை இருப்பதாக நான் கேட்டிருக்கிறேன். தமிழிணையத்தில் பற்பல முறை படித்துமிருக்கிறேன். நீங்கள் சொல்வதுதான் உண்மை. அவ்வாறு எழுதியவர்களெல்லாம் தவறென்றால்... நல்லதுதான். அவ்வாறே எல்லோரும் இறைவன் முன் சரிநிகர் சமானம் என்றிருப்பதையே நானும் விரும்புகிறேன் திரு.ஆரூரன்.&lt;br /&gt;&lt;br /&gt;//கடவுள் படைத்தது ஆணையும் பெண்ணையும் தான், அந்தப் பெண்ணைக் கடவுளை வழிபடுமிடத்திலிருந்து பிரித்தவர்களுக்குக் கடவுள் முன்னிலையில் யாவரும் சமம் என்ற தத்துவத்தை உச்சரிக்கத் தகுதியுண்டா?//&lt;br /&gt;கடவுள்தான் ஆணையும் பெண்ணையும் படைத்தார். இரு சாராரையும் ஒரே மாதிரி அவர்களின் உருவத்திலும், அங்க அவயங்களிலும், இயல்புகளிலும் படைக்காமல், சில வேற்றுமைகளையும் அவரே ஏற்படுத்தினார். அதனால் ஆணும் பெண்ணும் தங்கள் குடும்பத்திலுள்ள நெருங்கிய சொந்தங்களுடன் வீட்டில் ஒன்றாக தொழ அனுமதித்து, வெளியில் அல்லது பொது இடங்களில், பெண்களும் ஆண்களும் தனித்தனியாக தொழச் செய்ததும் இஸ்லாத்தின் சிறப்புகளில் உள்ள ஒன்றுதான். ஆணும் பெண்ணும் ஒன்றாய் வழிபடுமிடத்திலேற்பட்ட துன்பங்களை அனுபவித்தவர்களுக்கும், அவர்கள் பள்ளிவாசலில் தொழுமிடத்து தனித்தனியாய் தொழுவதிலுள்ள நன்மைகளை அனுபவிப்பவர்களுக்கும் அது புரியும். ஆணையும் பெண்ணையும் ஓரே மாதிரியாக இறைவன் ஏன் படைக்காது விட்டார் என்று உங்களுக்கும் எனக்கும் தெரியுமாதலால் வீண் கேள்விகள் வேண்டாமே!. தவறு ஏற்படக்கூடிய வாய்ப்பைக்கூட இஸ்லாம் தடுக்கிறது என்பதில் எமக்குப் பெருமிதம்தான் நண்பரே.&lt;br /&gt;&lt;br /&gt;//ஏதோ நான் அத்வானியின் அபிமானி போலவும், அத்வானி தான் ஈழத்தமிழர்களின் இணையற்ற தலைவர் போலவுமல்லவா பேசுகிறீர்கள், அத்வானியைப் பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது, அறிவதற்கு அப்படி ஒரு ஆர்வமும் கிடையாது.//&lt;br /&gt;மன்னியுங்கள் ஐயா. அதை எழுதியது ஆருரன் என்ற ஒரு ஈழத்தமிழர் என்று அப்போது உறுதியாகத் எனக்குத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;//ஒரு குற்றவாளி எத்தனை முறையும் தண்டனையை அனுபவிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி ஒரு போதும் தண்டனையனுபவிக்கக் கூடாது, அந்த அடிப்படையில் ஷாரியா நவீன நீதித்துறையின் அடிப்படைக் கொள்கைக்கே முரணானது, நீதிபதிகளும் மனிதர்களே//&lt;br /&gt;கையை வெட்டுவதும், கழுத்தை வெட்டுவதும் ஏதோ தினசரி நிகழ்வு போல பேசுகிறீர்கள். சவூதியில் கடைத்தெருவில் நடக்கின்ற மனிதர்களில் மூன்றில் ஒரு மனிதருக்கு கை, கால்கள் வெட்டப்பட்டு இருப்பதைப் போல் நினைக்கிறீர்கள். எல்லா சந்தேகங்களும் நிவர்த்தி செய்யப்பட்டு, குற்றம் சந்தேகமற உறுதி செய்யப்பட்டாலே தண்டணையளிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் வாதப்படி பார்த்தால் யாருக்கும் தண்டணையே கூடாது. ஏனெனில் நீதிபதிகளும் தவறிழைப்பவர்களே. சிறு தண்டனைதான் என்றாலும் குற்றமற்றவன் அதை அனுபவிக்கக்கூடாது என்பதுதானே கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;//சகோதரர் சுவனப்பிரியன் பீற்றிக் கொள்ளும் சமத்துவம் சவூதி அரேபியாவில் கிடையாது//&lt;br /&gt;சிலர் பல காலம் ஒரு வீட்டில் உண்டு விட்டு, வேறு வீட்டில் அதை விட கூடுதலாக கிடைக்கிறதென்பதற்காக, உண்ட வீட்டுப் பாத்திரத்திலேயே மலம் கழித்துச் செல்வார்கள். நீங்களும் அவர்களைப் போலவே வாதம் செய்கிறீர் நண்பரே. &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக, அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கிறதென்று பாருங்கள். எங்கேயும் இருக்கின்ற சில விதி விலக்குகளையே விதியென்று கூறாதீர்கள்.&lt;br /&gt;அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்னும் சிலர் பிச்சையெடுத்தே வாழ்கின்றனர். கனடாவில் எப்படி? &lt;br /&gt;&lt;br /&gt;அதற்காக அங்கு சவூதியை ஆள்பவர்கள் கூடுதலாக அனுபவிப்பதை இல்லையென்று நான் சொல்வதாக பொருளாகாது. இஸ்லாம் அதை ஆதரிப்பதாகவும் பொருளாகாது. &lt;br /&gt;&lt;br /&gt;//நான்கில் ஒரு பங்கு என்பது நான் என்னுடைய தொப்பிக்குள் இருந்து எடுத்த எண்ணல்ல, அமெரிக்கப் பத்திரிகையில் வந்த செய்தியிலிருந்து எடுக்கப்பட்டது//&lt;br /&gt;//முதன் முதலில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலே முதுமாணிப் பட்டம் பெற்ற சவூதிப் பெண். அவர் தான். சவூதி அரசு செய்வதெல்லாம் இஸ்லாமுக்கு எதிரானதென விமர்சிக்கிறாரே தவிர நானல்ல//&lt;br /&gt;அது உங்கள் தொப்பியிலிருந்து அல்ல, நீங்கள் கூறிய மாய் யமானி தொப்பியிலிருந்துதான் எடுத்திருப்பீர்கள். அமெரிக்காவில் அரபியர்களைப் பற்றி பொதுவான கண்ணோட்டம் இருக்கிறது. அதை மறுப்பதற்காக, அந்நாட்டை பிடிக்காத ஒருவர் சொன்னது முழுதும் உண்மையே என்று யூகிக்கும் உங்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று எனக்கும் தெரியவில்லை. &lt;br /&gt;முதன் முதலில் பட்டம் பெற்றதால் அவர் தவறாக சொல்லவே மாட்டாரா? பட்டம் பெறுவதுதான் உண்மையாளனுக்கு உள்ள இலக்கணமா?&lt;br /&gt;&lt;br /&gt;//ஒரு சவூதியரே சொல்லும் போது சகோதரர் சுவனப்பிரியன் சொல்வது சரியாக இருக்க முடியாதல்லவா?//&lt;br /&gt;இது மாதிரி பல விடயங்களைச் சொல்லலாம் நண்பரே.&lt;br /&gt;'இது நாள் வரை அத்தலைவரின் கூட இருந்தவரே, அதுவும் அத்தலைவராலேயே தளபதியென போற்றப்பட்டவரே சொல்லும்போது ஆருரன் சொல்வது சரியாக இருக்க முடியாதல்லவா' என்று உங்களின் சில வாதங்களை நான் மறுத்தால், அது சரியானதென்று உங்களால் ஏற்க இயலுமா?!.&lt;br /&gt;&lt;br /&gt;//ஒப்பந்தங்களைக் கையெழுத்திட மறுப்பதாகப் பயமுறுத்தியும், போதைப்பொருள் கடத்திய இளவரசரைக் காப்பாற்றியுள்ளது.//&lt;br /&gt;அவ்வாறு நடந்திருந்தால் அது குற்றமே. அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை. இஸ்லாம் அதற்கு எதிராக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;//அதன்படி 'என்னுடைய மகள் பாத்திமா திருடியிருந்தாலும், அவர் கையையும் வெட்டுவேன்' என்று சொன்ன நபி பெருமகனார்' காட்டிய நீதி நெறி சவூதி இளவரசரைக் காப்பாற்ற மீறப்பட்டுள்ளது. 'இஸ்லாமிய சட்டத்தின் முன் ஆண்டியும் அரசனும் சமமல்ல' என்பது வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டுள்ளது//&lt;br /&gt;நீங்கள் சொல்வது போல் நடந்திருந்தால், நபி பெருமகனார் காட்டிய நீதி நெறி சவூதி இளவரசரைக் காப்பாற்ற மீறப்பட்டுள்ளது என நானும் ஏற்றுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அடுத்த வரியில் குழம்புகிறீர்கள். &lt;br /&gt;அதற்காக 'இஸ்லாமிய சட்டத்தின் முன் ஆண்டியும் அரசனும் சமமல்ல' எனச் சொல்வது அறிவீனம்.&lt;br /&gt;நீங்கள் சொல்வது போல் நடந்திருந்தால், அங்கு ஆள்பவர்களால், இஸ்லாமிய நெறிமுறைகள் மீறப்பட்டு, அங்கு ஆண்டியும் அரசனும் சமமல்ல' என்பது வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;//எண்ணெய் வளம் கொழிக்கும் அரேபியாவும் உதவவில்லை. அது தான் உண்மை, சில முஸ்லீம்கள் இப்பொழுது மறுத்தாலும் அது அல்லாவுக்குத் தெரியும்.//&lt;br /&gt;நாடுகள் தங்கள் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆபத்து கால உதவிக்காக வைத்திருக்கும். அது அவர்களால் செலவழிக்கப்பட்டிருக்கலாம். ஆதனால் தாமதமேற்பட்டிருக்கலாம். இது வெறும் யூகம்தான். ஏனெனில் அவர்களின் பொருளாதாரத்தின் ஒரு பெருந்தொகையை நன்மையான காரியங்களில் செலவிடுவதாய் நான் கேட்டுள்ளேன். &lt;br /&gt;ஆனாலும் அவ்வாறில்லாமல், ஆழிப்பேரலை விவகாரத்தில் நீங்கள் சொல்வது உண்மையானால், அங்கு ஆள்பவர்களால், இஸ்லாமிய நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.&lt;br /&gt;&lt;br /&gt;முடிவாக: இலங்கைத் தமிழர்களின் துயரமான வாழ்வும் நிலையும் கண்டு, துயருறுபவர்களில் நானும் ஒருவன். அவர்களில் சொந்த மண்ணை விடுத்து, வேறு வழியில்லாமல், புலம் பெயர்நது வாழ்பவர்களை, துயருரும் என் சகோதரர்களாகவே நான் காண்கிறேன். &lt;br /&gt;எனவே உங்களுக்கிடையிலுள்ள (தமிழ் முஸ்லீம்களுக்கும் மற்ற தமிழர்களுக்கும்) குடும்பத் தகராறில் இஸ்லாத்தை அவமரியாதை செய்யாதீர்கள் என்பதே என் வேண்டுகோள். &lt;br /&gt;&lt;br /&gt;மாற்றுமதத்தை குறை சொல்வதை தவிர்க்க விரும்புபவன் நான். உங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது அதற்கான கட்டாயத்தால் வருத்தத்துடனேயே சில விமரிசனங்களை இதில் முன் வைக்க நேர்நதது. எனவே இது குறித்து மேற்கொண்டு எந்த விவாதமும் செய்ய நான் தயாரில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தங்களின் மனதை காயப்படுத்துவது எனது நோக்கமல்ல. தனிப்பட்ட தாக்குதலாக ஏதும் இதில் இருந்தால் அதற்காக வருந்துகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;[அது மட்டுமில்லாமல் இரவு 11க்கு எழுதத் துவங்கி விடியல் 4 மணிக்குத்தான் எழுதி முடித்தேன். இது என் பணியை பெரிதும் பாதிக்கும். ஏதோ தமிழ் திரட்டிகளின் பக்கம் வந்தோமா தமிழில் நாலெழுத்து நல்லவற்றைப் படித்தோமா, சிறிய மறுமொழி இட்டோமா என்று போவதே எனக்கு வசதி.:)))))))))))]&lt;br /&gt;&lt;br /&gt;Posted by சுல்தான் at 12:55 PM   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;23 comments: &lt;br /&gt;லக்கிலுக் said... &lt;br /&gt;நண்பர் ஆருரனை சில ஆண்டுகளாக அறிவேன். வாதிடுவதில் வல்லவர். அவர் வாதிட்டால் எதிர்வாதம் செய்பவரின் நிலை எப்போதுமே பரிதாபம் தான் :-)&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மனம் நோகாவகையில் சரியான எதிர்வாதத்தை முதன்முறையாக உங்கள் மூலமாக காண்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் இருவருக்குமாக சொற்போர் இனியும் தொடர்ந்தால் நல்லது. எனக்கும் தெளிவுபெற பல விஷயங்கள் உங்கள் இருவரின் வாதங்களிலும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;4:29 PM   &lt;br /&gt;Anonymous&gt; said... &lt;br /&gt;//ஈழத்தில் தமிழன் கொல்லப்படும் போது அவர்களின் இதயம் துடிக்காது ஆனால் ஈராக்கில் குண்டு விழுந்தால் ஆவி துடிக்கும்//&lt;br /&gt;&lt;br /&gt;1995 இல் யாழ்ப்பாணத்திலிருந்து 5 லட்சம் மக்கள் அகதிகளாக சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பால் இடம் பெயர்ந்து நின்ற போது தமிழகத்தில் நெருப்பில் எரிந்து தன்னை மாய்த்தவன் ஒரு இஸ்லாமிய தமிழன் தான். அவனது உயிரே துடித்தது. இதயம் துடித்ததா என என்ன இத கேள்வி.. ?&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாண சைவ உயர் வேளாளர்களின் சிந்தனை இவ்வாறு தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;4:34 PM   &lt;br /&gt;Anonymous&gt; said... &lt;br /&gt;அப்துல் ரவூப் என்னும் மனிதன் ஈழத்து சோதருக்காக தன்னை மாய்த்ததை வசதியாக மறந்து விடுகிறாரே ஆரூரன்..?&lt;br /&gt;&lt;br /&gt;4:35 PM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;வருகைக்கும் நன்றி திரு.லக்கிலுக்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்கும், நான் என்ன சொல்ல விழைகிறேன் என்பதை அவரும், அதனூடாக மற்றவர்களும் அறிகின்றனர். இத்தனை போதுமே.&lt;br /&gt;&lt;br /&gt;வீண் விவாதங்களில் பலனேதுமில்லை நண்பரே.&lt;br /&gt;&lt;br /&gt;4:37 PM   &lt;br /&gt;sreesharan said... &lt;br /&gt;////எண்ணெய் வளம் கொழிக்கும் அரேபியாவும் உதவவில்லை. அது தான் உண்மை, சில முஸ்லீம்கள் இப்பொழுது மறுத்தாலும் அது அல்லாவுக்குத் தெரியும்.//&lt;br /&gt;நாடுகள் தங்கள் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆபத்து கால உதவிக்காக வைத்திருக்கும். அது அவர்களால் செலவழிக்கப்பட்டிருக்கலாம். ஆதனால் தாமதமேற்பட்டிருக்கலாம். இது வெறும் யூகம்தான். ஏனெனில் அவர்களின் பொருளாதாரத்தின் ஒரு பெருந்தொகையை நன்மையான காரியங்களில் செலவிடுவதாய் நான் கேட்டுள்ளேன். &lt;br /&gt;ஆனாலும் அவ்வாறில்லாமல், ஆழிப்பேரலை விவகாரத்தில் நீங்கள் சொல்வது உண்மையானால், அங்கு ஆள்பவர்களால், இஸ்லாமிய நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.//&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் நீங்கள் கூறுவது என்னவெனில் இஸ்லாம் மதத்தை பின்பற்றாத யார் அழிந்தாலும் உங்களுக்கு கவலை இல்லை. உதவ முன்வர மாட்டீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;4:48 PM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;வருகைக்கு நன்றி ஸ்ரீஷரன்.&lt;br /&gt;நீங்கள் சொல்வது போன்ற கருத்தை, என் எழுத்தின் எந்தப் பகுதியில் எடுத்தீர்கள் நண்பரே!.&lt;br /&gt;&lt;br /&gt;5:55 PM   &lt;br /&gt;அழகு said... &lt;br /&gt;ஆரூரான் என்பவர் முழுப்பூசணியைப் பானுக்குள் மறைக்கப் பார்க்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழன் என்று சொல்லிக் கொண்டு, காத்தான்குடி பள்ளியிலும் வாழைச்சேனை, அட்டாளச்சேனையின் அப்பாவித் தமிழ் முஸ்லிம்களைத் தோக்குகளால் ஆசீர்வதித்த அந்தக்காலம் ஒரு பக்கமிருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் நடந்த உண்மைச் சம்பவம்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் கஷ்டப்பட்ட காலத்தில் உணவுப் பொருளும் டீஸல் போன்ற அத்யாவசியப் பொருட்களும் கொடுத்து உதவிய மூதூர் மக்களின் நன்றியை மறந்தது மட்டுமின்றி, "24 மணித்தியாளங்களுக்குள் வெளியேறவும்" என்ற உத்தரவை சொந்த(?) சகோதரனுக்கு விடுத்து, பிறந்த மண்ணிலேயே மூதூர் முஸ்லிம்களை அகதிகளாக அலைய விட்டது யார்?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழன்(!)தானே?&lt;br /&gt;&lt;br /&gt;பல‌ உயிர்களையும் இலட்சக் கணக்கில் சொத்துக்களையும் மூதூர் முஸ்லிம்கள் இழந்ததற்குக் காரணம் யார்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழன்(!)தானே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆரூரானால் மறுக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுடைய தமிழ்ப் பற்றை நிரூபிக்க எவனிடமும் சான்றிதழ் பெறவேண்டிய அவசியம் எமக்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;6:13 PM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;வருகைக்கு நன்றி அழகு.&lt;br /&gt;உங்களின் கோபத்தைக் குறித்து நான் கருத்து கூறுவது பொருத்தமாயிருக்காது நண்பரே. மன்னிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;6:37 PM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;//தமிழகத்தில் நெருப்பில் எரிந்து தன்னை மாய்த்தவன் ஒரு இஸ்லாமிய தமிழன் தான். அவனது உயிரே துடித்தது. இதயம் துடித்ததா என என்ன இத கேள்வி.. ?//&lt;br /&gt;//அப்துல் ரவூப் என்னும் மனிதன் ஈழத்து சோதருக்காக தன்னை மாய்த்ததை வசதியாக மறந்து விடுகிறாரே ஆரூரன்..?//&lt;br /&gt;&lt;br /&gt;வருகைக்கு நன்றி அனானி-1 மற்றும் அனானி-2&lt;br /&gt;அதைத்தான் நான்&lt;br /&gt;//உங்களின் அழுக்குக் கண்ணாடியை கழற்றிப் பார்த்தால் தெரியம். இது பார்வைக் கோளாறு. &lt;br /&gt;தமிழகத்தில், பெரம்பலூரில், (இஸ்லாத்தில் தற்கொலை பெருந்தவறென்றிருந்தும்) ஈழத்தமிழர்களுக்காக தமது இன்னுயிரை தீக்குத் தின்னக் கொடுத்தவன் ஒரு முஸ்லீம். அவன் எனதூரைச் சார்ந்த எனது சொந்தங்களில் ஒருவன்.// என்று குறித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;7:01 PM   &lt;br /&gt;அட்றா சக்கை said... &lt;br /&gt;சகோதரர் சுல்தான்&lt;br /&gt;&lt;br /&gt;அருமையான அழகான நிதானமான பதில்கள். &lt;br /&gt;&lt;br /&gt;unarvukal என்ற பெயரில் எழுதும் சகோதரர் தம் வீட்டுச்சண்டைக்குத் தீர்வுகாணும் முயற்சியில் இஸ்லாத்தின் மீது பழி சுமத்தி இருக்கிறார். அது போன்ற ஒரு வாய்ப்புக்காகவே காத்திருந்த முதல் த.அ. ஒன்று அவர் பதிவில் விவாதத்தைத் திசை திருப்ப மலம் கழித்துச் சென்றிருக்கிறது. அதை அவர் அறிந்தே பிரசுரித்தாரா என்பது அவருக்குத் தான் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் அந்த த.அ. மூலம் விவாதம் திசைதிருப்பாமல் அழகான பதில்களைத் தந்து சுமுகமான விவாதத்தைத் தொடர்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: த.அ = தமிழ்மண அனாதை&lt;br /&gt;&lt;br /&gt;10:56 PM   &lt;br /&gt;Anonymous&gt; said... &lt;br /&gt;//சிலர் பல காலம் ஒரு வீட்டில் உண்டு விட்டு, வேறு வீட்டில் அதை விட கூடுதலாக கிடைக்கிறதென்பதற்காக, உண்ட வீட்டுப் பாத்திரத்திலேயே மலம் கழித்துச் செல்வார்கள்.//&lt;br /&gt;&lt;br /&gt;இவர் யாரென்று சொல்லுங்களேன்!&lt;br /&gt;&lt;br /&gt;10:56 PM   &lt;br /&gt;சுவனப்பிரியன் said... &lt;br /&gt;நண்பர் சுல்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;பல வேளைகளுக்கு மத்தியில் இரவு 4 மணிவரை பதிவை எழுதி முடித்திருக்கிறீர்கள். உங்களின் ஆர்வம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. தொடரட்டும் உங்கள் பணி. &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் ஆரூரானுக்கு இலங்கை தமிழ் இந்துக்களும், தமிழ் முஸ்லிம்களும் ஏன் ஒன்றுபடவில்லை என்பதை ஒரு இலங்கையரை வைத்தே பதிலளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;5:31 AM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி அட்றா சக்கை.&lt;br /&gt;இஸ்லாத்தை யார் இழித்துச் சொல்வார்கள்! அங்கே போய் எவ்வாறு விஷமம் செய்யலாம்! என்று ஒருவரல்ல. தமிழிணையத்தில் ஒரு குழுவே காத்திருக்கிறது சகோதரரே.&lt;br /&gt;&lt;br /&gt;2:58 PM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;அனானி 3 வருகைக்கு நன்றி.&lt;br /&gt;அவர் யாரென்று நான் வேறு சொல்ல வேண்டுமா? &lt;br /&gt;அவரை விருந்துக்கு அழைத்தால், அவர் உண்பதிலே கவனம் செலுத்தாமல், உண்டு முடித்த இடம் எவ்வாறு இருக்கும்(!??!) என்று பார்த்து அதை ஏளனம் செய்வதிலே பெருமை கொள்ளும் பின்புத்திக்காரர் &lt;br /&gt;எல்லோரும் அறிந்தே இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3:04 PM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;தொடர் வருகைகளுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி சுவனப்ரியன்&lt;br /&gt;&lt;br /&gt;3:06 PM   &lt;br /&gt;அப்துல் குத்தூஸ் said... &lt;br /&gt;சகோதரர் சுல்தான் அவர்களுக்கு என் நன்றிகள். &lt;br /&gt;&lt;br /&gt;சரியாகத்தான் பதில் கொடுத்துள்ளீர்கள். ஆனால், இது இஸ்லாத்தின் உயர்வுக்கு அணி சேர்ப்பதாகவல்லவா உள்ளது. நிச்சியம் அதை இவர்களால் ஜீரணிக்க இயலாது. அதனால் இப்பொழுது உள்வாங்குவார்கள். சிறிது காலம் கழித்து மீண்டும் அதே பல்லவியை வேறோரு அவதாரத்தில் ஆரம்பிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3:37 PM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;வருகைக்கு நன்றி அப்துல் குத்தூஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;3:55 PM   &lt;br /&gt;லொடுக்கு said... &lt;br /&gt;உள்குத்து/வெளிகுத்து இல்லாமல், விவாதத்தை திசை திருப்பாமல், சுற்றி வளைக்காமல் சிலர் மட்டுமே தமிழ்மணத்தில் எழுத காண்கிறேன். அதில் நீங்களும் ஒருவர். உங்களின் வாதம் அருமை. உங்களிடமிருந்து அறிந்து கொள்ள நிறைய இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;4:16 PM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி லொடுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;4:30 PM   &lt;br /&gt;Anonymous&gt; said... &lt;br /&gt;சகோதரர் சுல்தான் அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் மற்றும் மறுமை வாழ்வு சிறப்பதற்கான பிரார்த்தனைகளும்.&lt;br /&gt;&lt;br /&gt;திரு.ஸ்ரீசரன் அவர்களின் பார்வைக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;//இதனால் நீங்கள் கூறுவது என்னவெனில் இஸ்லாம் மதத்தை பின்பற்றாத யார் அழிந்தாலும் உங்களுக்கு கவலை இல்லை. உதவ முன்வர மாட்டீர்கள்.//&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் பொருளாதாரம் வசூலித்து கொடுத்து உதவியது. நோய் தொற்றும் என்ற பயத்தில் பலரும் தொட அஞ்சிய அழுகிய உடல்களை எ(உ)ங்களது முஸ்லிம் சகோதரர்கள் தொட்டு தூக்கி சேவையாற்றியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல்வாதிகளோ, சினிமா நடிகர்களோ 5 ரூபாய் தர்மம் வழங்கினாலும் அதை 5000 ரூபாய் செலவு செய்து மக்களுக்கு எடுத்துச்செல்லும் செய்தி நிறுவனங்கள் தமிழகத்தில் தாராளமாக உண்டு. எங்களுடைய இந்த சேவைகளை பொதுவான மக்களுக்கு எடுத்துச்சொல்ல (எங்களைத்தவிர) எங்களுக்கு நாதியில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதனின் சோகத்தில், இழப்பில் மதத்தைப்பார்த்து உதவுவது என்பது மனிதத்தன்மைக்கு முற்றிலும் எதிரானது. மனிதத்தன்மைக்கு உறியவர்களாக முஸ்லிம்கள் நாங்கள் நடந்து காட்டி இருக்கிறோம். அப்படி இருக்கச்சொல்லி இஸ்லாம் எங்களுக்கு கட்டளையிட்டிருப்பதால். &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தை பின்பற்றாதவர்களாக இருந்தாலும் அவர்களுடைய சோகத்தில் பங்கு கொள்வது, அதற்காக உதவுவது எங்களுடைய கடமையாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அபிவிருத்தி&lt;br /&gt;ரியாத் - சவுதி அரேபியா&lt;br /&gt;&lt;br /&gt;6:52 PM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;முதன் முதலாக என் பதிவுக்கு வருகை தந்துள்ளமைக்கும் கருத்துகளுக்கும் நன்றி அபிவிருத்தி(பரக்கத்).&lt;br /&gt;&lt;br /&gt;7:06 PM   &lt;br /&gt;முஸ்லிம் said... &lt;br /&gt;சுல்தான் நல்ல விளக்கமளித்துள்ளீர்கள் தொடர்ந்து எழுதுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;7:53 PM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;வருகைக்கு நன்றி முஸ்லீம் அவர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;8:11 PM&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38581011-7584914181751598811?l=islamicfold.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamicfold.blogspot.com/feeds/7584914181751598811/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38581011&amp;postID=7584914181751598811' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/7584914181751598811'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/7584914181751598811'/><link rel='alternate' type='text/html' href='http://islamicfold.blogspot.com/2007/02/blog-post_15.html' title='நண்பர் ஆரூரன் பதில்களுக்கு என் விளக்கங்கள்'/><author><name>சுல்தான்</name><uri>http://www.blogger.com/profile/02533713155036746645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp1.blogger.com/_9Y2isWBuYHw/RkwrDf92mFI/AAAAAAAAAC0/P_VNqlJkxVg/s320/22022006009.jpg&apos;'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38581011.post-8844777896891999436</id><published>2007-02-15T14:53:00.000+04:00</published><updated>2007-02-15T14:57:52.281+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சவூதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உணர்வுகள்'/><title type='text'>சவூதிதான் இஸ்லாமா?</title><content type='html'>(உணர்வுகள் வலைப்பூவில் “போதைப் பொருள் கடத்திய சவூதி இளவரசரை இஸ்லாமிய ‘ஸாரியா’ ஏன் தண்டிக்கவில்லை?” (http://unarvukal-unarvukal.blogspot.com/2007/02/blog-post_6745.html) என்ற தலைப்பில் இஸ்லாத்துக்கு எதிராகவும் எழுதப்பட்டுள்ளது. அதற்கு மறுப்பாக மறுமொழி இட எழுதியது நீண்டு விட்டதால் தனிப்பதிவாக.&lt;br /&gt;எழுதியவர் இலங்கையைச் சார்நதவராகத் தெரிகிறது. அவ்வாறெனில் இந்தியாவைப் பற்றிச் சொல்லியுள்ள இடங்களில், இலங்கையைத் தொடர்பு படுத்திக் கொள்ளுங்கள்.)&lt;br /&gt;&lt;br /&gt;//மூன்றாவதுலக நாடுகளின் முஸ்லீம்கள் சவூதி அரசகுடும்பத்தைப் பற்றிப் பீற்றிக் கொள்வதையும் அரேபியாவின் மீது அவர்களுக்குள்ள அளவுகடந்த விசுவாசத்தையும், ஏன் முழு அரேபியாவையுமே ஏதோ கடவுளின் சொர்க்கபூமி போல் நினைப்பதையும் எங்களில் பலர் அனுபவத்தில் அறிந்துள்ளோம்//&lt;br /&gt;&lt;br /&gt;சவூதி அரச குடும்பத்தைப் பற்றி பீற்றிக் கொள்ள என்ன இருக்கிறது. அவர்களும் மனிதர்கள்தான். மனிதர்களுக்குரிய எல்லா பலவீனங்களும் அவர்களுக்கும் இருக்கும். 'ஜகத்குரு'க்களாக மனிதர்களால் நம்பப்படுபவர்களே பெருந்தவறு செய்ததாக சந்தி சிரிக்கிறதே. &lt;br /&gt;இஸ்லாம் என்ற வாழ்க்கைப் பாதையில்&lt;br /&gt;'எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே. அவர்களில் சிறந்தவர்கள் தன் தவறுக்காக வருந்தி இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோரி திருந்துபவர்களே.'&lt;br /&gt;&lt;br /&gt;உடல் நலமும் பொருள் வளமும் உள்ளவர்கள் தம் வாழ்க்கையில் ஒரு முறையாவது மக்காவில் உள்ள அந்த புனிதத்தலத்தை தரிசிப்பது ஒவ்வொரு முஸ்லீமின் மீதும் கடமையாக இருப்பதால், எல்லா முஸ்லீம்களும் அந்த புனிதத்தலத்தை நினைவிலிருத்துகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;கல்லையும் மண்ணையும் கடவுளாக வணங்கி வந்த எங்களுக்கு, இஸ்லாம் என்ற மார்க்கத்தை எடுத்துச் சொன்னவர், அராபியாவிலிருந்து வந்ததால், அந்த பூமியின் மீது சிலருக்கு அன்பு இருக்கலாம். அஃதொன்றும் தவறல்லவே.&lt;br /&gt;&lt;br /&gt;//சவூதி அரேபியா வேறுபாடுகள் இல்லாத சமத்துவமுள்ள நாடு போலவும், கையையும், காலையும் வெட்டியெறியும் இஸ்லாமிய ஸாரியாவை 21ம் நூற்றாண்டிலும் நடைமுறை ப்படுத்துவது சரியானதெனவும் வாதாடுவதைக் காணலாம்.//&lt;br /&gt;&lt;br /&gt;சவூதியாவில் எந்த மனிதராயிருந்தாலும், அவர் கறுப்பராயிருந்தாலும் வெள்ளையராயிருந்தாலும், அவர் முன்னே வந்தால் முன்னே நின்று தொழுகிறார். அங்கு எவரும் 'கடவுள் முன்னிலையில் தாம் தான் உயர்ந்தவர்' என்று சொல்வதில்லை. &lt;br /&gt;எமக்கு இஸ்லாம் கற்றுத் தந்துள்ளபடி, 'கடவுள் முன்னிலையில் இரண்டு சாரார்தான். ஒரு சாரார் இறையச்சம் நிறைந்த சிறந்த மனிதர்கள் - உயர்ந்தவர்கள். மற்றொரு சாரார் இறையச்சம் குறைந்தவர்கள் (அல்லது இறையச்சம் இல்லாதவர்கள்) -தாழ்ந்தவர்கள்.'&lt;br /&gt;யாரோ ஒரு குழுமத்தில் பிறந்ததால் அவர் உயர்ந்தவர், வேறொரு குழுமத்தில் பிறந்ததால் அவர் தாழ்ந்தவர் என்று, அவர் செய்யாத தவறுக்கு, பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டாத, இந்த சமத்துவம்தான் சொல்லப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கையை காலை வெட்டும் ஷரியா தவறென்றால், அத்வானி போன்றவர்களே கற்பழிப்புக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று கேட்டதை யோசியுங்கள். &lt;br /&gt;தவறு செய்பவர்கள்தான், 'கையையும் காலையும் இழப்போமே' என்று வருந்த வேண்டும். 'இந்த தண்டணைகளால் தவறு செய்ய நினைப்பவர்களும் திருந்துவார்களே' என்று நல்லவர்களும், நீதி நியாயத்தின்படி வாழ நினைப்பவர்களும் எண்ணாமல் கலக்கமடைவது ஏன் என்பது புதிர். &lt;br /&gt;&lt;br /&gt;//பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் பெருமளவு சமப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம்' என்கிறார் சுவனப்பிரியன்//&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவையும் சவூதியையும் ஒப்பு நோக்குங்கள். ஏற்றத்தாழ்வுகளே இல்லை என்று சொல்லப்படவில்லை. பெருமளவு சமப்படுத்தப் பட்டுள்ளதாகத்தான் சொல்கிறார். தவறென்கிறீர்களா? &lt;br /&gt;அங்கு போய் வந்தவர்களைக் கேளுங்கள். அங்கு அந்நாட்டு அரபிகளில், எத்தனை பேர் வீடு வாசலின்றி, தெருவோரம் தூங்கி, பிச்சையெடுத்து அலைகின்றனர் என்று. பின்னர் ஒப்பு நோக்குங்கள். பெருமளவு என்பதன் பொருள் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;//நான்கில் ஒரு பங்கு சவூதி மக்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். பல சவூதி இளைஞர்களுக்குப் படித்து முடித்தாலும் சரியான தொடர்பில்லாது விட்டால் வேலை கிடைப்பதில்லை.//&lt;br /&gt;&lt;br /&gt;நான்கில் ஒரு பங்கு என்று மிக மிகக் கூடுதலாக சொல்லப்பட்டுள்ளது.&lt;br /&gt;வேலையில்லாதவர்களும், அவர்களின் தேவைகளுக்கான வசதியோடு இருப்பதைப் பார்க்கத் தவறுவது ஏன்?&lt;br /&gt;அங்குள்ள களில் பலவற்றையும் வெளி நாட்டினர் செய்து அதற்கான ஊதியம் பெறுகின்றனர்.&lt;br /&gt;'மற்ற மாநிலத்தவர் இங்கு வருவதால் இந்த மாநிலத்தார்க்கு வேலை கிடைப்பதில்லை' என்று ஒரே இந்தியாவில், ஒரு மாநிலத்தார் மற்றவர்களை அடித்துத் துரத்துகிறோம். உதாரணம்: நேற்று மும்பையிலும் பெங்களுருவிலும், இன்று அஸ்ஸாம்.&lt;br /&gt;அங்கு, இப்போது, வெளிநாட்டவரை......&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு சரியான தொடர்பில்லாத யாரும் வேலையில் இல்லையா? அல்லது அங்கு வேலையிலிருப்பவர்கள் எல்லாம் சரியான தொடர்பு வைத்திருப்பவர்கள்தானா? &lt;br /&gt;&lt;br /&gt;வேலையில்லாத் திண்டாட்டம் இல்லாத நாடு எது? சவூதியில் உள்ளதை மட்டும் ஊதிப் பெரிதாகக் காட்டும் அவரின் நோக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ளாதது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;//முன்னாள் சவூதி பிரஜையும் இன்று லண்டனில் வசிப்பவராகிய மாய் யமானி//&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சொல்வதெல்லாம் எல்லா நாட்டிலும் உள்ளதுதான். &lt;br /&gt;ஒரு நாட்டை விட்டு வெறியேற்றப்பட்டவர் அல்லது அந்நாட்டு ஆள்பவர்களைப் பிடிக்காதவர்கள், வேறு நாட்டில் தங்கிக்கொண்டு இம்மாதிரி சொல்வதெல்லாம் வாடிக்கைதான். அதைத் தூக்கிப்பிடித்து இஸ்லாத்தை விமர்சிக்க அவசியமேதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குடியாட்சியுள்ள இந்தியாவிலேயே, ஆள்பவர்களின் பிள்ளைகள் அமெரிக்காவிலும், இலண்டனிலும், பாரிசிலும் உல்லாசப் பொழுது போக்குக்கு போகவில்லையா? ஆளக்கொடுத்த எல்லோராலும் முடிகிற ஒன்றா? முடியாட்சியில் இது கொஞ்சம் கூடுதலாயிருக்கும். ஆனாலும் அது தவறுதான் என்பதை &lt;br /&gt;//சவூதி அரச குடும்பத்தின் தனிப்பட்ட 'ஜெற்' விமான சுற்றுலாக்களையும், ஆடம்பரங்களையும், கேளிக்கைகளையும் பெரும்பான்மையான சவூதி அரேபியாவின் மக்கள் வெறுக்கிறார்கள் அது மட்டுமல்ல அவை இஸ்லாமிய விதி முறைகளுக்கும் எதிரானவை// என்று அவரே சரியாகச் சொல்கிறாரே.&lt;br /&gt;&lt;br /&gt;//மூன்றாவதுலக நாடுகளின் முஸ்லீம்கள் மட்டும் சவூதி அரேபியாவைப் பற்றி அழகான ஆயிரத்திலொரு இரவுகள் மாதிரியான கற்பனையைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.//&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லீம்கள் மட்டுமா? மற்றவர்கள் இல்லையா?&lt;br /&gt;அவ்வாறு சொல்லப்படுவதைக் கேட்டு அங்கே போகிறவர்களில் (முஸ்லீம்களல்லாத மற்றவர்களும்) திரும்பத் திரும்பப் போகிறார்களே. மும்பையில் சென்று பார்த்தால் போய் வந்தவர்கள் சவூதி வேலைக்கு அனுபவமுள்ளதால் முதலில் நிற்கிறார்களே. &lt;br /&gt;ஆயிரத்திலொரு இரவுகள் கற்பனையோடு சவூதிக்கு ஒருவருமே போவதில்லை என்பதுதான் உண்மை. 'வெட்டிடுவானுங்கோ' என்பதை முன்னரே அறிந்தே போகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;//போதைப்பொருள் கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டு, நிரூபிக்கப்பட்ட இளவரசருக்கு, இஸ்லாத்தில் எல்லோருக்கும் சமத்துவம் உள்ளதென்றால் கையைக், காலை வெட்டியிருக்க வேண்டும் அப்படித்தானே//&lt;br /&gt;&lt;br /&gt;குற்றம் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுவது சவூதிக்கு வெளியே. குற்றம் நிருபிக்கப்பட்ட ஒருவரை தப்பிக்க விட்டது யாருடைய குற்றம். &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய சட்டப்படி குற்றம் யார் செய்திருந்தாலும் தண்டிக்கப் பட வேண்டும். 'என்னுடைய மகள் பாத்திமா திருடியிருந்தாலும், அவர் கையையும் வெட்டுவேன்' என்று சொன்ன நபி பெருமகனார்தான் எங்களுக்கு முன் மாதிரி. இஸ்லாமிய சட்டத்தின் முன் ஆண்டியும் அரசனும் சமமே. &lt;br /&gt;&lt;br /&gt;அந்நாட்டு இளவரசர் குற்றம் செய்து, அவர் தண்டிக்கப்படாமல் தப்புவிக்கப் பட்டிருக்கிறார் என்பது உண்மையானால், அவ்வாறு செய்தவர்கள், நாளை இறைவன் முன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என்பதை எந்த முஸ்லீமிடமும் கேளுங்கள். உண்மையென்றே கூறுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;//எல்லா நாட்டிலும் ஊழல்கள் உண்டு, எல்லா மதங்களிலும் குறைபாடுகள் உண்டு என்பது தான்.&lt;br /&gt;அதை விட இஸ்லாமிய சகோதரத்துவம், சமத்துவம் பற்றிக் கூட மற்ற மதங்களுடன் ஒப்பிட்டுச் சிலர் பேசுவார்கள் அதையும் நம்பி சிலர் மதமாற்றம் கூடச் செய்து கொள்வார்கள்.//&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் எதனோடு எதை முடிச்சு போடுகிறீர்கள். &lt;br /&gt;எல்லா நாட்டிலும் ஊழல்கள் உண்டு என்பது சரிதான். &lt;br /&gt;ஒரு நாட்டிலுள்ள ஊழல்களை இஸ்லாத்தோடு சம்பந்தப் படுத்தாதீர்கள். ஆள்பவர்கள் தவறு செய்தால், இஸ்லாமிய பார்வையில் சரியென்று யாரும் உங்களுக்கு சொன்னார்களா? எந்த முஸ்லீமும் அவ்வாறு சொல்லத் துணிய மாட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இஸ்லாம் கூறும் சகோதரத்துவமும், சமத்துவமும் உன்னதமானது. வேறெங்கும் காணமுடியாத அழகான அற்புதமான வாழ்க்கைத் திட்டமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவில்லை என்று சொல்கிறீர்கள்.&lt;br /&gt;அதைப்பற்றி இஸ்லாம் தெளிவாகச் சொல்லி விட்டது. &lt;br /&gt;இறப்புக்கு பின்னுள்ள மறுமை நாளில், ஒரு செல்வந்தனிடம் 'நான் உன்னிடம் உதவி கேட்ட போது நீ மறுத்தாய் என்று இறைவன் சொல்வான். அதற்கு அந்த செல்வந்தன் 'நீயே எல்லாப் பொருளுக்கும் அதிபதி. என்னிடம் எப்போது வந்தாய்? வரவில்லையே!' என்பான். இந்த ஆள் உன்னிடம் உதவி தேடியபோது, நீ கொடுத்திருந்தால், அங்கே என்னைக் கண்டிருப்பாய்' எனக்கூறி அவனை நரகம் புகச் செய்வான். (ஒரு ஹதீஸிலிருந்து, நம் பிரச்னைக்கு தேவையான பகுதியின் கருத்தாக்கம் மட்டும் தரப்பட்டுள்ளது)&lt;br /&gt;&lt;br /&gt;சவூதியில் எல்லா இஸ்லாமிய சட்டங்களும் கடைபிடிக்கப்பட்டு, சரிவர நிறைவேற்றப்படுகிறது என்று யாரும் சொல்லவில்லை. மற்ற நாடுகளை விடவும் கூடுதலாக கடைபிடிக்கப்பட்டு, நிறைவேற்றப்படுகிறது என்றே சொல்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சவூதி அரசாங்கமோ ஆள்பவர்களோ தவறு செய்தால் அதற்கு இஸ்லாம் பொறுப்பேற்காது.&lt;br /&gt;&lt;br /&gt;'உண்மையும் பொய்யும் தெளிவாயுள்ளது. ஏற்பதும் ஏற்காததும் உன் விருப்பம். இறப்புக்கு பின்னுள்ள வாழ்க்கையில், சரியானதை ஏற்று அதன்படி வாழ்ந்திருந்தால் ஆனந்தமும், தவறானதை ஏற்று அதன்படி வாழ்ந்திருந்தால் தண்டணையும் உறுதி' என்று இஸ்லாத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;Posted by சுல்தான் at 8:19 PM   &lt;br /&gt;&lt;br /&gt;Labels: இஸ்லாம், உணர்வுகள், சவூதி &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;14 comments: &lt;br /&gt;சுவனப்பிரியன் said... &lt;br /&gt;Best answers Mr Sultan! Keep it up.&lt;br /&gt;&lt;br /&gt;9:04 PM   &lt;br /&gt;Udhayakumar said... &lt;br /&gt;//இஸ்லாமிய சட்டப்படி குற்றம் யார் செய்திருந்தாலும் தண்டிக்கப் பட வேண்டும். 'என்னுடைய மகள் பாத்திமா திருடியிருந்தாலும், அவர் கையையும் வெட்டுவேன்' என்று சொன்ன நபி பெருமகனார்தான் எங்களுக்கு முன் மாதிரி. இஸ்லாமிய சட்டத்தின் முன் ஆண்டியும் அரசனும் சமமே. //&lt;br /&gt;&lt;br /&gt;நபி பெருமகனார் மட்டும்தான் அப்படி சொல்லியிருக்கிறார். சவுதி அரச பரம்பரை சொல்லவில்லையோ?&lt;br /&gt;&lt;br /&gt;//சவூதி அரசாங்கமோ ஆள்பவர்களோ தவறு செய்தால் அதற்கு இஸ்லாம் பொறுப்பேற்காது.//&lt;br /&gt;&lt;br /&gt;ஸரியாவை நிறைவேற்றும் பொறுப்பு ஆள்பவர்களிடம் இருக்கும் பொழுது எப்படி பொறுப்பேற்க முடியாமல் போகும்?&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி, இந்த மாதிரி அத்து மீறல்கள் அனைத்து அராசங்களிலும் இருக்கும் என்பதால் மதத்துடன் அரசியலை இணைத்துப் பார்த்தால் பைத்தியகாரத்தனமாகத்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;9:48 PM   &lt;br /&gt;Anonymous&gt; said... &lt;br /&gt;Justifiable answer. &lt;br /&gt;&lt;br /&gt;but, why you folks become angry whenever somebody ridicules arab countries?&lt;br /&gt;&lt;br /&gt;11:25 PM   &lt;br /&gt;ஆரூரன்&gt; said... &lt;br /&gt;நண்பர் சுல்தான், உங்களுக்கான பின்னூட்டம் நீட்சியாக உள்ளதால், அதை என் வலைப்பூவில் பதிந்துள்ளேன். இங்கு சென்று பார்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;http://unarvukal-unarvukal.blogspot.com/2007/02/blog-post_11.html&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;1:29 AM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;Thank You Mr. Suvanapriyan.&lt;br /&gt;Encouragement from peoples like you really helps me to improve.&lt;br /&gt;&lt;br /&gt;2:03 PM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;வருகைக்கு நன்றி திரு. உதயகுமார் &lt;br /&gt;//ஸரியாவை நிறைவேற்றும் பொறுப்பு ஆள்பவர்களிடம் இருக்கும் பொழுது எப்படி பொறுப்பேற்க முடியாமல் போகும்?//&lt;br /&gt;&lt;br /&gt;ஷரீயாவை நிறைவேற்றும் பொறுப்புள்ள ஆள்பவர்கள்தான் (தவறுகளுக்காக) கண்டிக்கப்பட வேண்டும். இஸ்லாமல்ல.&lt;br /&gt;உதாரணத்துக்க: இந்திய சட்டத்துக்கு எதிராக ஆள்பவர் செயல்பட்டால், ஆள்பவர் கண்டிக்கப்பட வேண்டும். இந்தியச் சட்டமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;//மற்றபடி, இந்த மாதிரி அத்து மீறல்கள் அனைத்து அராசங்களிலும் இருக்கும் என்பதால் மதத்துடன் அரசியலை இணைத்துப் பார்த்தால் பைத்தியகாரத்தனமாகத்தான் இருக்கும்.//&lt;br /&gt;&lt;br /&gt;மதம் ஆள்வதற்கென்று அழகான வரையறையை வகுத்துத் தந்துள்ளது. அதை மீறி, ஆள்பவர் தவறு செய்தால் கண்டிக்கப்படவும், தண்டிக்கப்படவும் வேண்டும்.&lt;br /&gt;அரசியல் சட்டத்தையும், ஆள்பவர்களையும் இணைத்துப் பார்த்தால் பைத்தியகாரத்தனமாகத்தான் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால்...... நான் சொல்ல ஏதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;2:17 PM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;Thank you for your visit Anony.&lt;br /&gt;&lt;br /&gt;We are not getting angry to ridicule Arabs but ridiculing Islam for that reason is wrong is my point.&lt;br /&gt;&lt;br /&gt;2:22 PM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;வருகைக்கு நன்றி திரு. ஆரூரான்.&lt;br /&gt;உங்கள் பதில் பதிவைப் படித்தேன். விரைவில் இங்கேயே பதில் தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2:34 PM   &lt;br /&gt;மரைக்காயர் said... &lt;br /&gt;நல்ல பதில்கள் சுல்தான் அவர்களே. 'சவூதிதான் இஸ்லாமா?' என்ற தலைப்பே கூட சில பதில்களை சொல்கிறது. சில முஸ்லிம்களின் நடவடிக்கைகளை வைத்துக் கொண்டு இஸ்லாத்தை பற்றி பலர் விமரிசனம் செய்கிறார்கள். நண்பர் ஆரூரன் அவர்கள் இந்த இரண்டிற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொண்டால், இந்த விவாதம் இன்னும் சிறப்பாக அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;8:25 AM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;வருகைக்கு நன்றி மரைக்காயர். &lt;br /&gt;ஆரூரன் அவர்கள் இதற்கு பதிலளித்துள்ளார்.&lt;br /&gt;அவர் பதிலுக்கான விளக்கத்தையும் என் பதிவிலேயே இட எண்ணியுள்ளேன். வருகை தந்து தங்கள் கருத்துக்களைத் தரவும்.&lt;br /&gt;&lt;br /&gt;1:01 PM   &lt;br /&gt;asalamone said... &lt;br /&gt;Brother Sulthan,&lt;br /&gt;&lt;br /&gt;Very nice to read. &lt;br /&gt;Keep it up Brother.&lt;br /&gt;&lt;br /&gt;Asalam&lt;br /&gt;Bahrain&lt;br /&gt;&lt;br /&gt;2:59 PM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;Thank you Brother Asalamone&lt;br /&gt;&lt;br /&gt;3:27 PM   &lt;br /&gt;லக்கிலுக் said... &lt;br /&gt;மிக மிக பொறுமையாக, தன்மையாக பதிலளிக்கும் உங்களது பாணி என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அட்டகாசமான பதிவு திரு. சுல்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;4:08 PM   &lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி திரு.லக்கிலுக்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38581011-8844777896891999436?l=islamicfold.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamicfold.blogspot.com/feeds/8844777896891999436/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38581011&amp;postID=8844777896891999436' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/8844777896891999436'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/8844777896891999436'/><link rel='alternate' type='text/html' href='http://islamicfold.blogspot.com/2007/02/blog-post.html' title='சவூதிதான் இஸ்லாமா?'/><author><name>சுல்தான்</name><uri>http://www.blogger.com/profile/02533713155036746645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp1.blogger.com/_9Y2isWBuYHw/RkwrDf92mFI/AAAAAAAAAC0/P_VNqlJkxVg/s320/22022006009.jpg&apos;'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38581011.post-116869425713548810</id><published>2007-01-13T17:15:00.000+04:00</published><updated>2007-01-13T17:17:37.176+04:00</updated><title type='text'>பகுத்தறிவு தீர்ப்பளிக்கட்டும்</title><content type='html'>நாம் வாழும் இவ்வுலகில் கோடிக்கணக்கான மக்கள் நம்மோடு வாழ்கின்றனர். எண்ணிலடங்காதோர் வாழ்ந்து மடிந்தனர். மனிதர்களிடையே நிறத்தால், குணத்தால், அறிவால், மொழியால், உடல் அமைப்பால் இன்னும் பலவற்றால் வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களனைவரது மூலப்பொருளும் விந்துத் துளிதான். அனைவருக்கும் குருதி செந்நிறந்தான். அனைவரும் மனிதர்கள்தாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மனித வரலாற்றை தலைமுறை தலைமுறையாக ஆய்ந்தால் கடைசியில் ஒரு மனிதனில்தான் முடியும் என்பதில் ஐயமில்லை. இவ்வடிப்படையில் எல்லா மக்களும் ஒரே தாய் தந்தையரின் வழித் தோன்றல்கள்தான். &lt;br /&gt;&lt;br /&gt;மனிதனுக்கு மேலாக சர்வ வல்லமை பொருந்திய ஒரு சக்தி உண்டென்று பகுத்தறிவு சொல்கிறது. ஆன்மீக நம்பிக்கையுள்ளோர் அதை இறைவன் என்கின்றனர். சிந்தனையை சற்று கூர்மைப் படுத்தினால், இந்த இறைவனைப் பற்றி மனம் பல கேள்விகளை எழுப்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;யார் அந்த இறைவன்? அவன் ஒருவனா? இருவரா? மூவரா? அல்லது பலரா? அதன் பண்புகள் என்ன? அதனைப் பார்க்க முடியுமா? அதன் சக்தி எவ்வளவு? அவன் குறிப்பிட்ட பூமிக்கு, நாட்டிற்கு, மக்களுக்கு மட்டும் இறைவனா? அல்லது எல்லோருக்கும், எந்நாட்டவருக்கும், எல்லா மொழியினருக்கும், எல்லா உயிரினங்களுக்கும், எல்லா கிரகங்களுக்கும் அவன்தான் இறைவனா? என்று பலப்பல கேள்விகள் எழுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனின் சிறப்பம்சமான பகுத்தறிவைக் கொண்டு மேற்கண்ட கேள்விகளை ஒவ்வென்றாய் ஆய்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஒன்றிற்கு மேற்பட்ட கடவுளர் இருப்பதாக கொள்வோம். ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொன்றை நினைத்து, அதை செயல்படுத்தினால்..... &lt;br /&gt;ஒரு கடவுள் ஒரு மனிதனை தண்டிக்கவும் மற்றொரு கடவுள் அம்மனிதரை மேம்படுத்தி நன்மை செய்யவும் முனைந்தால்..... முடிவு....??&lt;br /&gt;ஆக ஒரே அதிகாரம், ஒரே சக்தி, ஒரே இறைவன் தான் இருக்க முடியுமென்று பகுத்தறிவு சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனைப் போன்றே கடவுளும் இருந்தால்.....&lt;br /&gt;நமக்குரிய பலவீனங்கள் அவரிடமும் இருக்கும். &lt;br /&gt;நம்மைப் போன்றே பலவீனமுள்ள இறை எதற்கு? அவசியமில்லையே!&lt;br /&gt;நம்மில் மாறுபட்டு, பலவீனங்கள் அற்றவனாக, அவன் உயர்ந்திருக்க வேண்டுமென நம் பகுத்தறிவு சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மைப் போன்று பசிப்பிணி உள்ளவனாக இல்லாமல், இறைவன் உண்ணாதவனாகவும் நமக்கு உணவளிப்பவனாகவும் வேண்டும். ஏனெனில் அவன் உண்ணும்போது உதவி வேண்டுவோருக்கு உதவ முடியாதே!.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் தேவையுடையவர்களாய் இருக்கிறோம். இறைவன் எந்தத் தேவையுமற்றவனாக வேண்டும். ஏனெனில் தேவைகளுக்காக அவனே எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் நம் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதே!.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் தாய், தந்தை, குழந்தை, குடும்பமென்று, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, சார்ந்து வாழ்கிறோம். இறைவன் யாரையும் பெறாதவனாகவும், யாராலும் பெறப்படாதவனாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் அவன் குடும்பத்தாருக்கு கட்டுப்பட்டு நமது தேவைகளை நிறைவேற்றாமல் போய் விடக்கூடாதல்லவா?.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு நிச்சயம் மரணமுண்டு. இறைவன் மரணமடையாதவனாக, நித்திய ஜீவனாக இருக்க வேண்டும். ஏனெனில் மரண பயத்தில் அவன் நம்மை மறந்து விடக்கூடாதே.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் உழைப்புக்குப் பின் களைக்கிறோம், ஓய்வெடுக்கிறோம், உறங்குகிறோம். இறைவன் களைப்பற்றவனாக, ஓய்வு தேவையற்றவனாக, உறங்காதவனாக வேண்டும். ஏனெனில் அவன் களைப்புற்று, ஓய்வெடுக்கும் போது அல்லது உறங்கும்போது, நமது தேவைக்கான கூப்பாடு அவனுக்கு கேட்காது அல்லது அவனை எரிச்சலடையச் செய்யுமே.&lt;br /&gt;&lt;br /&gt;நாமும் ஏனைய பொருட்களும் படைக்கப்பட்டவர்கள் அதனால் படைத்தவனிடம் கடப்பாடுண்டு. இறைவன் படைக்கப்படாதவனாயும் அதே நேரம் எல்லாவற்றையும் படைத்தவனாயும் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு நாளையைப் பற்றிய சரியான ஞானமில்லை. நமது கண்களுக்கு அப்பால் நடப்பதை அறிய மாட்டோம். இறைவனோ நடந்தது, நடப்பது, நடக்க விருப்பது என முக்காலத்தைப் பற்றியுமான தெளிவான ஞானமுடையவனாக இருப்பதோடு, அவன் பார்வைக்கு எதுவும் மறைந்ததாகவும் இருக்கக் கூடாது. ஏனெனில் நாளைக்கு நமக்கே கெடுதலாக வருமென்பதை அறியாமல், நாம் எதையாவது கேட்டு வைக்க, இறைவனும் அதையே தெரியாமல் கொடுத்து விட்டால்…..&lt;br /&gt;&lt;br /&gt;நாம் நினைப்பதை எல்லாம் செயல்படுத்த முடியாது ஏனெனில் நாம் சிலரது அல்லது பலரது கேள்விகளுக்கு பதில் சொல்லக் கடைமையுடையவர்கள். இறைவன் தான் நினைத்ததை முடிப்பவனாக இருக்க வேண்டும். அவனே கேள்வி கேட்பவனாகவும், யாராலும் கேள்வி கேட்கப்படாதவனாகவும் இருந்தாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் பயந்தவர்களாகவும் பாதுகாப்பு வேண்டியவர்களாகவும் இருக்கிறோம். இறைவன் பயமற்றவனாக, பாதுகாப்பு தேவையற்றவனாக, அதே சமயம் நம்மைப் பாதுகாப்பவனாகவும இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகு தகுதிகளுள்ள இறைவன் நம்மிடம் எவ்வாறு நடப்பவனாக இருக்க வேண்டும் என பகுத்தறிவு எதிர்பார்க்கிறது? &lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் கருணையும், அன்பும் நிறைந்தவனாக இருக்க வேண்டும். தாய் தன் குழந்தையிடம் காட்டும் இரக்கத்தை விட மிகக் கூடுதலான இரக்கமுள்ளவனாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் நன்மை செய்தால் நமக்கு பரிசளிப்பவனாகவும், நாம் தீமை செய்தால் நம்மை தண்டிப்பவனாகவும் இருக்க வேண்டும். செய்த தீமைகளுக்காக நாம் மனம் வருந்தினால் நம்மை மன்னிக்கும் மாண்பாளனாகவும் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கோ, மொழியினருக்கோ, ஜாதியினருக்கோ, நாட்டினருக்கோ மட்டும் இறைவனாக இல்லாமல் மனித குலம் அனைத்துக்கும் (ஏன்? இப்பிரபஞ்சம் முழுமைக்கும்) அவனே இறைவனாக இருக்க வேண்டும். நம் தோற்றத்தையோ, மொழியையோ, குலத்தையோ பார்க்காமல், நம் எண்ணங்களையும், செயல்களையும் பார்த்து எடை போடுபவனாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பலப்பல தீமைகள் செய்து, அட்டூழியங்களே வாழ்க்கையாக வாழ்ந்து, பொதுச்சொத்துகளை அபகரித்து, கொலைப் பல செய்து, மனித உரிமைகளை மிதித்து வாழ்ந்தவர்கள், சில பல காரணங்களுக்காக இவ்வுலகில் தப்பி விட்டாலும், அவர்களை சரியாக விசாரணை செய்து தகுந்த தண்டனையளிப்பதோடு பாதிக்கப்பட்பவர்களுக்கும் மனம் நிறையும் நீதி வழங்குவதில், அவன் நீதி வழுவாதவனாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் படைத்த மனிதர்களாகிய நமக்குள்ளேயே பிறப்பாலோ, செல்வத்தாலோ அல்லது தொழிலாலோ உயர்வும் தாழ்வும் கற்பிக்காதவனாக இறைவன் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் நம்மைப் படைத்தவனாகவும், பாதுகாப்பவனாகவும், நேர்வழி காட்டுபவனாகவும், தெளிவான வாழ்க்கைத் திட்டத்தை தருபவனாகவும் வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;என்றெல்லாம் சிந்தனை விரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பகுத்தறிவு கேட்கும் கேள்விகளுக்கு, மாற்றமில்லாத இறையைத்தான் எனக்கு இஸ்லாம் அறிமுகப்படுத்தித் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;1. இது ஒரு மதமல்ல. மனிதன் எவ்வாறு வாழ வேண்டுமெனச் சொல்லும் வாழ்க்கை நெறிமுறைகளின் தொகுப்பு அல்லது வழிகாட்டி&lt;br /&gt;&lt;br /&gt;2. இது மனித அறிவினால் தோற்றுவிக்கப்பட்டதல்ல. இறைவனே கொடுத்தருளியது. மனிதன் இன்று ஒன்றைச் சொல்வான், நாளை அந்நியதிகள் மாறலாம். முக்காலமும் அறிந்த இறைவனின் நியதிகளில் தவறு ஏற்படாது.&lt;br /&gt;&lt;br /&gt;3. அதற்காக சிந்தனைக்கும் பகுத்தறிவுக்கும் அபபாற் பட்டதல்ல. சிந்திக்கவும் பகுத்தறிவைப் பயன்படுத்தத் தூண்டும் அல்லது வற்புறுத்தும் வாழ்க்கை நெறி.&lt;br /&gt;&lt;br /&gt;4. வன்முறைக்கும் துவேசத்துக்கும் இங்கே இடமேயில்லை. இஸ்லாத்தில் எவ்வித நிர்பந்தமுமில்லை என்பதும் இதன் அடிப்படைகளில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;5. மனிதரிடையே ஜாதி, இன, மொழி வேறுபாடுகளால் உயர்வு தாழ்வில்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற முறையில் அமைக்கப் பட்டுள்ளது. பிறப்பால் மேல் ஜாதி அல்லது கீழ் ஜாதி என்றோ, அரசன், ஆண்டி, படித்தவன், பாமரன் என்றோ உள்ள வேறுபாடுகளையெல்லாம் களைந்து மனிதர்களிலே நல்லவன், தீயவன் என்ற அடிப்படையில் மட்டும் அணுகும் ஒரு வழிமுறை. &lt;br /&gt;&lt;br /&gt;6. இது வெறும் சடங்கு சம்பிரதாயங்கள் மட்டுமேயுள்ள மதமல்ல. இது ஒரு அழகான, முழுமையான வாழ்க்கைத் திட்டம். பெண்ணுரிமை பேணி, சரியான அந்தஸ்தை வழங்குகிறது.(பெண்களுக்கும் சொத்தில் உரிமை, விதவை மறுவாழ்வு, ஆண்தான் பெண்ணுக்கு வரதட்சணை வழங்கவேண்டும்.)&lt;br /&gt;&lt;br /&gt;7. இது மனித குலம் எதிர் நோக்கியுள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு வழங்கும் நீதித்திட்டம். (பொருளாதாரக் கோட்பாடுகள், சட்ட இயந்திரத்தின் இயக்கம், வட்டியில்லா வாழ்வு, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பது அவர்களது கடமை என்றும், இருப்பவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை அரசின் முலம் எடுப்பது இல்லாதவர்களுக்கான உரிமை என்றும் கூறுகிறது.)&lt;br /&gt;&lt;br /&gt;8. பொய், களவு, லாட்டரி, மது, சூது, விபச்சாரம், லஞ்ச லாவண்யம், அடக்குமுறை, அடிமைத்தனம், மூட நம்பிக்கைகள் போன்றவற்றை வேரோடு ஒழிக்கும் ஒரு பகுத்தறிவுப்பாதை.&lt;br /&gt;&lt;br /&gt;9. இது மனித உரிமைகளை நிலை நிறுத்தும் ஒரு மிகப்பெரிய வழி முறை. அறிவியல், தொழில் நுட்பம் இதற்கு எதிரானதல்ல. மாறாக, இயைந்தது. இஸ்லாம் ஒரு அறிவியல் பூர்வமான அணுகுமுறைக்கான வழிமுறைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;10. சமத்துவத்தையும் சகோதரத் துவத்தையும் நிலை நிறுத்தி, மனிதன் மனிதனாக வாழ்ந்து, சாந்தியையும் சமாதானத்தையும் அடைவதற்கு வழி காட்டும் முழுமையான வாழ்க்கை நெறி முறைகளின் தொகுப்புதான் இஸ்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் விரும்புவதை மற்றவர்களும் விரும்ப வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. நான் நினைப்பதைப் போலவே மற்றவர்களும் நினைக்க வேண்டியதுமில்லை. என்னுடைய விருப்பு பலருக்கு வெறுப்பாகலாம். நான் வெறுப்பதை பலர் விரும்பலாம். இவை மனித இயற்கை.&lt;br /&gt;&lt;br /&gt;என் எண்ணங்களை இங்கே வைத்திருக்கிறேன். என்னைப் போன்றே எண்ணமுள்ளவர்களைக் காணும் போது மனது மகிழ்வதும் இயல்புதானே. நேரெதிரான எண்ணமுள்ளவர்களை சந்திக்கும்போது - தவறான கொள்கையில் (என் பார்வையில்) இவ்வளவு பிடிவாதமாக இருப்பதற்காக வருத்தப் படுவேன் - ஆனால் அவர்களை வெறுப்பதில்லை. இயன்றால் அவர்களுக்காக பிரார்த்திப்பேன். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். என் கருத்து எனக்கு, உங்களது உங்களுக்கு. என் கருத்தை விடவும் சிறப்பான கருத்துகள் யாரிடமிருந்தாவது வந்தால், அதன் உண்மைகளை யோசிக்க நான் தயங்க மாட்டேன். அது போல் நான் சொல்பவற்றின் உண்மைகளை எந்த இதயமாவது யோசித்தால்.... அதுதான் இவ்வெழுத்தின் நோக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;உலகில் ஒரு பொருளை வாங்கும் முன் அதன் தரமென்ன? அது பயனுள்ளதா? ஏதேனும் கேடு தருமா? என்றெல்லாம் சிந்தித்து வாங்குகிறொம். ஆனால், மிகப் பரிதாபம்!. நமது இவ்வுலக மற்றும் மறு உலக வாழ்க்கை வழிகாட்டி, வாழ்க்கையின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் உன்னதமான அந்த குர்ஆனையும் இஸ்லாத்தையும் சிந்திக்கிறோமா? பகுத்தறிவை பயன்படுத்துங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அறிவுப் பூர்வமாக சிந்தியுங்கள். உங்கள் இறைவனைப் பற்றி நீங்களே சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். பகுத்தறிவு நெறியான இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் ஏன் அறிய முற்படக் கூடாது. இஸ்லாம் தந்துள்ள அறிவுப் பெட்டகமான குர்ஆனை நீங்களே சுயமாக ஏன் ஆய்வு செய்யக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் நாடினால்…. இன்னும் வரும்.&lt;br /&gt;எழுதியவர்: சுல்தான் at 7:29 PM   &lt;br /&gt;&lt;br /&gt;29 மறுமொழிகள்:&lt;br /&gt;Sivabalan said... &lt;br /&gt;இன்னும் முழுமையாக இப்பதிவை படிக்கவில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;படித்துவிட்டு வருகிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;8:26 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;We The People said... &lt;br /&gt;//ஒரு கடவுள் ஒரு மனிதனை தண்டிக்கவும் மற்றொரு கடவுள் அம்மனிதரை மேம்படுத்தி நன்மை செய்யவும் முனைந்தால்..... முடிவு....??&lt;br /&gt;ஆக ஒரே அதிகாரம், ஒரே சக்தி, ஒரே இறைவன்//&lt;br /&gt;&lt;br /&gt;என் பகுத்தறிவு ஒரு கேள்வி கேட்க்கிறது! ஒரு இறைவன், ஒரு நேரத்தில் எப்படி கோடானகோடி மக்களை கவனித்துக்கொண்டே இருப்பான்!!!?? &lt;br /&gt;&lt;br /&gt;//மனிதனுக்கு மேலாக சர்வ வல்லமை பொருந்திய ஒரு சக்தி உண்டென்று பகுத்தறிவு சொல்கிறது. //&lt;br /&gt;&lt;br /&gt;எந்த பகுத்தறிவு சொல்லுது. எங்களுக்கு பகுத்தறிவு சொல்லித்தந்தவர் கடவுள் இல்லை/அது கட்டுக்கதைன்னு சொல்லித்தந்தார். அப்ப அவர் தப்பா??&lt;br /&gt;&lt;br /&gt;//இறைவன் உண்ணாதவனாகவும் நமக்கு உணவளிப்பவனாகவும் வேண்டும்//&lt;br /&gt;//இறைவன் எந்தத் தேவையுமற்றவனாக வேண்டும்.//&lt;br /&gt;//இறைவன் யாரையும் பெறாதவனாகவும், யாராலும் பெறப்படாதவனாகவும் இருக்க வேண்டும். //&lt;br /&gt;//இறைவன் மரணமடையாதவனாக, நித்திய ஜீவனாக இருக்க வேண்டும். ஏனெனில் மரண பயத்தில் அவன் நம்மை மறந்து விடக்கூடாதே.//&lt;br /&gt;//இறைவன் களைப்பற்றவனாக, ஓய்வு தேவையற்றவனாக, உறங்காதவனாக வேண்டும்.//&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் உங்கள் சுயநலமே இறையாக இருக்கவேண்டும்??!!! அவனுக்கு ஒன்றும் இருக்கக்கூடாது, அவன் உங்களுக்கு மட்டும் ஏதாவது செய்து கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். டூ மச் சா தெரியலை??&lt;br /&gt;&lt;br /&gt;சரி இப்ப இஸ்லாம் உங்க விளக்கம் பார்த்தேன் எனக்கு சில கேள்விகள்??&lt;br /&gt;&lt;br /&gt;முதல் மூன்று பாயிண்டுக்கு ப்ரூப் இல்லை விடுங்க பரவாயில்லை. அவை பெரிய விசயம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;//4. வன்முறைக்கும் துவேசத்துக்கும் இங்கே இடமேயில்லை. இஸ்லாத்தில் எவ்வித நிர்பந்தமுமில்லை என்பதும் இதன் அடிப்படைகளில் ஒன்று.//&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப வண்முறையை கையாள்பவர்கள் இஸ்லாமிலிருந்து விலக்கிவைப்பீர்களா?? அப்ப பின் லேடன், தாலிபான்கள், என திவிரவாத்தை கையில் எடுத்தவர்களை என்ன செய்கிறீர்கள்??&lt;br /&gt;&lt;br /&gt;//. மனிதரிடையே ஜாதி, இன, மொழி வேறுபாடுகளால் உயர்வு தாழ்வில்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற முறையில் அமைக்கப் பட்டுள்ளது. பிறப்பால் மேல் ஜாதி அல்லது கீழ் ஜாதி என்றோ, அரசன், ஆண்டி, படித்தவன், பாமரன் என்றோ உள்ள வேறுபாடுகளையெல்லாம் களைந்து மனிதர்களிலே நல்லவன், தீயவன் என்ற அடிப்படையில் மட்டும் அணுகும் ஒரு வழிமுறை.//&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப ஷியா, சன்னி முஸ்லீமகள் என்று எப்படி வந்தது இரு பிரிவு, ஈராகில் அவர்கள் ஏன் சண்டையிட்டுக்கொள்கிறார்கள்?? அவர்களுக்குள் என்ன பிரச்சனை?? அதுவும் ஒரு ஏற்ற தாள்வாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். நீங்க?? அப்ப இஸ்லாமில்லும் உள்ளது ஏற்றத்தாள்வு, இங்கு ஜாதி, அங்கு பிரிவு?? சரியா??&lt;br /&gt;&lt;br /&gt;//6. இது வெறும் சடங்கு சம்பிரதாயங்கள் மட்டுமேயுள்ள மதமல்ல. இது ஒரு அழகான, முழுமையான வாழ்க்கைத் திட்டம். பெண்ணுரிமை பேணி, சரியான அந்தஸ்தை வழங்குகிறது.(பெண்களுக்கும் சொத்தில் உரிமை, விதவை மறுவாழ்வு, ஆண்தான் பெண்ணுக்கு வரதட்சணை வழங்கவேண்டும்.)//&lt;br /&gt;&lt;br /&gt;At a given point of time, ஒருவன் ஐந்து பெண்களை கல்யாணம் செய்வது சரியா?? மூன்று முறை தலாக் சொல்லிவிட்டால் திருமணமுறிவு சரியா? அப்போது பெண்ணுக்கு என்ன உரிமை இருக்கிறது!!! பெண்சொல்லவேண்டியதெ இல்லையா?? அவளுடைய கருந்து தேவையற்றது என்று என்று சொல்லுவது பெண்ணுரிமையை பேணி காப்பதா?? ஆண்கள் பெண்வீட்டருக்கு வரதட்சணை கொடுத்தால் ஓ.கே வா? பெண் வீட்டார் கொடுத்தால் தான் தப்பா?? தலாக் சொன்ன ஒரு இஸ்லாமிய பெண்ணும் தன் கணவனும் மனம் திருந்தி ஒன்று சேர வாய்ப்பு இல்லை? அப்படி சேர வேண்டுமானால் இன்னொருவரை திருமணம் செய்து, அவர் தலாக் சொன்னால் தான் இந்த இருவரும் சேர முடியும் இது தான் சுதந்திரமா?? &lt;br /&gt;&lt;br /&gt;//7. இது மனித குலம் எதிர் நோக்கியுள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு வழங்கும் நீதித்திட்டம். (பொருளாதாரக் கோட்பாடுகள், சட்ட இயந்திரத்தின் இயக்கம், வட்டியில்லா வாழ்வு, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பது அவர்களது கடமை என்றும், இருப்பவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை அரசின் முலம் எடுப்பது இல்லாதவர்களுக்கான உரிமை என்றும் கூறுகிறது.)&lt;br /&gt;&lt;br /&gt;8. பொய், களவு, லாட்டரி, மது, சூது, விபச்சாரம், லஞ்ச லாவண்யம், அடக்குமுறை, அடிமைத்தனம், மூட நம்பிக்கைகள் போன்றவற்றை வேரோடு ஒழிக்கும் ஒரு பகுத்தறிவுப்பாதை.&lt;br /&gt;&lt;br /&gt;9. இது மனித உரிமைகளை நிலை நிறுத்தும் ஒரு மிகப்பெரிய வழி முறை. அறிவியல், தொழில் நுட்பம் இதற்கு எதிரானதல்ல. மாறாக, இயைந்தது. இஸ்லாம் ஒரு அறிவியல் பூர்வமான அணுகுமுறைக்கான வழிமுறைதான்.//&lt;br /&gt;&lt;br /&gt;இது அனைத்து மததிலும் உள்ளதே!!! யாரும் உபயோக்காத சரக்கு. அதை விடுங்க. நம்மில் யார் இங்க பொய் சொல்லாதவங்க? &lt;br /&gt;&lt;br /&gt;//10. சமத்துவத்தையும் சகோதரத் துவத்தையும் நிலை நிறுத்தி, மனிதன் மனிதனாக வாழ்ந்து, சாந்தியையும் சமாதானத்தையும் அடைவதற்கு வழி காட்டும் முழுமையான வாழ்க்கை நெறி முறைகளின் தொகுப்புதான் இஸ்லாம்.//&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஏதாவது ஒன்றையாவது எந்த மதமாவது பின்பற்றுகிறதா? தன் மதத்தவனையே சகோதரனாக நினைக்காத மக்கள் தான் நாம் இன்று அதிகம் பார்க்கிறோம்(எந்த தனி மதத்தைப்பற்றி அல்ல எல்ல மதத்தவரும் இதற்கு விதிவிலக்கல்ல)&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக ஒரு கேள்விகள்: &lt;br /&gt;&lt;br /&gt;இப்ப ஒருவன் இஸ்லாமில் சேர்கிறான் என்றால் அவரை எந்த பிரிவில் சேர்ப்பீர்கள்? ஷியாவிலா? சன்னியிலா??&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிலிருந்து ஒருவன் வேறு மதம் தழுவினால் மரண தண்டனை விதிக்கிறார்கள் ஏன்? இது தான் அடக்குமுறை இல்லாத மதமா?&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு மாராடித்தான் நோம்பி என்ற ஒரு இஸ்லாமிய நோம்பு ஊர்வலத்தை பார்க்க நேர்ந்தது, அந்த ஊர்வலத்தில் எல்லாவரும் ஏதோ ஒரு ஆயுதத்தால் தன் உடம்பை காயப்படுத்திக்கொண்டு நட்டந்து சென்றார்கள் இவை என்ன மூட நம்பிக்கைகள் இல்லையா?? தர்காவில் ஏதோ ஊதி ஒரு கூடு தருகிறார்கள் அது என்ன மூட நம்பிக்கைகள் இல்லையா?? அதில் ஏதாவது அறிவியல் பூர்வ காரணம் இருக்கா??&lt;br /&gt;&lt;br /&gt;9:35 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;மரைக்காயர் said... &lt;br /&gt;நல்ல கட்டுரை. நன்றி சுல்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;7:28 AM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;வருகைக்கு நன்றி சிவபாலன். படித்து விட்டும் வாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மரைக்காயர் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி வி த பீப்பிள். உங்களுக்கு பதிலோடே வருகிறேன். வீட்டில் நெட் கோளாறு. கொஞ்சம் பொறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2:38 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அரை பிளேடு said... &lt;br /&gt;சுல்தான்ஜி.&lt;br /&gt;ரொம்ப நல்ல கட்டுர..&lt;br /&gt;பாராட்டுக்கள்..&lt;br /&gt;நீங்க சொன்னா மாறி கடவுள்னு ஒருத்தர் கட்டாயம் கீறாரு..&lt;br /&gt;பாக்கறவங்களுக்கு பாக்கற விதத்துல தெரியரவரு அவரு...&lt;br /&gt;அவருக்கு உருவம் கிடயாதுன்னு நீங்க நினைச்சீங்கன்னா உருவம் இல்லாம வந்து அருள் தருவாரு..&lt;br /&gt;நம்பள மாதிரி மனுசபய வடிவத்தில இருப்பாருன்னு நினைச்சீங்கன்னா மனுசப்பய வடிவத்துள வந்து அருள் தருவாரு.. &lt;br /&gt;அதுதாம்பா கடவுளு... இப்படிதான் இருப்பாரு.. அப்பிடிதான் இருப்பாருன்னு நாம சொல்றமே... அந்த மாறி இல்லாம... எல்லா மாறியும் யாரால இருக்க முடியுமோ.. அவராலதான் கடவுளா இருக்க முடியும்...&lt;br /&gt;இன்னா ஒண்ணு அவரு நம்பள மாறியே இருப்பாரு.. நாம சாப்பிடற பலகாரத்தையேதான் சாப்புவாருன்னு நினைச்சு கும்புட சொல்ல நம்பளுக்கு அவரு மேல எக்ஸ்ட்ராவா அன்பு வருது...&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க சொல்ற மாதிரி கடவுள பகுத்து அறிஞ்சி எல்லாம் பாக்க கூடாது.. கடவுள்ன்றது ஒரு பீலிங்க்.. ரொம்ப பகுத்து அறிஞ்சிட்டோம்னு வச்சிக்குங்க மனுசன் மாதிரி இல்லாத ஒண்ண அவன், இவன்னோ.. அவர், இவர்னோ ஏன் சொல்லணும்.. அதுன்னுதானே சொல்லணும்னு தோணிடும்...&lt;br /&gt;&lt;br /&gt;உருவமாவும் அருவமாவும் உலகமெல்லாம் விரிஞ்சி பரந்து இருக்கிற அன்பு வடிவம்தான் கடவுள்... அன்பே சிவம், அன்பே அல்லா..&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கடவுள் கீறாரே அவரு எனக்குள்ளாற, உங்களுக்குள்ளாற... எல்லாருக்குள்ளாறயும் கீறாரு... இன்னா ஒண்ணு நாமதான் புரிஞ்சிக்க மாட்டங்கறோம்...&lt;br /&gt;நான் எல்லா சாமியயையும் கும்புடற மாறி அல்லாவாவும் அவர கும்டுக்கறன்...&lt;br /&gt;எஞ்சாமி எதாவது ஒரு ரூபத்துலய அரூபத்துலயோ வந்து என்ன காப்பாத்துனா சரி..&lt;br /&gt;எங்கியாவது தப்பா சொல்லி இருந்தன்னா மன்னிச்சிடுங்க.....&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல கட்டுரைய கொடுத்ததுக்காக தாங்ஸ் வச்சிக்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;3:58 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;நன்றி அரைபிளேடு. உங்கள் எண்ணத்தை மற்றவர்களை காயப்படுத்தாமல் சொல்லும்போது எதற்கு மன்னிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;//மனுசன் மாதிரி இல்லாத ஒண்ண அவன், இவன்னோ.. அவர், இவர்னோ ஏன் சொல்லணும்.. அதுன்னுதானே சொல்லணும்னு தோணிடும்...//&lt;br /&gt;&lt;br /&gt;தப்பில்லை. அவர், அவள், அவன், அது என்பதையெல்லாம் விஞ்சி இருப்பதுதான் இறைவன். நமக்குத் தெரிந்ததிலே, இருப்பதிலேயே உயர்தினையை எடுத்து ஒருவன் எனக் குறிக்கும் விதத்தில் நாம் பாவிக்கிறோம். என் பார்வையில் அவர், அவள், அவன், அது என்பதையெல்லாம் கடந்தவன்தான் இறைவன்.&lt;br /&gt;&lt;br /&gt;5:22 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;கோவி.கண்ணன் [GK] said... &lt;br /&gt;சுல்தான் ஐயா,&lt;br /&gt;&lt;br /&gt;நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஆனாலும் சில கேள்விகளுக்கு விடை கிடைப்பதே இல்லையே !&lt;br /&gt;&lt;br /&gt;1. சர்வ வல்லமை படைத்த இறைவன் தன்னை ஏன் உலக மாந்தர் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒரே கொள்கையை படைக்கவில்லை ?&lt;br /&gt;2. ஏழைகளாகவே பிறந்து ஏழைகளாகவே இறப்பவர்களை இறைவன் ஏன் படைத்தான் ?&lt;br /&gt;நான் முயற்சி அற்று முடங்கிக் கிடப்பவர்களைப் பற்றிச் சொல்ல்வில்லை. நமது பூமியில் உள்ள ஆப்ரிக்கா கண்டத்தில் அத்தகைய மனிதர்கள் பிறந்து மடிகிறார்கள். அவர்களுக்கு ஏன் இரக்கம் காட்டுவதே இல்லை ?&lt;br /&gt;3. உலக தொடர்பே இல்லாமல் காடுகளில் (அமேசான்) காட்டுவாசிகளாக திரியும் மனிதர்களுக்கென்று இறைவன் என்ன சொல்கிறான்? அவர்கள் எந்த துன்பமும் இன்றி வாழ்வதாக நான் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக ஆன்மிகம் பற்றி பேசுபவர்களிடம் கேட்கும் கேள்விகள் இவை. உங்களிடம் மட்டும் தான் கேட்கிறேன் என்று தவறாக எண்ணாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;5:27 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;Bun Butter Jam said... &lt;br /&gt;இஸ்லாமப் பத்தி இப்பிடி புட்டுபுட்டு வெச்சிட்டீங்க.மித்தவங்களும் அவிங்கவிங்க மதத்தைப்பத்தி இங்கே புட்டுபுட்டு வெச்சாங்கன்னா சோக்காருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தெகிரியமிண்டா கணவான்களே!&lt;br /&gt;&lt;br /&gt;5:54 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;Dear GK,&lt;br /&gt;உங்கள் கேள்விகளுக்கு நான் அறிந்த வகையில் கொண்ட விளக்கங்கள் இவை. &lt;br /&gt;&lt;br /&gt;//1.சர்வ வல்லமை படைத்த இறைவன் தன்னை ஏன் உலக மாந்தர் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒரே கொள்கையை படைக்கவில்லை?//&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் படைத்தது ஒரே கொள்கையைத்தான். வணங்கத் தகுதியானவனாகிய அந்த ஒரே இறையையே வணங்க வேண்டும் என்பதே அது. காலச் சுழற்சியில் அதைப் பின்பற்றுபவர்களாலேயே இப்போதிருக்கும் வண்ணம் வளைத்தொடிக்கப்பட்டது என்பது இஸ்லாமிய நம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;//2. ஏழைகளாகவே பிறந்து ஏழைகளாகவே இறப்பவர்களை இறைவன் ஏன் படைத்தான்?//&lt;br /&gt;&lt;br /&gt;சிலரை ஏழைகளாகவும் சிலரை வசதி படைத்தவர்களாயும் படைத்திருப்பது இரு பேரராரையும் சோதித்தறியத்தான். &lt;br /&gt;&lt;br /&gt;இல்லாதவன் பொறுமையைக்கொண்டும் இறைவணக்கத்தை கொண்டும் திருப்தி யடைந்தால் மறுமையில் கேள்விக் கணக்கின்றி சுவனம் புகுவான்..&lt;br /&gt;&lt;br /&gt;வசதி படைத்தவனுக்கு கொடுக்கப்பட்டது, இல்லாதவனுக்கும் கொடுத்து நன்மைகளை அதிகரித்துக் கொள்ளத்தான். செல்வந்தர்கள் மறுமையில் தனக்கு கொடுக்கப்பட்டவற்றுக்கு கணக்கு கொடுக்காமல் அவர்கள் கால்களை நகர்த்த முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலகில் இவ்வாறெல்லாம் துன்பப்பட்டு மறுமையில் எப்படி வாழ்ந்தால் என்ன? என்று நினைக்கத் தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வுலகமே மறுமைக்கான தயாரிப்புக் களம்தான். இவ்வுலகம் குறுகிய நூறாண்டுகள். மறுமையோ நிரந்தரமானது. &lt;br /&gt;&lt;br /&gt;இதை உங்கள் மனது ஏற்றுக் கொள்ளாவிட்டால் பரவாயில்லை. குர்ஆனை முழுதும் சுயமாகப் படித்துப் பாருங்கள். இறைவன் நாடினால் புரியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;//3. உலக தொடர்பே இல்லாமல் காடுகளில் (அமேசான்) காட்டுவாசிகளாக திரியும் மனிதர்களுக்கென்று இறைவன் என்ன சொல்கிறான்? அவர்கள் எந்த துன்பமும் இன்றி வாழ்வதாக நான் கருதுகிறேன்//&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாக் குழந்தைகளும் இயற்கை மதத்திலேயே பிறக்கின்றன. அக்குழந்தைகளுக்கு மதம் கொடுத்தவர்கள் அவர்களின் பெற்றோர்களே என்பது இஸ்லாமிய கோட்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;அமேசான் காட்டுவாசிகளுக்கும் 'இறைவன் ஒருவன். அவனே வணங்கத் தகுதியானவன்' என்ற உள்ளுணர்வு பிறக்கும்போதே பிறக்கும். இந்த இயற்கை மதத்திலேயே அவர்கள் இருந்து, இறந்தால், அவர்களும் சொர்க்கத்தின் சொந்தங்களே.&lt;br /&gt;&lt;br /&gt;//உங்களிடம் மட்டும் தான் கேட்கிறேன் என்று தவறாக எண்ணாதீர்கள்//&lt;br /&gt;இதிலே தவறாக எண்ண என்ன இருக்கிறது? எனக்குத் தெரிந்த மறுமொழிகள் கொடுத்திருக்கிறேன். ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் அவரவர் விருப்பத்திலுள்ளதுதானே..&lt;br /&gt;&lt;br /&gt;வி த பீப்பிள். நெட் சரியாகி விட்டது. இதோ பதிலோடு வருகிறேன். கொஞ்சம் பொறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;6:25 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;வருகைக்கு நன்றி Bun Butter Jam,&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்களுக்கு காயம் ஏற்படுத்தாத வகையில் நம் கருத்தை சொல்வத தவறில்லையென்று நம்புகிறேன்.&lt;br /&gt;நீங்கள் ஏதோ உள்குத்து வச்சு வம்பத் தூண்டலேண்ணு நினைக்கிறேன். Am I right?&lt;br /&gt;&lt;br /&gt;6:36 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;Anonymous said... &lt;br /&gt;எல்லாம் சரி, அதென்ன மனிதனை மனிதன் பிரித்து இனம் கான வசதியாக தாடி, சிலுவை, திருநீறு போன்ற விளங்குகள். ஒருவரோடு ஒருவர் இனைய தடையாக இருப்பத்ற்கு இந்த தோற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். இதுதான் நீங்கள் கூறும் பகுத்தறிவோ?&lt;br /&gt;&lt;br /&gt;-குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;6:44 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;SK said... &lt;br /&gt;அன்பு நண்பரே!&lt;br /&gt;&lt;br /&gt;//மனித வரலாற்றை தலைமுறை தலைமுறையாக ஆய்ந்தால் கடைசியில் ஒரு மனிதனில்தான் முடியும் என்பதில் ஐயமில்லை//&lt;br /&gt;&lt;br /&gt;இதுவே கேள்விக்குரியது.&lt;br /&gt;ஏன் ஒரே சமயத்தில் பல இடங்களில் மனிதர்கள் உருவாகியிருக்க முடியாது?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் இது போல பல வரிகளைக் குறிப்பிட்டு வாதாடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அதுவல்ல என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் , மற்றும் இங்கே கருத்திட்ட அனைவருமே இறைவன் என்ற ஒன்றைப் பற்றியே சொல்லியிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஆன்மீகம் என்பது இதுவல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணுக்குத் தெரியாத, நம்பலாமோ, கூடாதோ என்ற ஒன்றைத் தேடுவது அல்ல ஆன்மீகம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சில வரையறைகளைத் தன்னுள்ளே கொண்டு, அவற்றை மேலும் வளர்த்துக்கொள்ளும் முயற்சியே இது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைக் கொண்டால்தான், இறைவனைப் பற்றிய சந்தேகங்கள், கேள்விகளுக்கு விடை தேட முயலாமல், தன்னையே இறையென உணர முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழை, பணக்காரன், அமேஜான் காட்டு மனிதர்கள் பற்றிய கேள்வி ஒன்றைப் பார்த்தேன்!:))&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே குடும்பத்தில், ஒரே அப்பன், ஆயிக்குப் பிறந்த குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரி வளரவோ, படிக்கவோ, உயரவோ செய்கின்றனரா?&lt;br /&gt;&lt;br /&gt;இது ஏன் என சிந்திக்க ஆரம்பித்தால், பல கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பதிவு, ஒரு இஸ்லாமியர் என்ற முறையில் சஹ இஸ்லாமியர்களைப் பார்த்து எழுப்பிய கேள்விகளாகவே நான் பார்ப்பதால், அவர்கள் தாங்கள் எப்படியோ இம்மதத்தில் பிறந்ததன் காரணத்தை உணர ஆரம்பிக்கச் செய்யும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்து சொல்லி பாராட்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;:))&lt;br /&gt;&lt;br /&gt;7:18 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;நன்றி வி த பீப்பிள். &lt;br /&gt;//என் பகுத்தறிவு ஒரு கேள்வி கேட்க்கிறது! ஒரு இறைவன், ஒரு நேரத்தில் எப்படி கோடானகோடி மக்களை கவனித்துக்கொண்டே இருப்பான்!!!??//&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனையும் மனிதனாக பார்ப்பதால் இப்படித் தோன்றுகிறது.&lt;br /&gt;'இறைவனுடைய வல்லமையை, ஆற்றலை, மனித சக்திக்குள் முடிக்கக்கூடாது. இஸ்லாமிய அடிப்படையில் அவன் எதையாவது செய்ய நாடினால் 'ஆகு' என்ற ஒரே வார்த்தைக்குள் ஆக்கி விடுபவன்.' பூமியும் வானமும் அவனது ஒரே வார்த்தைக்குள் ஆகும் என்று நம்புபவர்களுக்கு அந்த நம்பிக்கையில் சிரமமிருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை மூட நம்பிக்கை என்று உங்கள் மனது சொன்னால்.....&lt;br /&gt;இறைவனது வல்லமையை அறிய குர்ஆனை சுயமாக படித்தறிய முயலுங்கள். அவன் நாடினால் உங்களுக்கும் புரியலாம் &lt;br /&gt;&lt;br /&gt;//எந்த பகுத்தறிவு சொல்லுது.//&lt;br /&gt;பகுத்தறிவு என்றாலே அய்யா பெரியார் ஞபாகம் வருவது தமிழ் மண் தரும் வாசனை. அடங்கி முதுகு வளைந்து கூனாகிப் போன தமிழனின் கூன் நிமிர்த்தி நேராக நிற்க வழி தந்த வெண்தாடி வேந்தரவர். நான் சொன்னது ஒவ்வொருவருக்கும் உள்ளேயுள்ள பகுத்தறியும் திறனை.&lt;br /&gt;&lt;br /&gt;//எங்களுக்கு பகுத்தறிவு சொல்லித்தந்தவர் கடவுள் இல்லைஃஅது கட்டுக்கதைன்னு சொல்லித்தந்தார். அப்ப அவர் தப்பா??//&lt;br /&gt;கடவுள் பெயரால் நடக்கும் மோசடிகளைப் பார்த்து மனம் வெறுத்ததால் வந்து விழுந்த வார்த்தைகள் அவை. என்னைப் பொறுத்தவரை அய்யா பெரியார் கடவுளுக்கு எதிரியல்ல. கடவுளின் பெயரால் நடைபெறும் பித்தலாட்டங்களுக்குத்தான் அவர் எதிரி. இல்லையென்றால் 'இன இழிவு ஒழிய இஸ்லாமே நன் மருந்து' எனச் சொல்வானேன்! &lt;br /&gt;&lt;br /&gt;//மொத்தத்தில் உங்கள் சுயநலமே இறையாக இருக்கவேண்டும்??!!! அவனுக்கு ஒன்றும் இருக்கக்கூடாது, அவன் உங்களுக்கு மட்டும் ஏதாவது செய்து கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். டூ மச் சா தெரியலை??//&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் சொல்கிறேன். கடவுள் மனிதன் போலவேயிருந்தால் கடவுளெதற்கு?&lt;br /&gt;அவன் அவ்வாறு கொடுத்துக் கொண்டேயிருப்பதால் அவனுக்கு துன்பமோ, சலிப்போ ஏற்படக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;டூ மச்சா தெரியவில்லை. ஏனென்றால் 'புவியிலுள்ளோர், முன் சென்றோர், மனித இனம், ஜின் இனம் ஆகிய அனைவரும் ஒரு சேர ஒன்று கூடி, ஒவ்வொருவரும் எதையாவது கேட்டு, அவையனைத்தையுமே அவன் கொடுத்து விட்டாலும், அவன் கஜானாவிலிருந்து எதுவம் குறைவதில்லை' என்பது இஸ்லாமிய நபி கற்றுத் தந்த அடிப்படைகளில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;படிக்க சலிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக இத்துடன் நிறுத்திக் கொண்டு மற்றவற்றுக்கும் பிறகு எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. உங்களைப் போன்ற கேள்வி இருப்பவர்களும் அறிந்து கொள்ளவும், என் சிந்தனை இவற்றை ஏன் ஏற்றது என்பதற்கான விளக்கமும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;7:30 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;வருகைக்கு நன்றி குமார். என் பதிவிலிருந்து எதையாவது கேளுங்கள். தெரிந்தால் பதில் சொல்கிறேன். நீங்கள் கேட்டவற்றுக்கு தனியாக ஒரு பதிவு இறைவன் நாடினால் வரும். அப்போது விவாதிக்கலாம். மன்னியுங்கள் குமார் &lt;br /&gt;&lt;br /&gt;எஸ்கே ஐயா வருக வருக.&lt;br /&gt;வரிகளுக்கிடையில் பேசினால் எனக்கு குழப்புமோ என்னவோ? இருந்தாலும் பதிலளிக்க முயற்சிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;//ஏன் ஒரே சமயத்தில் பல இடங்களில் மனிதர்கள் உருவாகியிருக்க முடியாது?//&lt;br /&gt;பகுத்தறிவுப்படி அப்படியும் இருக்கலாம். 'ஒரு மனிதர் - அவர் வழித்தோன்றல்கள்' என்பதில் மனிதர்களுக்கிடையே 'நாமெல்லாம் சகோதரர்கள்' என்ற நினைப்பில் வரும் ஒற்றுமை எனக்கு நன்றாக இருக்கிறதே. அதனால் அது எனக்கு சரியாகப் படுகிறது. அளவிலாக் கருணையுடைய இறைவன் மனிதர்களை அவ்வாறு பலர் வழித்தோன்றல்களாக ஆக்கி உயர்வு தாழ்வு கற்பிக்க ஏதுவாக்கி இருக்க மாட்டான் என்ற நம்பிக்கை ஐயா.&lt;br /&gt;&lt;br /&gt;//ஒரு சில வரையறைகளைத் தன்னுள்ளே கொண்டு, அவற்றை மேலும் வளர்த்துக்கொள்ளும் முயற்சி//&lt;br /&gt;&lt;br /&gt;சில வரையறைக்குள் இவ்வார்த்தைகள் ஏற்றுக் கொள்ளத் தக்கதே ஐயா.&lt;br /&gt;&lt;br /&gt;//கேள்விகளுக்கு விடை தேட முயலாமல்இ தன்னையே இறையென உணர முடியும்.//&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் என்ன முயன்றாலும் இறையாக முடியாதென்று நான் நம்புகிறேன். மனிதன் முயன்றால் நல்ல மனிதனாக, மனிதரில் புனிதராக - உயரலாம் (என்பதே என் நம்பிக்கை). அவ்வாறு உயர வேண்டுமென்பதுதான் இஸ்லாம் விரும்பும் மனிதம்.&lt;br /&gt;&lt;br /&gt;//உங்கள் பதிவு, ஒரு இஸ்லாமியர் என்ற முறையில் சஹ இஸ்லாமியர்களைப் பார்த்து எழுப்பிய கேள்விகளாகவே நான் பார்ப்பதால்//&lt;br /&gt;என் பதிவு சஹ மனிதர்களுக்காக எழுதப்பட்டது ஐயா. &lt;br /&gt;&lt;br /&gt;"குர்ஆனை நீங்களும் கருத்தூன்றிப் படித்தால் உங்கள் பார்வையில்... அது சரியாக இருந்தால் எல்லோருக்கும் சொல்லலாம். கைக்குக் கிடைத்த நல்வழியை தவற விட்டவர்கள் ஆக மாட்டோம். தவறென்றால் பத்தோடு பதினொன்றாக இன்னொரு புத்தகம் படித்து முடித்தீர்கள் அவ்வளவுதான்" என்று சொல்லத்தான் எழுதினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;//உங்கள் முயற்சிக்கு வாழ்த்து சொல்லி பாராட்டுகிறேன்.//&lt;br /&gt;உங்கள் வாழ்த்துகளும் பாராட்டுகளும் என்னை மென்மேலும் படிக்கவும் எழுதவும் தூண்டும். மிகவும் நன்றி ஐயா.&lt;br /&gt;&lt;br /&gt;8:06 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;SK said... &lt;br /&gt;இஸ்லாம் என எழுதியபின், அது சஹ மனிதர்களைக் குறித்து எழுதியதாக என்னல் உணர முடியவில்லை.&lt;br /&gt;ஒரு மத ப்ரசாரகமாகவே என்னால் பார்க்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்குத் தெரிந்த இஸ்லாத்தைச் சொல்லி இது மற்ற மதங்களிலும் காண்கிறேன் எனச் சொல்லியிருந்தால் ஒருவேளை நான் இப்படிச் சொல்லியிருக்க மாட்டேனோ என்னவோ?&lt;br /&gt;&lt;br /&gt;மதங்களை விட மானுடமே உயர்ந்தது என்பது என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சொன்னதால் நான் அவ்வாறு கூறலாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னிக்கவும்!&lt;br /&gt;&lt;br /&gt;8:56 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;Dear We the People,&lt;br /&gt;உங்கள் பாக்கி கேள்விகளில் சிலவற்றுக்கு பதில்கள். &lt;br /&gt;&lt;br /&gt;//அப்ப வண்முறையை கையாள்பவர்கள் இஸ்லாமிலிருந்து விலக்கிவைப்பீர்களா?? அப்ப பின் லேடன், தாலிபான்கள், என திவிரவாத்தை கையில் எடுத்தவர்களை என்ன செய்கிறீர்கள்??//&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்திலிருந்து விலக்கி வைக்க என்றெல்லாம் யாருக்கும் அதிகாரமில்லை நண்பரே. அவரவர் நன்மைகளுக்கேற்ப வெகுமதிகளைத் தரும் இறைவன், அவரவர் பாவங்களுக்கேற்ப தண்டணையும் தருவான் என்பதே உறுதியான இஸ்லாமிய நம்பிக்கை. &lt;br /&gt;&lt;br /&gt;//அப்ப ஷியா, சன்னி முஸ்லீமகள் என்று எப்படி வந்தது இரு பிரிவு, ஈராகில் அவர்கள் ஏன் சண்டையிட்டுக்கொள்கிறார்கள்?? அவர்களுக்குள் என்ன பிரச்சனை?? அதுவும் ஒரு ஏற்ற தாள்வாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். நீங்க?? அப்ப இஸ்லாமில்லும் உள்ளது ஏற்றத்தாள்வு, இங்கு ஜாதி, அங்கு பிரிவு?? சரியா//&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை சகோதரரே! இஸ்லாத்தை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குளறுபடிதான் ஷியாக்கள் எனும் பிரிவு. &lt;br /&gt;எந்த ஒரு கருத்தையும் புரிந்து கொள்வதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.&lt;br /&gt;ஒரு மனிதன் ஒரு முஸ்லீம் பெற்றோருக்கு பிறப்பதால் அவன் முஸ்லீமில்லை. முயற்சி செய்து, தெரிந்து, உண்மையென உணர்ந்து, ஏற்றுக் கொள்பவன்தான் முஸ்லீம். அதனால் குர்ஆனும் ஹதீஸூம் உங்கள் கைகளில் இருக்கிறது. நீங்களே படித்தறிந்து அல்லது இரு சாராரும் சொல்வதை கேட்டறிந்து கொள்ளலாம். தெளிந்த முடிவுக்கு வரலாம். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு நேரமில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. நிலையான மறுவாழ்வின் சுகம் வேண்டுமெனில் இஸ்லாத்தில் முயற்சி அவசியம். Islam is not by birth, but by choice. &lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கும் அதுதான். உங்களது உனக்கு என்னுடையது எனக்கு. மறுமையில் இறைவன் தீர்ப்பளிப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;//At a given point of time..............//&lt;br /&gt;பெண்கள் சுதந்திரம் பற்றி நீங்கள் கேட்டுள்ள கேள்விகள் தனிப் பதிவு போடுமளவுக்கு பெரியது. தனியான பதில் தருகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;//இது அனைத்து மததிலும் உள்ளதே!!! யாரும் உபயோக்காத சரக்கு. அதை விடுங்க. நம்மில் யார் இங்க பொய் சொல்லாதவங்க?//&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கட்டுமே!. இஸ்லாம் இவற்றை வலியுறுத்துகிறது. &lt;br /&gt;அவ்வாறு வாழ்ந்த ஒரு மாமனிதரை அடையாளங்காட்டி இவர் போல் நீயும் வாழ வேண்டும் என்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உபயோகிக்காத சரக்கு. ஆனால் உபயோகப்படுத்தவே முடியாத சரக்கல்ல. அதனால் உபயோகப்படுத்த வேண்டிய சரக்கென இஸ்லாம் அடையாளப் படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;//இதில் ஏதாவது ஒன்றையாவது எந்த மதமாவது பின்பற்றுகிறதா? மதத்தவனையே சகோதரனாக நினைக்காத மக்கள் தான் நாம் இன்று அதிகம் பார்க்கிறோம்//&lt;br /&gt;குறைந்த பட்சம் பள்ளி வாயில்களில் அன்றாடம் ஐந்து முறை பார்க்கக் கூடியது. இஸ்லாமியத் திருமண உறவுகளில் காணக்கிடைப்பது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்ப ஒருவன் இஸ்லாமில் சேர்கிறான் என்றால் அவரை எந்த பிரிவில் சேர்ப்பீர்கள்? ஷியாவிலா? சன்னியிலா??&lt;br /&gt;&lt;br /&gt;(யாராரோ யாராரிடமோ கேட்ட கேள்வியின் பிரதிபலிப்பாக இக்கேள்வி எனக்குத் தோன்றுகிறது. தவறாகவும் இருக்கலாம்.)&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தில் எந்தப் பிரிவிலும் யாரும் சேர்க்க வேண்டியதில்லை. ஒருவன் 'வணங்கத்தகுதியான இறைவன் ஒருவனே. முஹம்மது (சாந்தியும் சமாதானமும் அன்னார் மீது பொழிவதாகுக!) அந்த (வணங்கத்தகுதியான) இறைவனின் தூதர்' என்பதை மனதார நம்பி ஏற்று, வாயார மொழிந்தால் அவர் முஸ்லீம். அவர் படித்தறிந்து எந்த பிரிவிலும் ஆகலாம். ஏற்க மாட்டேன் என்று சொல்லும் உரிமையை யாருக்கும் இறைவன் கொடுக்கவில்லை. &lt;br /&gt;அது அவர் மனதும் இறையும் அறிந்த விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;//இஸ்லாமிலிருந்து ஒருவன் வேறு மதம் தழுவினால் மரண தண்டனை விதிக்கிறார்கள்//&lt;br /&gt;&lt;br /&gt;எங்கெங்கே யார் யாருக்கெல்லாம் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேறியுள்ளது என்ற பட்டியலைத் தந்தால், அவர்களிடமே கேட்டுச் சொல்கிறேன். (இறைவன் நாடினால்)&lt;br /&gt;&lt;br /&gt;//நான் ஒரு மாராடித்தான் நோம்பி என்ற ஒரு இஸ்லாமிய நோம்பு ஊர்வலத்தை பார்க்க நேர்ந்ததுஇ அந்த ஊர்வலத்தில் எல்லாவரும் ஏதோ ஒரு ஆயுதத்தால் தன் உடம்பை காயப்படுத்திக்கொண்டு நட்டந்து சென்றார்கள் இவை என்ன மூட நம்பிக்கைகள் இல்லையா?? தர்காவில் ஏதோ ஊதி ஒரு கூடு தருகிறார்கள் அது என்ன மூட நம்பிக்கைகள் இல்லையா?? அதில் ஏதாவது அறிவியல் பூர்வ காரணம் இருக்கா??//&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் சொல்லியுள்ள இரண்டுமே மூட நம்பிக்கைகள்தான். இஸ்லாத்துக்கும் இவற்றுக்கும் கடுகளவேனும் தொடர்பில்லை. முஸ்லீம் பெயர்தாங்கிகள் அறியாமையில் செய்யும் பகுத்தறிவற்ற தவறுகள் இவை தோழரே. உங்களோடு சேர்ந்து, இம்மூட நம்பிக்கைகளை எதிர்த்து, நானும் என் வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;9:14 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;//மதங்களை விட மானுடமே உயர்ந்தது என்பது என் கருத்து.//&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் கருத்து உயர்வானது ஐயா. &lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் மேல் நான் கொண்டிருக்கும் மரியாதைக்கும் அன்புக்கும் தங்களிடமிருந்த மன்னிப்பு என்ற வார்த்தை மிகப் பெரியது. மானுடத்தை உய்விப்பதில் எது சிறந்தது என சொல்ல வந்து ஏதும் அதிகப் பிரசங்கியாக நான் எழுதியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா.&lt;br /&gt;&lt;br /&gt;9:36 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;ஆரோக்கியம் kettavan said... &lt;br /&gt;வீ த பீப்பிள் என்பவர் இந்து மதத்தில் சேர்பவர்களை அய்ய்ராக சேர்த்துக் கொள்வாராமே. (முதலில் இவர் அய்யர் இல்லை என்றால் அய்யராகவோ அய்யங்காராகவோ முயற்சி செய்யட்டும்)&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல இந்து மதத்தில் சேர்ப்பதும் விலக்குவதும் அவர் நம்பும் சில பீடையாதிபதிகளிடம் உள்ளது போல் தான் நம்புகிறார் போல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ பெண்ணுரிமை வாதி போல பில்டப் கொடுக்கும் இவர் வரதட்சணைக்கு வக்காலத்து வாங்குவதில் முகமூடியைக் கிழித்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;திரு. சுல்தான் அய்யா,&lt;br /&gt;&lt;br /&gt;திசை திருப்பும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல. நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;9:50 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;SK said... &lt;br /&gt;//மானுடத்தை உய்விப்பதில் எது சிறந்தது என சொல்ல வந்து //&lt;br /&gt;&lt;br /&gt;சரியன இலக்கைத் தொட்டிருக்கிறீர்கள் நண்பரே!&lt;br /&gt;&lt;br /&gt;எது சிறந்தது எனச் சொல்லும் போதே மற்றதெல்லாம் தாழ்ந்தது எனும் பொருள் தானாககவே வருவதாலேயே நான் இதை ஏற்றுக்கொள்வதில் சிறிது தயக்கம் காட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதிகப்பிரசங்கியாக அல்ல", 'எனக்குத் தெரிந்த என்றொரு வழியை' எனச் சொல்லியிருந்தால் உங்கள் கருத்து இன்னும் உயர்வு பெற்றிருக்கும் என்பது என் எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது இது போல மற்ற மதங்களும் சொல்லியிருப்பதை ஒப்புவமை காட்டி, மதங்களில் தவறல்ல, மானுடம் உணர்வதிலும், புரிவதிலும் தான் தவறு என்பதை அனைவருக்கும் விளக்கியிருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல ஒரு கருத்தினைப் பகிர வைத்தமைக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;10:02 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;வஹ்ஹாபி said... &lt;br /&gt;விவாக ரத்து (தலாக்) மற்றும் பலதார மணம் குறித்த பதிவுகளைக் கீழ்க்காணும் பதிவர்கள் பதிந்துள்ளனர்:&lt;br /&gt;&lt;br /&gt;http://abumuhai.blogspot.com/2005/05/1.html&lt;br /&gt;&lt;br /&gt;http://suttuviral.blogspot.com/2005/11/blog-post.html&lt;br /&gt;&lt;br /&gt;http://irainesan.blogspot.com/2006/03/1.html&lt;br /&gt;&lt;br /&gt;10:26 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;மீண்டும் வருகைக்கு நன்றி எஸ்கே ஐயா.&lt;br /&gt;'மானுடத்தை உய்விப்பதில் எது சிறந்தது என சொல்ல வந்து' &lt;br /&gt;என்பதை &lt;br /&gt;'மானுடத்தை உய்விக்க வந்த மதத்தின் வேதத்தை படிக்கச் சொல்ல வந்து, எனக்குத் தெரிந்ததொரு வழியை'&lt;br /&gt;என்று திருத்தி வாசியுங்கள். அதுவே என் கருத்தும். தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஐயா.&lt;br /&gt;&lt;br /&gt;வருகைக்கு நன்றி ஆரோக்கியம் கெட்டவன். &lt;br /&gt;தனிப்பட்ட எவரையும் தாக்குதல் என் நோக்கமல்ல. &lt;br /&gt;என்னைத் தாக்கினால் திருப்பித் தாக்குவேனா மாட்டேனா என்பது வேறு விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;வருகைக்கும் சுட்டிகளுக்கும் நன்றி வஹ்ஹாபி.&lt;br /&gt;&lt;br /&gt;1:31 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் குமரன் said... &lt;br /&gt;எனக்கு இதில் சில பிரச்சனைகள் தான் உங்க பகுத்தறிவில எல்லா ஆண்களும் ஒரே ஆண் பெண்ணிடம் இருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஆராய்ச்சி அறிவின் மூலமாக Evolution சொல்வதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள். அது கூட சரி&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை நெறி என்பது சரி. அது காலத்துக்கு தகுந்த மாதிரி மாறுவது என்பதை உணர மாட்டேன் என்கிறீர்கள். அது கூட சரி&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இறைவன் அருளியது என்பதை கண்மூடித்தனமாக நம்புகிறீர்கள் பகுத்தறிவின் பெயரை சொல்லி அதுதான் உதைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2:14 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;வருகைக்கு நன்றி செந்தில் குமரன்.&lt;br /&gt;'Survival of Fittest' என்பது 'Jungle theory' என நான் ஏற்கிறேன் நண்பரே. ஏனெனில் மனிதன் ஆறறிவு படைத்தவன், உயர்திணையாக வாழப்பிறந்தவன் என நம்புபவன். &lt;br /&gt;&lt;br /&gt;//வாழ்க்கை நெறி என்பது சரி. அது காலத்துக்கு தகுந்த மாதிரி மாறுவது//&lt;br /&gt;எப்போது கடவுளை, முக்காலமும் உணர்ந்தவனாக நம்ப முடிகிறதோ அப்போதோ, அவன் உலகம் உள்ளவரை எக்காலத்துக்கும் பொருந்தும் புத்தகம் தர முடியும் என்றும் நம்ப முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கு நம்ப முடியவில்லையோ அவர்களது கடவுள் கொள்கையில் ஏதோ கோளாறு அல்லது அவர்கள் உண்மையில் நம்பாமல் வாயளவில் சொல்பவர்களாக நான் நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;//இறைவன் அருளியது என்பதை கண்மூடித்தனமாக நம்புகிறீர்கள் பகுத்தறிவின் பெயரை சொல்லி//&lt;br /&gt;அதற்குத்தான் உங்களையும் அந்த புத்தகத்தை சொந்தமாக கருத்தூன்றிப் படிக்கக் கேட்டுக் கொள்கிறேன் செந்தில் குமரன். அவ்வாறு படித்த பின் அது கண்மூடித்தனமானது என உங்களுக்கு தோன்றினால் உங்கள் கருத்தை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இறைவன் வேறு விதமாக நாடியிருந்தாலும் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2:57 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;Anonymous said... &lt;br /&gt;//எல்லாம் சரி, அதென்ன மனிதனை மனிதன் பிரித்து இனம் கான வசதியாக தாடி, சிலுவை, திருநீறு போன்ற விளங்குகள். ஒருவரோடு ஒருவர் இனைய தடையாக இருப்பத்ற்கு இந்த தோற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். இதுதான் நீங்கள் கூறும் பகுத்தறிவோ?//&lt;br /&gt;&lt;br /&gt;//வருகைக்கு நன்றி குமார். என் பதிவிலிருந்து எதையாவது கேளுங்கள். தெரிந்தால் பதில் சொல்கிறேன். நீங்கள் கேட்டவற்றுக்கு தனியாக ஒரு பதிவு இறைவன் நாடினால் வரும். அப்போது விவாதிக்கலாம். மன்னியுங்கள் குமார்.//&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் வைத்துள்ள தாடி, நீங்கள் முஸ்லீம் என்று மற்றவர்களிடம் அடையாளம் காட்டுவதற்காகவா? இல்லை மற்றவர்களிடம் இருந்து பிரித்துக்காட்டுவதற்காகவா?&lt;br /&gt;-குமார்&lt;br /&gt;&lt;br /&gt;3:20 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;நன்றி குமார். பதிவைப் பத்தி கேட்க ஏதுமில்லையா நண்பரே.&lt;br /&gt;இஸ்லாத்தில் தாடி வைக்க வேண்டுமென்று இறை கட்டளை உள்ளதால், இறைவனிடம் நன்மைகளை நாடி தாடி வைத்துள்ளேன். மற்றவர்களிடம் அடையாளம் காட்டுவதற்கோ பிரித்துக்காட்டுவதற்கோ இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;3:36 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;We The People said... &lt;br /&gt;//வீ த பீப்பிள் என்பவர் இந்து மதத்தில் சேர்பவர்களை அய்ய்ராக சேர்த்துக் கொள்வாராமே. (முதலில் இவர் அய்யர் இல்லை என்றால் அய்யராகவோ அய்யங்காராகவோ முயற்சி செய்யட்டும்)&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல இந்து மதத்தில் சேர்ப்பதும் விலக்குவதும் அவர் நம்பும் சில பீடையாதிபதிகளிடம் உள்ளது போல் தான் நம்புகிறார் போல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ பெண்ணுரிமை வாதி போல பில்டப் கொடுக்கும் இவர் வரதட்சணைக்கு வக்காலத்து வாங்குவதில் முகமூடியைக் கிழித்துக் கொண்டார்.//&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற பின்னூட்டங்களை போட்டு என்னை எந்த முத்திரை வேண்டுமானாலும் குத்தலாம்!! I dont care about it! &lt;br /&gt;&lt;br /&gt;எங்க மத்தில சாதி பிரிவு இருக்கு, ஏற்றத்தாழ்வு இருக்கு, எல்லா குப்பையும் இருக்கு, எங்க மதத்தில் இல்லாதது உங்க மதத்தில் இருக்குன்னு சொன்ன நீங்க, உங்க மதத்திலும் அது தான் நடக்குதுன்னு நான் அறிந்தவைகளை சொன்னா!!! உடனே என்னை முத்திரை குத்த துவங்கிவிட்டீர்கள், விடுங்க, இனி நான் எதையும் கேட்கவில்லை. உங்க இஷ்டத்துக்கு எதை வேண்டுமானாலும் எழுதுங்க. நான் எப்ப வரதட்டசனை குடுக்கறது சரி என்று?? நான் சொன்னது ரெண்டுமே தப்புன்னு தான்! &lt;br /&gt;&lt;br /&gt;//முதலில் இவர் அய்யர் இல்லை என்றால் அய்யராகவோ அய்யங்காராகவோ முயற்சி செய்யட்டும்//&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஐயர் ஆயிரு என்ன செய்யப்போறேன்!! என்ன யூஸ்!! நான் மனுஷனா தான் இருக்க ஆசைப்படறேன். எனக்கு ஜாதி தேவையில்லை. நான் அதை பார்ப்பதும் இல்லை... &lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு இஷ்டம் இல்லை என்றால் என் கேள்விகளையும் எடுத்துவிடுங்க. I dont mind too. நான் இனி இந்த பதிவில் பின்னூட்டமிட மாட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி :(((((&lt;br /&gt;&lt;br /&gt;4:47 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;அன்பின் வி த பீப்பிள்&lt;br /&gt;உங்களின் ஒரு கேள்வி பதிலளிக்கப்படாமல் இருக்கிறது.&lt;br /&gt;//ஒருவன் ஐந்து பெண்களை கல்யாணம் செய்வது சரியா?? மூன்று முறை தலாக் சொல்லிவிட்டால் திருமணமுறிவு சரியா? அப்போது பெண்ணுக்கு என்ன உரிமை இருக்கிறது!!! பெண்சொல்லவேண்டியதெ இல்லையா?? அவளுடைய கருந்து தேவையற்றது என்று என்று சொல்லுவது பெண்ணுரிமையை பேணி காப்பதா??//&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தில் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கும் ஒப்பந்தம். கற்பை பாதுகாத்துக் கொள்ளவும், சமூக அந்தஸ்து, ஆன்ம சுத்தி, கொள்கை உறுதி, பண்பு, அருள், கருணை. அமைதி பெற வேண்டி செய்யப்படுவதாகும். இறைவனது சட்டங்களுக்கு கட்டுப்பட்டு, இறையச்சத்தோடு இவ்வொப்பந்தம் செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மனைவியராக வைத்துக் கொள்ளும் வழக்கத்தை இஸ்லாம்தான் அறிமுகப்படுத்தியது என்பது தவறான வாதமாகும். ஒரு பெண்ணை மனைவி அந்தஸ்தில் வைத்துக் கொண்டு பல பெண்களோடு உறவு வைத்துக் கொள்ளும் பழக்கம் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. பற் பல கட்டுப்பாடுகளை விதித்து அதற்கு நான்கு என்ற வரம்பை இஸ்லாம் நிர்ணயித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண்ணைப் போலவே மற்றவர்களையும் போற்ற வேண்டும் என்பது அடிப்படை. உடல் வளமும் அதை எல்லா மனைவியருக்கும் சரியாகப் பகிர்ந்தளிப்பதும் முக்கியம். இதெல்லாம் எல்லோருக்கும் சாத்தியப்படுவதில்லை. சின்ன வீட்டை விட இதில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு உண்டு.&lt;br /&gt;இதனால்தான் முஸ்லீம்களில் அதிகமானோர் அனுமதியிருந்தும் ஒன்றுக்கு மேல் மனைவியோ (அல்லது சின்ன வீடோ) வைத்துக் கொள்வதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;குறைந்தது, &lt;br /&gt;விதி வசத்தால் சறுக்கிய பெண்கள், மானத்தோடு வாழ விரும்பியும், வாழ்விழந்து வீணாவதை விட, அவர்களை இரண்டாந்தாரமாக மணமுடித்துக் கொடுப்பது சிறந்துதானே!&lt;br /&gt;கைம்பெண்கள் வாழ்விழந்து விடுவதை விட, இரண்டாவது திருமணத்திலாவது ஒருவர் ஏற்றுக் கொள்வதால், அந்தப் பெண்ணுக்கும் அவர் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு உண்டல்லவா! (கைம்பெண்களை முதல் அவர் குழந்தைகளுடன் முதல் திருமணம்தான் செய்ய வேண்டும் என்பதெல்லாம் தற்போதைய சூழலில் இயலும் என்று நம்ப முடியாது.) &lt;br /&gt;இதற்காவது தேவையென்றாலும் ஒன்றுக்கு மேல் அனுமதி அவசியந்தானே!&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து பெண்கள் என்பது எல்லாம் ஓவர். இப்படியெல்லாம் இந்தியாவில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. &lt;br /&gt;மன்னர்களைப் போல், மனைவி ஒன்றுடன் அந்தப்புரத்தில் ஆயிரம் பெண்களிடம் உறவு வைத்துக் கொள்வதை விட, நான்கு பெண்களை கண்ணியமாக மணமுடித்து உரிய அந்தஸ்தை வழங்குவது சிறந்ததாக எனக்குத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தில் தலாக் விடும் உரிமை ஆண்களுக்கு இருப்பது போல் பெண்களுக்கும் இருக்கிறது. இஸ்லாமிய சட்ட திட்டங்கள் தெளிவாக தமிழிலுள்ளதால் இப்போதெல்லாம் குறைந்தது தமிழக முஸ்லீம்கள் பெண்களுக்குள்ள இவ்வுரிமையை பரவலாக அறிந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தலாக் விடும் வழிமுறையை கூறுகிறேன். இதை விட சிறந்த வழியை (இருந்தால்) நீங்கள் தெரிவியுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;1. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மன முறிவு ஏற்பட்டு அது விவாகரத்து என்ற ஆழம் போகும் அபாயத்தில், முதலில் இருவரும் மனம் விட்டு பேசுங்கள். இதில் சரியாகி விடும். &lt;br /&gt;2. அதிலும் குறையவில்லையா? அடுத்தது படுக்கையை பிரியுங்கள். இந்தத் தேவை பூர்த்தியாகாத போது, மனம், விட்டுக் கொடுக்கச் சொல்லும்.&lt;br /&gt;3. அப்போதும் சரியாகவில்லையா? ஆண் வீட்டாரிலிருந்து இருவருக்கும் நன்மையை நாடுகிற ஒருவரையும், அதே போல் பெண் வீட்டாரிலிருந்து ஒருவரையும் தேர்ந்தெடுத்து அவர்களிடம் நடுவராக இருந்து பேசி அவர்கள் மனக்குறையைத் தீர்த்து வாழ வையுங்கள்.&lt;br /&gt;இப்போதும் சரியாக வில்லையெனில் அது ஒட்டுவது கடினம். இருவரும் அன்போடு இயைந்து வாழத்தான் இல்லறம். மனக்கசப்பும், வெறுப்பும் உள்ள இல்லறத்தில் நல்லறம் தழைக்காது. அது விபரீதங்களைத்தான் ஏற்படுத்தும். &lt;br /&gt;4. இப்போதுதான் முதல் தலாக் விடுதல். இதன் அளவு மூன்று மாதங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;5. மூன்று மாத பிரிவு மனங்களிலே மாற்றம் விளைவித்து, மீண்டும் இருவரும் இணைந்து வாழ நினைத்தால், மணமுறிவு ஏற்படாது. அவர்கள் வாழ்க்கையைத் தொடரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;6. இம்மூன்று மாதங்களுக்குள் இவர்கள் மீண்டும் இணைந்து வாழ விருப்பமில்லையெனில் மணமுறிவு தானாக ஏற்பட்டு விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று மாதங்களுக்குள் மனமொத்து மீண்டும் இணைந்து வாழும் இவர்கள் வாழ்வில் இரண்டாம் முறையும் பிணக்கு ஏற்பட்டால் மீண்டும் மேலே சொல்லிய 1, 2, 3, இணக்க முறைகளைக் கையாள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதும் சரியாக வில்லையெனில் இரண்டாவது தலாக். &lt;br /&gt;அப்புறம் மேற்சொன்ன ஐந்து ஆறாவது பாயிண்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று மாதங்களுக்குள் இரண்டாம் தடவையாக மனமொத்து மீண்டும் இணைந்து வாழும் இவர்கள் வாழ்வில் மூன்றாம் முறையும் பிணக்கு ஏற்பட்டால் மீண்டும் மேலே சொல்லிய 1, 2, 3, இணக்க முறைகளைக் கையாள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதும் இயலவில்லையெனில் இது விளையாட்டல்ல. இது ஒவ்வா திருமணம். மூன்றாவது தலாக் சொல்லி நிரந்தரமாக பிரிய வேண்டியதுதான். இனி இவர்கள் சேர்ந்து வாழ முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இனியும் சேர்நது வாழ வாழ்க்கை ஒன்றும் விளையாட்டல்ல. இனி அவர்கள் வேறு திருமணம் செய்து அதிலும் அவர்களுக்கு பிணக்கு ஏற்பட்டு மேற்சொன்ன இதே முறைப்படி தலாக் விடப்பட்டு பின்னர் முதல் தம்பதிகள் சேர்ந்து வாழ முடியுமா. சாத்தியமற்றது. அசாதாரண சூழலென்றால் அனுமதியுள்ளது. அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் திருமண பந்தத்தை மிக விரைவில் பிரிக்க விரும்ப மாட்டார்கள். ஒரு முறைக்கு பலமுறை யோசித்துதான் முடிவெடுப்பர். (அவளுடைய கணவன் ஆண்மையற்றவனாக, நிரந்தர நோயுள்ளவனாக இருந்தால் வேறு வழியில்லாமல் போகும்.)&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அவர்களுக்கு திருமண பந்தம் ஏற்படுத்திய சங்கத்தில் மஹல்லாவில் (இடத்தில்) சென்று முறையிட்டால், ஏன் எதற்கு என்ற கேள்வியேதுமில்லாமல் மணவிலக்கு கொடுத்து விட்டார் என்று முடிவாகி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது அறிவுக்குப் பொருந்துகிறதா? பெண்களுக்கு கண்ணியம் தருகிறதா? இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக விபரங்களுக்கு வஹ்ஹாபி கொடுத்துள்ள சுட்டிகளையும் பார்வையிடுங்கள.&lt;br /&gt;&lt;br /&gt;மிகுதிக்கு மீண்டும் வருகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;6:00 PM   &lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சுல்தான் said... &lt;br /&gt;லொடுக்கு said....&lt;br /&gt;சுல்தான் பாய் கலக்குறீங்க!&lt;br /&gt;&lt;br /&gt;லொடுக்கு! &lt;br /&gt;உங்கள் கமெண்ட் எப்படியோ தவறி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;என் மனதிலுள்ளதை தெளிவாகச் சொல்வதாக நினைத்தேன்.&lt;br /&gt;ரொம்ப கலங்கலாகத் தெரியுதா நண்பரே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38581011-116869425713548810?l=islamicfold.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamicfold.blogspot.com/feeds/116869425713548810/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38581011&amp;postID=116869425713548810' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/116869425713548810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38581011/posts/default/116869425713548810'/><link rel='alternate' type='text/html' href='http://islamicfold.blogspot.com/2007/01/blog-post.html' title='பகுத்தறிவு தீர்ப்பளிக்கட்டும்'/><author><name>சுல்தான்</name><uri>http://www.blogger.com/profile/02533713155036746645</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://bp1.blogger.com/_9Y2isWBuYHw/RkwrDf92mFI/AAAAAAAAAC0/P_VNqlJkxVg/s320/22022006009.jpg&apos;'/></author><thr:total>15</thr:total></entry></feed>
